வியாழன், 18 ஏப்ரல், 2013

"ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!"

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு தற்போது 37 வயதாகிறது. இவர் தற்போது பொதுசேவையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் அபூர்வ புகைப்படங்கள் லண்டனில் அடுத்தமாதம் ஏலம் விடப்படுகிறது.

2001 ஆம் ஆண்டில் மேலாடையின்றி எடுத்த இவரது படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அவர் 25 வயதாகும் போது எடுக்கபட்டபடம்.

இந்தபடத்தில் அவரது முன்னாள் கணவர் பில்லிபாப்பின் உருவத்தை பச்சை குத்தி இருப்பது கூட தெரியுமாம். இந்த படத்தை டேவிட் லச்சபெல்லெ எனற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார்.

ஏஞ்சலினா ஜூலிக்கும் பில்லிபாப்பிற்கும் இடையேயான உறவு மூன்றாண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து பச்சைக் குத்தியிருந்த பில்லிபாப்பின் உருவத்தை அழித்துவிட்டார் ஏஞ்சலினா.
 இந்த படத்தைத் தவிர ஜூலி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆப்கன் போரில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி: பள்ளி தொடங்கினார் ஏஞ்சலினா ஜோலி

ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை ஏஞ்சலினா ஜோலி.
ஹாலிவுட்டின் 'கனவுக் கன்னி'யான நடிகை ஏஞ்சலினா ஜோலி(37), நடிப்பு தவிர, ஆடை மற்றும் நகைகள் வடிவமைப்பதையும் இவர் தொழிலாக செய்து வருகிறார்.

 'ஸ்டைல் ஆஃப் ஜோலி' என்ற பெயரில் உலகின் பிரபல கடைகளில் இவரது தயாரிப்புகள் பெரிய அளவில் விற்பனையாகின்றன.
 இந்த விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து, 'பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை ஏஞ்சலினா ஜோலி உருவாக்கியுள்ளார்.

நல்லெண்ணத்தூதர்:

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராகவும் உள்ள இவர், கடந்த ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு சென்றார். அங்கு உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண்களிடையே கண்ணீர் மல்க அவர் ஆற்றிய உரை அனைவரின் மனதையும் கவர்ந்தது.

பெண்கல்விக்காக:

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக பள்ளிக்கூடங்களை தொடங்க ஏஞ்சலினா ஜோலி முடிவெடுத்தார்.

பள்ளி திறப்பு:

முதல்கட்டமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அருகே பெண்கள் பள்ளி ஒன்றை அவர் திறந்துள்ளார். இந்த பள்ளியில் சுமார் 200 முதல் 300 பிள்ளைகள் படிக்க முடியும்.

விரைவில் கிளைகள்:

உலகின் பிற நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளில் தற்போது ஏஞ்சலினா ஜோலி மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல