திங்கள், 20 மே, 2013

இளம்பெண்ணை 14வது மனைவியாக்க துரத்தும் சுவாசிலாந்து மன்னர்!

லண்டன்: சுவாசிலாந்து நாட்டு மன்னர் 3வது மஸ்வதி என்னை தனது 14வது மனைவியாக்கத் துடிக்கிறார். எனக்கு புகலிடம் தர வேண்டும் என்றுகோரி இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளார் அந்த நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணான டின்ட்ஸ்வாலோ நகோபெனி.

22 வயதான இப்பெண்ணை, அவரது 15வது வயது முதலே மனைவியாக்க துடித்துக் கொண்டிருக்கிறாராம் சுவாசிலாந்து மன்னர். இந்த தொந்தரவு தாங்க முடியாமல்தான் தற்போது இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளார் நகோபெனி.

மன்னரின் விருப்பத்திற்கு தான் உடன்படாவிட்டால் தன்னைக் கைது செய்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள். எனவே என்னை சுவாசிலாந்துக்கு திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றும் அப்பெண் கோரியுள்ளார்.

மன்னர் மஸ்வதிக்கு அழகிய இளம்பெண்களை மணப்பது வாடிக்கை. நல்ல அழகான இளம்பெண்களை வரவழைத்து மேலாடை இல்லாமல் நடனம் ஆட வைத்து அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வாராம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல