தூத்துக்குடி: தூத்துக்குடியில் 85 வயதான பாட்டி ஒருவர் செங்கற்களை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் பட வைத்துள்ளது.
தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 85. இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனியாக வசித்த வரும் சரஸ்வதி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குதண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவரது உணவே செங்கல்தான். நொறுக்கு தீனியாக செங்கல்லை சாப்பிட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் இவரை செங்கல்பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். நாள்தோறும் 1 முதல் 3 வரையிலான செங்கல்களை அவர் விரும்பி சாப்பிடுகிறார். நாம் உணவு அருந்துவதை போல் அவர் பகல் முழுவதும் செங்கலை மென்று கொண்டே இருக்கிறார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
சிறுவயதில் செங்கலை சுவைக்கத் தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட துவங்கியுள்ளார். கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட துவங்கி விடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.
செங்கல் சாப்பிடுவது பற்றி பாட்டி கூறியதாவது:
திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோர் திட்டினர். திருமணத்திற்கு பின்னர் எனது கணவர் சத்தம் போட்டார். ஆனால் என்னால் விடமுடியவில்லை. பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. இது நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதியோர் பென்சன் வேண்டி போராடி வருகிறேன் வேதனையுடன் தெரிவித்தார்.
பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு அதிகாரிகள் ஆவண செய்வார்களா?
Thatstamil
தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது 85. இவரது கணவர் மாரியப்பன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது தனியாக வசித்த வரும் சரஸ்வதி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குதண்ணீர் பிடித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவரது உணவே செங்கல்தான். நொறுக்கு தீனியாக செங்கல்லை சாப்பிட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் இவரை செங்கல்பாட்டி என்றுதான் அழைக்கின்றனர். நாள்தோறும் 1 முதல் 3 வரையிலான செங்கல்களை அவர் விரும்பி சாப்பிடுகிறார். நாம் உணவு அருந்துவதை போல் அவர் பகல் முழுவதும் செங்கலை மென்று கொண்டே இருக்கிறார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
சிறுவயதில் செங்கலை சுவைக்கத் தொடங்கினார். அதன் சுவை பிடித்துப் போகவே சிறுது சிறிதாக செங்கல்லை சாப்பிட துவங்கியுள்ளார். கண்ணில் எங்கு செங்கல் பட்டாலும் எடுத்து சாப்பிட துவங்கி விடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் 85 வயதாகியும் என்னால் செங்கல்லை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.
செங்கல் சாப்பிடுவது பற்றி பாட்டி கூறியதாவது:
திருமணத்திற்கு முன்னர் எனது பெற்றோர் திட்டினர். திருமணத்திற்கு பின்னர் எனது கணவர் சத்தம் போட்டார். ஆனால் என்னால் விடமுடியவில்லை. பசி காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இதை நான் செய்யவில்லை. இது நிறைய செங்கல்லை சாப்பிட்டும் கூட எனது உடல் நிலை பாதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது முதியோர் பென்சன் வேண்டி போராடி வருகிறேன் வேதனையுடன் தெரிவித்தார்.
பாட்டிக்கு முதியோர் பென்சன் கிடைக்க அரசு அதிகாரிகள் ஆவண செய்வார்களா?
Thatstamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக