வியாழன், 20 ஜூன், 2013

இலங்கையில் இருக்கும் ஒரு தமிழர், கொடுத்த பதில் பதிவு

அண்மையில் லண்டன் ஓவல் மைதானத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள், கிரிகட் போட்டியை கண்டு கழிக்க வந்த இலங்கையர்களால் தாக்கப் பட்ட சம்பவம் குறித்து ஒரு தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டிருந்த செய்திக்குக் கீழே பல்வேறு கருத்துக்கள் பதியப் பட்டு இருந்தன.

வெளிநாட்டில் இருப்பவர்களால்தான் போராட்டமே நடக்கின்றது என்று சொல்லி வீம்பு பேசிய புலி ஆதரவாளர்கள் சிலருக்கு, “அப்படிப் போடு” என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் ஒரு தமிழர், கொடுத்த பதில் பதிவுகள், அப்பாவித் தமிழர்கள் அனைவரும் வாசித்து உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டியவை என்பதனால் அவற்றை உங்களுக்காக கீழே தருகின்றேன்.

மானம் கேட்ட தமிழினத் துரோகிகள், சம்மருக்கு பொழுது போகேலை எண்டதுக்காக, ஈழம் ஈழம் எண்டு சொல்லி, காலம் நேரம் தெரியாமல் கண்ட கண்ட இடத்திலை ஆர்ப்பாட்டம் பண்ணி கடசியிலை லண்டனிலும் சிங்களவண்ட கையாலை வாங்கிக் கட்டிக் கொண்டுதுகள்.

உங்களுக்கு ஈழம் தேவையெண்டால், இங்க வந்து இயக்கத்தை உருவாக்கி போராடுங்கள், இல்லாட்டில் பிரிட்டிஸ் அரசாங்கம் சும்மா தார காசை வாங்கிக் கொண்டு, கொழுப்பை குறைக்க ஜிம்முக்கு போங்கோ. ஆர்ப்பாட்டம் எண்டு சொல்லி சிங்களவனிட்டை இனியும் அடி வாங்காதைங்கோ.

குழப்படி செஞ்சு பிடிபட்டால் பிரிட்டிஸ் காரன் பிடிச்சு அனுப்பினால் இங்கதான் வந்து இறங்க வேண்டும், மறக்க வேணாம்.

அங்க நிண்டு ஈழம் ஈழம் எண்டு சத்தம் போடுற ஆட்கள் இங்க குடியிருக்க வருவியளோ? ஈழம் கிடைச்சாலும் வர மாட்டியள், பேந்து என்னத்துக்கு ஈழம் கேட்டு சிங்களவனிட்டை அடி வாங்குறியல்?

Maiuran Ar வெளிநாட்டுத் தமிழன் பணம் அனுப்ப்பெலஎண்டா போராட்டமே நடக்காது எண்டு மாத்திச் சொல்லாதே, போராட்டம் நடக்குரதைக் காட்டித்தான் நீயே வெளிநாட்டுக்கு போனநீ.

நாட்டுக்கு வர தேவையில்லாத உனக்கு, ஈழமென்ன, இலங்கையென்ன? பொத்திக்கொண்டு போடா.

நீங்கள் வேளிநாட்டுளை சிடிசன் எடுக்கவும் அசைலம் கேட்கவும், இங்க போராட்டத்தை நடக்க வச்சியள் . இங்க செத்தவனுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்கள்?

புலிகளுக்கு துரோகம் செய்துபோட்டு, கருணா பல்லாயிரம் போராளிகளோடை இயக்கத்தை விட்டு விலகிப் போன நேரத்திலை, இயக்கத்துக்கு தோள் கொடுத்து போராட வெளிநாட்டிலை இருந்து யாராவது வந்த நீங்களோ?

நீங்கள் காசு அனுப்பினது இங்க ஈழம் கிடைக்க வேண்டும் எண்டதுக்காக இல்லை, உங்களுக்கு அங்க அஸைலம் கிடைக்க வேண்டும் என்றுதான் காசு அனுப்பினநீங்கள்.

உங்களுக்கு ஈழம் தேவையில்லை, இலங்கையிலை இரத்தம் ஓடினால் போதும், உங்களுக்கு அசைலம் கிடைக்க வேண்டும். நீங்கள் சொல்லாட்டிலும் உள்ளுக்கை இருக்கீர நினைப்பு இதுதானே.

Maiuran Ar ஓம், நீர் என்னைப் போல சுயநலவாதி இல்லைத்தான்.

நானும் உம்மைப் போல சுயநல வாதி இல்லைத்தான்.

ஏனென்டால் எனக்கு யூரோப்பில அசைலம் கிடைக்க வேண்டும் என்றதுக்காக, காசை அனுப்பி அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளின் உயிர்களை நான் பலி கொடுக்கவில்லை.

சும்மா “காசு அனுப்பினோம் காசு அனுப்பினோம்” எண்டு எதோ உயிரைக் கொடுத்தது போல துள்ளிக் குதிச்சு கத்துறீர்.

மாசம் 1000 பவுன்ஸ் உழைச்சு, 1000 பவுன்சையும் போராட்டத்துக்கு குடுத்தீரோ?
950 பவுன்சை சொந்த செவிங்கிளை போட்டு சேர்த்து சொத்து சொத்தா வாங்கினீர்கள்.

வெறும் 50 பவுன்சை பிச்சை குடுக்குறது போல குடுத்துப் போட்டு இந்தக் கத்து கத்துரீர்கள். உங்களின் பொய்களை நம்பி அப்பவிகள் உயிரையே கொடுத்து, குடும்பத்தை அப்பா அம்மாவை, அந்தரிக்க விட்டுப் போட்டு போயிட்டுதுகள். நீங்கள் நல்ல வடிவா சொகுசா இருந்துகொண்டு, வாயைப் பாரு….. பொத்திக்கொண்டு போங்கடா.

சலசலப்பு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல