திங்கள், 18 மார்ச், 2013

கணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்

ஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து போனால் தான் அந்த குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதை விடுத்து இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டிருந்தால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து அதுவே விவாகரத்திற்கு வழிவகுக்கும். எனவே மனைவி எப்போதும் பொறுமையுடனும், கணவருக்கும் துணையாகவும் இருக்க வேண்டும்.

கணவரின் அன்பை பெற சிலவழிகள்

கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து வைத்திருப்பது முடிந்தவரை அவருக்கு பிடித்த விசயங்களை செய்யுங்கள்.

காலையில் கணவர் எழும்போதே சிரித்த முகத்துடன் அவர் எதிரே வந்து நில்லுங்கள். அந்த முகமும் சிரிப்பும் நாள் முழுவதும் அவர் மனதில் நின்று உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

செலவுக்குத் தரும் பணத்தை மிச்சம் பிடித்து..அவர்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது கொடுப்பது.

மற்றவர்கள் முன்னால் உங்கள் கணவரை புகழ்ந்து பேசுங்கள். நிறைகளை மட்டும் வெளிப்படுத்துங்கள். குறைகளை சொல்லாதீர்கள்.

வருமானத்திற்கேற்ப செலவு செய்வது. கணவர் வீட்டிலிருக்கும் போது.அவரைச்சுற்றி வளைய வருவது, எப்பொழும் சின்னதா தம்மை மேக்கப் செய்துகொள்வது, சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்துக்கொள்வது.

அலுவலகத்திலிருந்து கணவர் களைத்து வீடு திரும்பும்போது கதைவைத் திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனே திறந்தால், அவர் எப்போது வருவார் என்று நீங்கள் காத்திருப்பது போல் தோன்றும். கதவை உடனே திறந்தால் கணவர் - மனைவி இடையே காதல் வளரும்.

கணவரை எந்த கஸ்டமான சூழ்நிலையிலும் மட்டம் தட்டி பேசாதீர்கள் .முடிந்தவரை உங்களால் முடியும் என்று என்கரேஜ் பண்ணுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் கணவர் எப்போதும் உங்களையே சுற்றி வருவார். உங்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல