சனி, 23 மார்ச், 2013

இந்தியாவில் பிக்கு தாக்கப்பட்டதற்கு கண்டி தமிழ் வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இந்தியாவில் வைத்து தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டி தமிழ் வர்த்தகர்களுடன் இந்து அமைப்புக்கள் சேர்ந்து எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நேற்று (22.3.2013) காலை கண்டியில் நடத்தின.

மிக அமைதியாக கண்டி டொரிங்டன் சதுக்கத்தில் இடம்பெற்றது இவ்வெதிர்ப்பு ஆர்பாட்டம். சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலான பதாதைகளை தாங்கி நின்றனர். கண்டியில் உள்ள உதவி இந்தியத் தூதுவவராலயத்துக்குச் சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர் என்று தூதரக அதிகாரிகள் கூறியமையை அடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல