செவ்வாய், 12 மார்ச், 2013

61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்!!

ஆசை தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன் ஒருவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள டுசுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு இறக்கவேண்டும் என்று ஆசை கொண்டார்.

இதையடுத்து சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து திருமணமும் இப்போது நடந்து முடிந்துள்ளது. உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, முத்தமிட்டுக் கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ‘ஹெலனை திருமணம் செய்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்வேன்’ என்று தெரிவித்துள்ளான்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல