பொதுச் சட்டத்தின் கீழான விவாகரத்து விவாக குற்றங்களில் இருந்து விலகிச் செல்கின்றதா?

இலங்கை பல் இனம், மதங்களை கொண்டதொரு நாடு. இதனால் அவ்வினங்களுக்கும் மதங்களுக்கும் ஏற்ப விவாகம், விவாகரத்து என்பன நடைபெற வேண்டிய முறை பற்றி வெவ்வேறு சட்ட முறைகள் உள்ளன. உதாரணமாக இஸ்லாமிய மக்களின் விவாகமும், விவாகரத்தும் கண்டிய விவாக முறையில் இருந்தும் விவாகரத்து முறையிலிருந்தும் வேறுபடுவதைப் போல பொதுச் சட்டத்தின் கீழான விவாக முறையில் இருந்தும் விவாக ரத்து முறையில் இருந்தும் வேறுபடுகின்றது. இதனால் இலங்கையில் பல்வேறு சட்டங்கள் விவாகத்திற்கும் விவாகரத்துக்கும் அமுலில் உள்ளன. இன்று நாம் பார்க்கப் போவது கரைநாட்டுச் சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய விவாகரத்துப் பற்றியேயாகும்.
இஸ்லாமியச் சட்டமும் கண்டியச் சட்டமும் விவாகரத்துக்கான காரணங்களில் முக்கியமாகவும் அடிப்படையாகவும் கொள்வது திருமண முறிவையேயாகும். இதனை ஆங்கிலத்தில் “The Break Down of the Marriage” என்பர். ஆனால் பொதுச் சட்டமான உரோம டச்சுச் சட்டம் திருமணத்தவறை (Matri Monial Fault) அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இதற்கு அடிப்படையாக அமைந்தது என்னவெனில் விவாகமானது புனிதமானது என்றும் அதனைக் குலைக்க சிறு சிறு காரணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற வெளிநாட்டு கலாசாரத்தின் பின்னணியில் அது அமைந்திருப்பதாகும்.
இஸ்லாமிய சட்டம் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது. அதனைப் போல் கண்டியச்சட்டமும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற ஒப்பந்தத்தின்படி விவாகரத்து பெற இடமளிக்கிறது. ஆகவே கண்டியச் சட்டத்தின் கீழும் இஸ்லாமியச் சட்டத்தின் கீழும் இரு பகுதியாரின் விருப்பத்திற்கு இணங்க விவாகரத்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் உரோம டச்சுச் சட்டத்தின் கீழ் இரு பகுதியினரும் விவாகரத்துச் செய்ய வேண்டுமானால் தகுதியான நீதிமன்றம் ஒன்றில் திருமணத் தவறை நிரூபித்தே அதனைப் பெற வேண்டும். இதனால் சிலர் உரோம டச்சு சட்டத்தின் அடிப்படை கொள்கை இலங்கை போன்ற நாட்டுக்குப் பொருந்தாது என்றும் அதனால் விவாகரத்து பெற விரும்பும் ஒருவர் இலகுவான முறையில் அதனைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுவர். இது சம்பந்தமாக Report of the Commission on Marriage and Divorse என்ற sessional Paper No: 15 of 1959 ல் சில ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு உரோம டச்சு சட்டத்தின் கீழான பொது விவாக கட்டளைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. இதனை பலர் எதிர்த்தனர். இச்சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டால் குடும்பம் என்ற அலகு உறுதியாக அமையாது. துஷ்பிரயோகம் செய்ய இடமுண்டாகும் என்றும் குடும்பத்தை பேணிக் காக்க வேண்டுமென்ற உயரிய எண்ணம் கணவன் மனைவியரிடத்தில் இல்லாதொழிந்து போகும் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் மேற்படி கமிஷனின் அறிக்கை எடுபடாமல் போயிற்று. ஆகவே தற்போதைய நிலை என்னவெனில் விவாகத்தவறு அல்லது இன்னுமொரு சொல்லில் சொல்வதானால் நிவர்த்தி செய்யப்பட முடியாத திருமண முறிவு ஒன்றின் கீழேயே பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்வோர் கரை நாட்டுச் சிங்களவர், தமிழர் ஆகியோர் விவாகரத்தை பெற வேண்டும் என்பதாகும்.
விவாகரத்துக்கான காரணங்கள்
உரோம டச்சுச் சட்டத்தின் கீழ் விவாகரத்துக்கு இரண்டு காரணங்களேயுள்ளன. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல், பொருள் கோடல் அல்லது வியாக்கியானம் மூலம் மேலேயுள்ள இரண்டு காரணங்கள் காலவரையில் மூன்று காரணங்களாயின. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) முறை தவறிய பாலியல் நடவடிக்கைகள், ஆயுட்கால சிறைத்தண்டனை. நீண்ட காலம் பிரிவு என்பனவும் விவாகரத்துக்கான காரணங்களாக மாறின. மேலேயுள்ள மூன்றாவது காரணம் இலங்கையில் நடைமுறையில் இல்லை.
ஏனெனில் இலங்கையில் விவாகரத்தானது பாராளுமன்றத்தின் நியதிச் சட்டத்தின் கீழானது. ஆகவே அச்சட்டத்தில் உள்ள காரணங்களை தவிர வேறு காரணங்களை நீதிமன்றம் வியாக்கியானத்தின் மூலம் உட்புகுத்த முடியாது என்பதினாலாகும். மேற்படி பொது விவாகச் சட்டத்தின் கீழ் பின்வரும் மூன்று காரணங்களுக்காகவே இலங்கையில் விவாகரத்தை கோரலாம். அவை யாவன:
1) விவாகத்தின் பின்னர் சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) நிவர்த்திக்க முடியா ஆண்மைப் பலவீனம் விவாகத்தின் போது இருந்தது என்பதாகும். இனி மேற்படி காரணங்களை விரிவாக ஆராய்வோம்.
சோரம் போதல்
சோரம் போதல் என்பது தனது துணையில்லாத இன்னுமொருவருடன் விருப்பத்துடன் பாலியலில் ஈடுபடுவது. இது கல்யாணத்தின் பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். இதற்கு அடிப்படையானது என்னவெனில், சமூகத்தினதும் கலாசாரத்தினதும் நியமங்கள் இங்கு புறக்கணிக்கப்படுவதாகும். எமது சமுதாயம் சில பாரம்பரிய கலாசார பண்பாட்டை கொண்டது. இது எமது நாட்டுக்குள் மட்டுமல்ல, பிற நாட்டவர்களும் உதாரணமாக இந்தியாவில் வாழ்பவர்களும் இப்பண்பாட்டை கொண்டு வாழ்கின்றனர். கல் என்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்’’ என்று வாழ்கின்றனர். இதற்கு உச்சமாக அமைந்திருந்தது. ‘‘சதி’’ என்ற ஒரு முறையாகும். இது இந்தியாவில் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியையும் உடன்கட்டை ஏறுகின்ற வழக்கமாகும். மீண்டும் ஒருவனுடன் வாழ இடமில்லை என்பதே அதன் அடிப்படையாகும். இது இலங்கையில் இல்லாத போதும் இதன் அர்த்தத்தில் இலங்கைக் குடும்பங்களும் வாழுகின்றன என்று கூறலாம். அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் துணைவர் அல்லது துணைவி இருக்கும் போது அவனுக்கு அல்லது அவளுக்கு தெரியாமல் இன்னுமொருவருடன் பாலியல் உறவு வைப்பது சகிக்க முடியாதது என சமூகம் கருதுவதால் அதன் அடிப்படையில் விவாகரத்து பெற சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுவையான வினா என்னவெனில் ஒரு பால் புணர்ச்சி சோரம் போதல் என்ற குற்றத்திற்குள் வருகின்றதா? என்பதேயாகும். ஒரு பால் புணர்ச்சி என்பது பெண்ணும் பெண்ணும் பாலியலில் ஈடுபடுவது. இது லெஸ்பியன் என அழைக்கப்படும். மற்றைய ஆணும் ஆணும் பாலியலில் ஈடுபடுவது ஹோமோசெக்ஸ் என்று கூறலாம்.
விவாகமான ஆண்கள் பலர் மேற்படி புணர்ச்சியில் ஈடுபடுவதை கேள்விப்படுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் விவாகத்திற்கு முன்னர் இருந்தே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் விவாகத்தின் பின்னரும் அதனை தொடர்ந்து நடத்தினால் சோரம் போகுதல் என்ற பிரிவின் கீழ் அக்கணவனுக்கு எதிராக மனைவி விவாகரத்து கோரலாமா? என்பது வினாவாகும். இப்படியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால் நடைமுறையில் உள்ளன.
சோரம் போதலை எவ்வாறு நிரூபிக்க வேண்டும்
பல வழக்குகளில் இது ஆராயப்பட்டது. சட்டத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த வழக்குகளை வாசிப்பதற்காக அவற்றை தருகிறேன்.
குரே எதிர் அரசி- 54 NLR 409
Churchman vs Churchman 1945. Denning L.J.
Preston Jones vs Preston Jones 1951- AC 391
Jayasinghe vs Jeyasingha 55NLR 410
Dharmasena vs Navaratne 72 NLR 419. இவ்வழக்குகளை வாசித்தால் சோரம் போதலை நிரூபிப்பது எப்படியெனில் கிரிமினல் குற்றங்களை நிரூபிப்பது போல் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி சோரம் போதலை நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காணலாம்.
ஆனால் அலரம்மாள் எதிர் நடராசா 76 NLR 56 என்ற வழக்கில் மேலேயுள்ளதற்கு மாறான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விவாகத்தின் போது தனக்கு சிறு பராயத்தில் சித்த சுவாதீனம் இருந்தது என்பதை மனைவி மறைத்து தன்னை விவாகம் செய்ததாகவும், ஆகவே அவரை விலக்கிட விவாகரத்து வழங்குமாறும் கணவன் நிவர்த்திக்கப்பட முடியாத நோய் உள்ளவள் என்பதன் அடிப்படையில் விவாகரத்தை கோரி இருந்தான். இக்கோரிக்கையையேற்று நீதிமன்றம் அவரது விவாகம் செல்லுபடியாகாது எனத் தீர்த்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு மனைவி மேன்முறையீடு செய்த போது அவள் கூறியது என்னவெனில் வழக்காளி விவாகரத்து வழக்குகளை நிரூபிக்கும் போது எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்க வேண்டுமே ஒழிய ஏள் தகமையின்கீழ் அல்ல என்று கூறியிருந்தாள்.
"Plaintff should have proved his case beyond reasonable, Doubt and not on a balance of probabizitis"
என்றுகூறியிருந்தான். உயர்நீதிமன்றம் இதனை ஏற்காது பின்வருமாறு கூறியது.
விவாக குற்றங்களை நிரூபிப்பது வழக் குகளின் நிகழ்வுக்கு அமைய இருக்கும் என பிரபுக்கள் சபை Blyth vs Blyth என்ற வழக்கிலும் இலங்கை வழக்கான Jayasinghe vs Jayasinghe என்ற வழக்கிலும் நீதிமன்றங்கள் கூறியதை தாம் ஆமோதிப்பதாகவும் ஆகவே தொடர்ந்தும் விவாக குற்ற வழக்குகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று ம்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. ஆகவே இன்றைய நிலை என்னவெனில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டுமென்ற தேவைப்பாடு இல்லை. ஆனால் உறுதியான நிரூபணம் அவசியம் என்பதாகும். "Strict proof is Necessary, proof beyond Reasonable Doubt is not Required"
உறுதியான நிரூபணம் சாத்தியமா?
தற்கால உலகில் வைத்திய வசதிகளும் அறிவுரைகளும் இலவசமாக கிடைக்கின்றன. சனத்தொகை கட்டுப்பாட்டுக்கும் குடும்ப நலனுக்கும் அவசியமான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த உபதேசத்தை நன்கு அறிந்தவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது துணையல்லாத இன்னுமொருவருடன் சோரம் போனாலும் அதனை நிரூபிப்பது கஷ்டம். ஏனெனில் ஒரு பெண்ணின் உடல் கூறில் அவள் குழந்தை தரிக்காத காலத்தை கணித்து இன்னுமொருவருடன் பாலியலில் ஈடுபட்டாலும் அதனை நிரூபிக்க முடியாது.
அதேபோல் கணவனும் மனைவியும் சில தேவைகளுக்காக புனையாக கதை கூட்டி ஒரு விவாகரத்தை பெறவும் அதன் மூலம் இலாபம் பெறவும் முயற்சிக்கும் வழக்குகளில் அவன் சோரம் போனான் என நிரூபிப்பதும் கஷ்டம். இலங்கையில் ஒரு பிரபல்யமான வழக்கில் மனைவி ஒரு டாக்டரிடம் வைத்தியத்திற்கு சென்ற தினத்தன்று அந்த வைத்தியர் தகாத முறையில் அவளுடன் பாலியல் வைத்தார் என்றும் ஆகவே தனக்கு மான நஷ்டமாக பல லட்சம் தர வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதை நாம் இங்கு காட்டலாம்.
பெண் ஒருத்தி தான் இன்னுமொருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறுவதும் அவளது மேக நோய் தனக்கு ஏற்பட்டதாகவும் கூறுவதும் ஆன வழக்குகளில் நீதிமன்றங்கள் அவற்றை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்த்துள்ளன. ஆகவே இன்று விவாகரத்தின் காரணங்களில் ஒன்றான சோரம் போதல் என்பதை நிரூபிப்பது கஷ்டம் என்றும் நீதிமன்றங்கள் அதன் கீழ் விவாகரத்து வழங்குவதை ஏற்றுக்கொள்வதை குறைத்துள்ளன என்பதையும் நாம் காணலாம். இதனாற்றான் சட்டத்தரணிகள் சோரம் போதலின் கீழ் விவாகரத்தை குறைத்துள்ளனர் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே தற்போது விவாகரத்து வழக்குகள் பொதுச் சட்ட நிபந்தனைகளில் அல்லது காரணங்களில் ஒன்றான சோரம் போதலை பெரும்பாலும் கைவிட்டுள்ளன எனலாம். அதற்குப் பதிலாக விவாக முறிவையே காட்டி விவாகரத்தை கோருகின்றன. இனி பொதுக்கூடத்தின் இன்னுமொரு காரணமான வன்ம உறவறுத்தலை பார்ப்போம்.
வன்ம உறவு அறுத்தல்
விவாகரத்துக்கான இன்னுமொரு தேவை விவாக பந்தத்தை விட்டு விலகுவதாகும். இது வேண்டுமென்றும் திட்டவட்டமானதாகவும் இனி இவ்விவாக பந்தத்தில் இருப்பதில்லை இன்றும் கருதி தனது தாம்பத்திய வாழ்வில் நின்றும் பிரிவதாகும். சாதாரணமாக குடும்பத்தவர் மத்தியில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதும் அதன் காரணமாக கணவன் அல்லது மனைவி ஒருவரை விட்டுப் பிரிவதும் பின்னர் இணைவதும் நடைபெறுகின்றது என்பதை நாம் காண்கின்றோம். அதனை வன்ம உறவு அறுத்தல் என்பதற்குள் கொண்டு வர முடியாது. வன்ம உறவு அறுத்தல் என்பது இனி இக்குடும்பத்தில் வாழ்வதில்லை என திடமாகத்தீர்மானித்து வெளியேறுவதாகும். ஒரு குடும்பத்தலைவன் மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு இனிமேல் உன்னுடன் வாழப் போவதில்லை என்று கூறி விட்டு வெளியேறும் போது வெளி விறாந்தையில் அவர்களது செப்புக்குடம் இருப்பதைக் கண்டான். உடனே தனது மகளின் பெயரைக்கூறி இந்த செம்புக்குடத்தை எடுத்து உள்ளே வை என்று கூறி விட்டு வெளியேறினான். அப்போது அந்த மகள் தனது தாயிடம் அம்மா, அப்பா இனிவர மாட்டாரா? என்று கேட்டு அழ, தாய் மகளே பயப்பட வேண்டாம். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது குடத்தை எடுத்து வைக்கச் சொன்னதில் இருந்து இந்த குடும்பத்தின் நலனில் அவர் கரிசனையாக இருக்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? என்று தாய் சொன்னாள். அதன் படியே சில நாள் கழித்து பின்னர் தகப்பன் திரும்பி வந்தார். இது கற்பனையான சம்பவமாக இருந்தாலும் சாதாரண பிரிவிற்கும் வன்மமான பிரிவிற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுவதை இங்கு காணக் கூடியதாயிருக்கிறது.
சில்வா எதிர் மிசிநோனா, இராமலிங்கம் எதிர் இராம லிங்கம், குணவர்தன எதிர் விக்கிரமசிங்க ஆகிய வழக்குகளில் எடுத்துக்காட்டியது போல் உறவு அறுத்துச் செல்பவருக்கு மீண்டும் இணைய வாய்ப்பளித்தும் அவர் இணைய மறுக்கும் போதே இவ்வன்ம உறவு அறுத்தல் ஏற்படுகிறது. உரோம டச்சு சட்டத்தில் முதலில் குடும்பத்தில் சேருமாறு கட்டளையிடுமாறு கேட்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விவாகரத்து தருமாறு கேட்க வேண்டும். ஆனால் இலங்கையில் குடும்பத்தில் சேருமாறு கட்டளையிடுமாறு கேட்க சிவில் நடவடிக்கைச்சட்டத்தில் பிரிவுகள் இல்லை. நேரடியாகவே விவாகரத்தை கேட்கலாம். ஆனால் தற்போது குடும்ப ஆலோசகர் என்ற ஒருவர் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் இருக்கிறார். நீதிமன்றம் முதலில் அவரிடம் கணவன் மனைவி இருவரையும் அனுப்பி சமாதானப்படுத்துமாறும் வேண்டிய ஆலோசனைகளை கூறுவதும் நடைபெறுகிறது. இதன் மூலம் குடும்பத்தை இணைக்க முயற்சிக்கப்படுகிறது. இணைய மறுக்கும் பட்சத்திலேயே விவாகரத்தை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.
சாதாரணமாக வீட்டை விட்டு வெளியேறுதல்
குடும்ப சண்டை வந்ததும் மனைவி அல்லது கணவன் வீட்டை விட்டு வெளியேறி தாய், தகப்பன் வீட்டிற்கு அல்லது சகோதரர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு வெளியேறுவது வன்ம உறவு அறுத்தல் என்று கூற முடியாது. இதை சாட்டாக வைத்து பல கணவன்மார் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டாள் என்றும் எனவே தனக்கு விவாகரத்து பெற்றுத் தருமாறும் சட்டத்தரணியிடம் கணவன்மார் கேட்பதுண்டு. பலர் வழக்குகளை தாக்கல் செய்வதும் உண்டு. ஆனால் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்று விவாகரத்தை வழங்கமாட்டாது. ஏனெனில், வழக்கு ஒன்றுக்கு தேவையான வழக்கெழு காரணம் இங்கு இல்லையென்பதாலாகும். தீர்க்கப்பட்ட பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டவைகளில் ஒரு உதராணம் என்னவெனில், தாய்க்கு சுகவீனம் என்று கூறி மகள் தாய் வீட்டுக்கு சென்று தங்கியது தவறு என்று கூறி கணவன் வழக்கு தாக்கல் செய்தான். நீதிமன்றம் அவனுக்கு கூறியது என்னவெனில், பெற்று வளர்த்த தாய் நோயாய் இருக்கும் போது அவளது மகள் சென்று தாய்க்கு இறுதி உதவி செய்வது தவறா? என்று கேட்டு கணவனது வழக்கை தள்ளுபடி செய்தது. இன்னுமொரு வழக்கில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை மீண்டும் வீட்டிற்கு வந்து வாழுமாறு கேட்டு சந்தர்ப்பம் கொடுத்தாயா? என்று கேட்டு அதற்கு பதில் இல்லை என்று கிடைக்கவே கணவனின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்பது வீட்டை விட்டு வெளியேறுவதால் வந்து விடமாட்டாது. குடும்ப அலகை உடைக்க வேண்டும் என்ற இறுதி எண்ணத்துடன் வெளியேறி மீண்டும் இணைய மறுப்பதையே குறிக்கும். வெளியேறுதல் இறுதியானதாக இருக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறாமலே வன்ம உறவு நடைபெறலாம்
சில சந்தர்ப்பங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே வன்ம உறவு அறுத்தல் நடைபெறுவதுண்டு. யாழ்ப்பாண வழக்கொன்றில் ஆசிரியை ஒருவர் தனது கணவனுடன் தொடர்ச்சியாக சண்டை பிடிப்பது வழக்கம். இதற்கு காரணம் புருஷனார் ஒரு அப்பாவி மனிதராகும். அவரும் ஆசிரியராவார். மனைவியான ஆசிரியை தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்த இன்னுமொருவருடனேயே உணவும் மற்றும் தேவைகளையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தாள். இதனால் ஆசிரியர் அவள் மீது வழக்கை தாக்கல் செய்து விவகாரத்தை கோரிய போது தான் வீட்டிலேயே இருப்பதாகவும் வேறு எங்கும் செல்லவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்யும்படி கேட்டார்.
ஆனால் நீதிமன்றம் சகல விடயங்களையும் கேட்டறிந்து வன்ம உறவு அறுத்தலின் கீழ் ஆசிரியருக்கு விவகாரத்து வழங்கியது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்பதற்கு கணவன் மனைவியரில் யாராவது ஒருவர் தாம் வசிக்கும் மனையில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் சென்று வாழ வேண்டும் என்ற நியதியில்லை எனலாம். இதனை புனைவான வன்ம உறவு அறுத்தல் என்பர் Fulfort VS Fulfort என்ற தென் ஆபிரிக்க வழக்கிலும் ஆரியபாலா எதிர் ஆரியபாலா வழக்கிலும் இது நன்றாக ஆராயப்பட்டுள்ளது.
புனைவான வன்ம உறவறுத்தல் பற்றி Constructive Desertion
இலங்கையிலும் தென் ஆபிரிக்காவிலும் கொடூரமானது விவகாரத்துக்கு ஒரு காரணமாக கொள்ளப்படுவதில்லை. ஆனால் கணவனது அல்லது மனைவியினது நடத்தையைகொண்டு அங்கு வன்ம உறவு அறுத்தலுக்குத் தேவையான நிகழ்வுகள் உண்டா எனப் பார்ப்பதுணடு. உதாரணமாக ஒருவர் தனது மனைவியை தொடர்ந்தும் துன்புறுத்துவதும் அடிப்பதும் உதைப்பதுமாக இருந்தால் அங்கே நடப்பவைகளை புனைவான வன்ம உறவு அறுத்தலாக கொள்ளலாமா? என நீதிமன்றம் ஊகிக்கலாம். கொடூரமானது அதிகமாக சீதனம், புறங்காட்டி நடத்தல், மனைவியை கவனிக்காது விடுதல், நிபந்தனையான வார்த்தைகள், பெற்றோர்களை தகாத வார்த்தையால் திட்டுதல் போன்றவை புனைவான வன்ம உறவு அறுத்தலுக்கு அடிப்படையாக நீதிமன்றங்கள் கொள்கின்றன. விக்கிரம சூரிய எதிர் விக்கிரம சூர்ய வழக்கில் 68 NLR 155 இதனை காணலாம்.
பின்வருவனவற்றையும் புனைவான வன்ம உறவு அறுத்தலாக நீதிமன்றங்கள் கொண்டுள்ளன.
1. டீமெல் எதிர் டீமெல் 54 NLR என்ற வழக்கில் பொய்யாக தனது மனைவி வேறு ஒருவருடன் சோரம் போகிறாள் என்று பிரசாரம் செய்து அவளை வீட்டில் இருந்து வெளியேறச் செய்வது புனைவான வன்ம உறவறுத்தல் என கொள்ளப்பட்டது.
2. கணவனின் பாலியல் தொடர்புக்கு விருப்பமில்லாமை புனைவான வன்ம உறவறுத்தலாக கொள்ள முடியாது. ஆனால் மனைவி பாலியலுக்கு மறுப்பது புனைவான வன்ம உறவு அறுத்தலுக்குள் வரும் என்று விஜயரத்ன எதிர் விஜயரத்ன வழக்கில் 47 NLR 324 இல் தீர்க்கப்பட்டது.
3. அதிக மது போதை, கொடூரம் ஆகியவை புனைவான வன்ம உறவு அறுத்தல் எனக் கொள்ளப்படும்.
4. நீண்ட நாள் வீடு திரும்பாமல் இருப்பவர்களையும் புனைவான வன்ம உறுவு அறுத்தலுக்குள் கொண்டு வரலாம். ஆனால் சிறையில் இருப்பவர்கள் இதனுள் அடங்கார்.
ஆண்மை இன்மை
விவாகரத்துக்கு தேவையான இன்னுமொரு காரணம் ஆண்மையின்மையாகும். ஆண்மை இன்மை விவாகம் செய்யும் தினத்தில் இருந்திருக்க வேண்டும். மலடி என்பதும் மலடன் என்பதும் இதனுள் அடங்காது. தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவர்களாக இருக்க வேண்டும். இந்த ஆண்மை இன்மை அலரம்பாள் வழக்கின் தீர்ப்புப்படி உடலின் எந்த உறுப்பிலும் இருக்கலாம் எனக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பெண் பாலியலுக்கு தகுதியானவள், ஆனால் சிறுவயதில் இருந்து பித்துப் பிடித்தவள் மூளையிலேயே பழுது ஆயினும் அதனையும் ஆண்மை இன்மைக்குள் கொண்டுவரலாம் என நீதிமன்றம் கூறியது. ஆண்மை இன்மை பிரத்தியேக உறுப்பில் இருக்க வேண்டியதில்லை.
இன்றைய விவாகரத்து நிலை
மேலே கூறிய காரணங்களே விவாகரத்துக்கு காரணிகளாக அமையும் என சட்டம் கூறினாலும் நடைமுறையில் உள்ள விவாகரத்து வழக்குகளில் அக் காரணங்கள் பெரிதாக காட்டப்படுதில்லை. சிறு சண்டைகள், சீதனம் இன்மை, வெளிநாட்டில் உறவினருடன் சேர வேண்டும் என்பவை போன்ற காரணங்களை காட்டி பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. உண்மையான வழக்கெழுகாரணம் இருப்பதில்லை. குடும்ப வாழ்வை ஒரு முற்றுக்கு கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் இருப்பதில்லை. குடிப்பது வழக்கம். வீட்டைக் கவனிப்பதில்லை வேலைக்கு போவதில்லை என்பன போன்ற காரணங்களை காட்டியும் விவாகரத்துக்கள் பெறப்படுகின்றன. ஒரு தலைப்பட்ச தீர்ப்பின் மூலம் இவ்விவகாரத்து வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. ஒரு தலைப்பட்சமான தீர்ப்பில் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் நீதிமன்றத்திற்கு சரியாக நடைபெற்றது என்று காட்டுவதற்காக தேவையான தகவல்களை கொடுப்பது மூலம் விவாகரத்தை பெற்றுக் கொள்வதையும் நாம் இன்று காணக்கூடியதாயிருக்கிறது. இவற்றை நோக்கும் போது இன்று விவாகரத்து வழக்குகள் திருமணத்தவறு என்பதில் இருந்து விலகி திருமண முறிவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செல்கிறது எனலாம்.
சட்டத்தரணி கே.ஜி.ஜோன்

இலங்கை பல் இனம், மதங்களை கொண்டதொரு நாடு. இதனால் அவ்வினங்களுக்கும் மதங்களுக்கும் ஏற்ப விவாகம், விவாகரத்து என்பன நடைபெற வேண்டிய முறை பற்றி வெவ்வேறு சட்ட முறைகள் உள்ளன. உதாரணமாக இஸ்லாமிய மக்களின் விவாகமும், விவாகரத்தும் கண்டிய விவாக முறையில் இருந்தும் விவாகரத்து முறையிலிருந்தும் வேறுபடுவதைப் போல பொதுச் சட்டத்தின் கீழான விவாக முறையில் இருந்தும் விவாக ரத்து முறையில் இருந்தும் வேறுபடுகின்றது. இதனால் இலங்கையில் பல்வேறு சட்டங்கள் விவாகத்திற்கும் விவாகரத்துக்கும் அமுலில் உள்ளன. இன்று நாம் பார்க்கப் போவது கரைநாட்டுச் சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய விவாகரத்துப் பற்றியேயாகும்.
இஸ்லாமியச் சட்டமும் கண்டியச் சட்டமும் விவாகரத்துக்கான காரணங்களில் முக்கியமாகவும் அடிப்படையாகவும் கொள்வது திருமண முறிவையேயாகும். இதனை ஆங்கிலத்தில் “The Break Down of the Marriage” என்பர். ஆனால் பொதுச் சட்டமான உரோம டச்சுச் சட்டம் திருமணத்தவறை (Matri Monial Fault) அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இதற்கு அடிப்படையாக அமைந்தது என்னவெனில் விவாகமானது புனிதமானது என்றும் அதனைக் குலைக்க சிறு சிறு காரணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற வெளிநாட்டு கலாசாரத்தின் பின்னணியில் அது அமைந்திருப்பதாகும்.
இஸ்லாமிய சட்டம் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது. அதனைப் போல் கண்டியச்சட்டமும் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படுகின்ற ஒப்பந்தத்தின்படி விவாகரத்து பெற இடமளிக்கிறது. ஆகவே கண்டியச் சட்டத்தின் கீழும் இஸ்லாமியச் சட்டத்தின் கீழும் இரு பகுதியாரின் விருப்பத்திற்கு இணங்க விவாகரத்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் உரோம டச்சுச் சட்டத்தின் கீழ் இரு பகுதியினரும் விவாகரத்துச் செய்ய வேண்டுமானால் தகுதியான நீதிமன்றம் ஒன்றில் திருமணத் தவறை நிரூபித்தே அதனைப் பெற வேண்டும். இதனால் சிலர் உரோம டச்சு சட்டத்தின் அடிப்படை கொள்கை இலங்கை போன்ற நாட்டுக்குப் பொருந்தாது என்றும் அதனால் விவாகரத்து பெற விரும்பும் ஒருவர் இலகுவான முறையில் அதனைப் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுவர். இது சம்பந்தமாக Report of the Commission on Marriage and Divorse என்ற sessional Paper No: 15 of 1959 ல் சில ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு உரோம டச்சு சட்டத்தின் கீழான பொது விவாக கட்டளைச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டது. இதனை பலர் எதிர்த்தனர். இச்சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டால் குடும்பம் என்ற அலகு உறுதியாக அமையாது. துஷ்பிரயோகம் செய்ய இடமுண்டாகும் என்றும் குடும்பத்தை பேணிக் காக்க வேண்டுமென்ற உயரிய எண்ணம் கணவன் மனைவியரிடத்தில் இல்லாதொழிந்து போகும் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் மேற்படி கமிஷனின் அறிக்கை எடுபடாமல் போயிற்று. ஆகவே தற்போதைய நிலை என்னவெனில் விவாகத்தவறு அல்லது இன்னுமொரு சொல்லில் சொல்வதானால் நிவர்த்தி செய்யப்பட முடியாத திருமண முறிவு ஒன்றின் கீழேயே பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்வோர் கரை நாட்டுச் சிங்களவர், தமிழர் ஆகியோர் விவாகரத்தை பெற வேண்டும் என்பதாகும்.
விவாகரத்துக்கான காரணங்கள்
உரோம டச்சுச் சட்டத்தின் கீழ் விவாகரத்துக்கு இரண்டு காரணங்களேயுள்ளன. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல், பொருள் கோடல் அல்லது வியாக்கியானம் மூலம் மேலேயுள்ள இரண்டு காரணங்கள் காலவரையில் மூன்று காரணங்களாயின. 1) சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) முறை தவறிய பாலியல் நடவடிக்கைகள், ஆயுட்கால சிறைத்தண்டனை. நீண்ட காலம் பிரிவு என்பனவும் விவாகரத்துக்கான காரணங்களாக மாறின. மேலேயுள்ள மூன்றாவது காரணம் இலங்கையில் நடைமுறையில் இல்லை.
ஏனெனில் இலங்கையில் விவாகரத்தானது பாராளுமன்றத்தின் நியதிச் சட்டத்தின் கீழானது. ஆகவே அச்சட்டத்தில் உள்ள காரணங்களை தவிர வேறு காரணங்களை நீதிமன்றம் வியாக்கியானத்தின் மூலம் உட்புகுத்த முடியாது என்பதினாலாகும். மேற்படி பொது விவாகச் சட்டத்தின் கீழ் பின்வரும் மூன்று காரணங்களுக்காகவே இலங்கையில் விவாகரத்தை கோரலாம். அவை யாவன:
1) விவாகத்தின் பின்னர் சோரம் போதல் 2) வன்ம உறவு அறுத்தல் 3) நிவர்த்திக்க முடியா ஆண்மைப் பலவீனம் விவாகத்தின் போது இருந்தது என்பதாகும். இனி மேற்படி காரணங்களை விரிவாக ஆராய்வோம்.
சோரம் போதல்
சோரம் போதல் என்பது தனது துணையில்லாத இன்னுமொருவருடன் விருப்பத்துடன் பாலியலில் ஈடுபடுவது. இது கல்யாணத்தின் பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும். இதற்கு அடிப்படையானது என்னவெனில், சமூகத்தினதும் கலாசாரத்தினதும் நியமங்கள் இங்கு புறக்கணிக்கப்படுவதாகும். எமது சமுதாயம் சில பாரம்பரிய கலாசார பண்பாட்டை கொண்டது. இது எமது நாட்டுக்குள் மட்டுமல்ல, பிற நாட்டவர்களும் உதாரணமாக இந்தியாவில் வாழ்பவர்களும் இப்பண்பாட்டை கொண்டு வாழ்கின்றனர். கல் என்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன்’’ என்று வாழ்கின்றனர். இதற்கு உச்சமாக அமைந்திருந்தது. ‘‘சதி’’ என்ற ஒரு முறையாகும். இது இந்தியாவில் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியையும் உடன்கட்டை ஏறுகின்ற வழக்கமாகும். மீண்டும் ஒருவனுடன் வாழ இடமில்லை என்பதே அதன் அடிப்படையாகும். இது இலங்கையில் இல்லாத போதும் இதன் அர்த்தத்தில் இலங்கைக் குடும்பங்களும் வாழுகின்றன என்று கூறலாம். அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் துணைவர் அல்லது துணைவி இருக்கும் போது அவனுக்கு அல்லது அவளுக்கு தெரியாமல் இன்னுமொருவருடன் பாலியல் உறவு வைப்பது சகிக்க முடியாதது என சமூகம் கருதுவதால் அதன் அடிப்படையில் விவாகரத்து பெற சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுவையான வினா என்னவெனில் ஒரு பால் புணர்ச்சி சோரம் போதல் என்ற குற்றத்திற்குள் வருகின்றதா? என்பதேயாகும். ஒரு பால் புணர்ச்சி என்பது பெண்ணும் பெண்ணும் பாலியலில் ஈடுபடுவது. இது லெஸ்பியன் என அழைக்கப்படும். மற்றைய ஆணும் ஆணும் பாலியலில் ஈடுபடுவது ஹோமோசெக்ஸ் என்று கூறலாம்.
விவாகமான ஆண்கள் பலர் மேற்படி புணர்ச்சியில் ஈடுபடுவதை கேள்விப்படுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் விவாகத்திற்கு முன்னர் இருந்தே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் விவாகத்தின் பின்னரும் அதனை தொடர்ந்து நடத்தினால் சோரம் போகுதல் என்ற பிரிவின் கீழ் அக்கணவனுக்கு எதிராக மனைவி விவாகரத்து கோரலாமா? என்பது வினாவாகும். இப்படியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால் நடைமுறையில் உள்ளன.
சோரம் போதலை எவ்வாறு நிரூபிக்க வேண்டும்
பல வழக்குகளில் இது ஆராயப்பட்டது. சட்டத்துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த வழக்குகளை வாசிப்பதற்காக அவற்றை தருகிறேன்.
குரே எதிர் அரசி- 54 NLR 409
Churchman vs Churchman 1945. Denning L.J.
Preston Jones vs Preston Jones 1951- AC 391
Jayasinghe vs Jeyasingha 55NLR 410
Dharmasena vs Navaratne 72 NLR 419. இவ்வழக்குகளை வாசித்தால் சோரம் போதலை நிரூபிப்பது எப்படியெனில் கிரிமினல் குற்றங்களை நிரூபிப்பது போல் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி சோரம் போதலை நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை காணலாம்.
ஆனால் அலரம்மாள் எதிர் நடராசா 76 NLR 56 என்ற வழக்கில் மேலேயுள்ளதற்கு மாறான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விவாகத்தின் போது தனக்கு சிறு பராயத்தில் சித்த சுவாதீனம் இருந்தது என்பதை மனைவி மறைத்து தன்னை விவாகம் செய்ததாகவும், ஆகவே அவரை விலக்கிட விவாகரத்து வழங்குமாறும் கணவன் நிவர்த்திக்கப்பட முடியாத நோய் உள்ளவள் என்பதன் அடிப்படையில் விவாகரத்தை கோரி இருந்தான். இக்கோரிக்கையையேற்று நீதிமன்றம் அவரது விவாகம் செல்லுபடியாகாது எனத் தீர்த்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு மனைவி மேன்முறையீடு செய்த போது அவள் கூறியது என்னவெனில் வழக்காளி விவாகரத்து வழக்குகளை நிரூபிக்கும் போது எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபிக்க வேண்டுமே ஒழிய ஏள் தகமையின்கீழ் அல்ல என்று கூறியிருந்தாள்.
"Plaintff should have proved his case beyond reasonable, Doubt and not on a balance of probabizitis"
என்றுகூறியிருந்தான். உயர்நீதிமன்றம் இதனை ஏற்காது பின்வருமாறு கூறியது.
விவாக குற்றங்களை நிரூபிப்பது வழக் குகளின் நிகழ்வுக்கு அமைய இருக்கும் என பிரபுக்கள் சபை Blyth vs Blyth என்ற வழக்கிலும் இலங்கை வழக்கான Jayasinghe vs Jayasinghe என்ற வழக்கிலும் நீதிமன்றங்கள் கூறியதை தாம் ஆமோதிப்பதாகவும் ஆகவே தொடர்ந்தும் விவாக குற்ற வழக்குகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று ம்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. ஆகவே இன்றைய நிலை என்னவெனில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டுமென்ற தேவைப்பாடு இல்லை. ஆனால் உறுதியான நிரூபணம் அவசியம் என்பதாகும். "Strict proof is Necessary, proof beyond Reasonable Doubt is not Required"
உறுதியான நிரூபணம் சாத்தியமா?
தற்கால உலகில் வைத்திய வசதிகளும் அறிவுரைகளும் இலவசமாக கிடைக்கின்றன. சனத்தொகை கட்டுப்பாட்டுக்கும் குடும்ப நலனுக்கும் அவசியமான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த உபதேசத்தை நன்கு அறிந்தவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது துணையல்லாத இன்னுமொருவருடன் சோரம் போனாலும் அதனை நிரூபிப்பது கஷ்டம். ஏனெனில் ஒரு பெண்ணின் உடல் கூறில் அவள் குழந்தை தரிக்காத காலத்தை கணித்து இன்னுமொருவருடன் பாலியலில் ஈடுபட்டாலும் அதனை நிரூபிக்க முடியாது.
அதேபோல் கணவனும் மனைவியும் சில தேவைகளுக்காக புனையாக கதை கூட்டி ஒரு விவாகரத்தை பெறவும் அதன் மூலம் இலாபம் பெறவும் முயற்சிக்கும் வழக்குகளில் அவன் சோரம் போனான் என நிரூபிப்பதும் கஷ்டம். இலங்கையில் ஒரு பிரபல்யமான வழக்கில் மனைவி ஒரு டாக்டரிடம் வைத்தியத்திற்கு சென்ற தினத்தன்று அந்த வைத்தியர் தகாத முறையில் அவளுடன் பாலியல் வைத்தார் என்றும் ஆகவே தனக்கு மான நஷ்டமாக பல லட்சம் தர வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதை நாம் இங்கு காட்டலாம்.
பெண் ஒருத்தி தான் இன்னுமொருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறுவதும் அவளது மேக நோய் தனக்கு ஏற்பட்டதாகவும் கூறுவதும் ஆன வழக்குகளில் நீதிமன்றங்கள் அவற்றை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்த்துள்ளன. ஆகவே இன்று விவாகரத்தின் காரணங்களில் ஒன்றான சோரம் போதல் என்பதை நிரூபிப்பது கஷ்டம் என்றும் நீதிமன்றங்கள் அதன் கீழ் விவாகரத்து வழங்குவதை ஏற்றுக்கொள்வதை குறைத்துள்ளன என்பதையும் நாம் காணலாம். இதனாற்றான் சட்டத்தரணிகள் சோரம் போதலின் கீழ் விவாகரத்தை குறைத்துள்ளனர் என்று கொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே தற்போது விவாகரத்து வழக்குகள் பொதுச் சட்ட நிபந்தனைகளில் அல்லது காரணங்களில் ஒன்றான சோரம் போதலை பெரும்பாலும் கைவிட்டுள்ளன எனலாம். அதற்குப் பதிலாக விவாக முறிவையே காட்டி விவாகரத்தை கோருகின்றன. இனி பொதுக்கூடத்தின் இன்னுமொரு காரணமான வன்ம உறவறுத்தலை பார்ப்போம்.
வன்ம உறவு அறுத்தல்
விவாகரத்துக்கான இன்னுமொரு தேவை விவாக பந்தத்தை விட்டு விலகுவதாகும். இது வேண்டுமென்றும் திட்டவட்டமானதாகவும் இனி இவ்விவாக பந்தத்தில் இருப்பதில்லை இன்றும் கருதி தனது தாம்பத்திய வாழ்வில் நின்றும் பிரிவதாகும். சாதாரணமாக குடும்பத்தவர் மத்தியில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதும் அதன் காரணமாக கணவன் அல்லது மனைவி ஒருவரை விட்டுப் பிரிவதும் பின்னர் இணைவதும் நடைபெறுகின்றது என்பதை நாம் காண்கின்றோம். அதனை வன்ம உறவு அறுத்தல் என்பதற்குள் கொண்டு வர முடியாது. வன்ம உறவு அறுத்தல் என்பது இனி இக்குடும்பத்தில் வாழ்வதில்லை என திடமாகத்தீர்மானித்து வெளியேறுவதாகும். ஒரு குடும்பத்தலைவன் மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு இனிமேல் உன்னுடன் வாழப் போவதில்லை என்று கூறி விட்டு வெளியேறும் போது வெளி விறாந்தையில் அவர்களது செப்புக்குடம் இருப்பதைக் கண்டான். உடனே தனது மகளின் பெயரைக்கூறி இந்த செம்புக்குடத்தை எடுத்து உள்ளே வை என்று கூறி விட்டு வெளியேறினான். அப்போது அந்த மகள் தனது தாயிடம் அம்மா, அப்பா இனிவர மாட்டாரா? என்று கேட்டு அழ, தாய் மகளே பயப்பட வேண்டாம். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது குடத்தை எடுத்து வைக்கச் சொன்னதில் இருந்து இந்த குடும்பத்தின் நலனில் அவர் கரிசனையாக இருக்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லையா? என்று தாய் சொன்னாள். அதன் படியே சில நாள் கழித்து பின்னர் தகப்பன் திரும்பி வந்தார். இது கற்பனையான சம்பவமாக இருந்தாலும் சாதாரண பிரிவிற்கும் வன்மமான பிரிவிற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுவதை இங்கு காணக் கூடியதாயிருக்கிறது.
சில்வா எதிர் மிசிநோனா, இராமலிங்கம் எதிர் இராம லிங்கம், குணவர்தன எதிர் விக்கிரமசிங்க ஆகிய வழக்குகளில் எடுத்துக்காட்டியது போல் உறவு அறுத்துச் செல்பவருக்கு மீண்டும் இணைய வாய்ப்பளித்தும் அவர் இணைய மறுக்கும் போதே இவ்வன்ம உறவு அறுத்தல் ஏற்படுகிறது. உரோம டச்சு சட்டத்தில் முதலில் குடும்பத்தில் சேருமாறு கட்டளையிடுமாறு கேட்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விவாகரத்து தருமாறு கேட்க வேண்டும். ஆனால் இலங்கையில் குடும்பத்தில் சேருமாறு கட்டளையிடுமாறு கேட்க சிவில் நடவடிக்கைச்சட்டத்தில் பிரிவுகள் இல்லை. நேரடியாகவே விவாகரத்தை கேட்கலாம். ஆனால் தற்போது குடும்ப ஆலோசகர் என்ற ஒருவர் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் இருக்கிறார். நீதிமன்றம் முதலில் அவரிடம் கணவன் மனைவி இருவரையும் அனுப்பி சமாதானப்படுத்துமாறும் வேண்டிய ஆலோசனைகளை கூறுவதும் நடைபெறுகிறது. இதன் மூலம் குடும்பத்தை இணைக்க முயற்சிக்கப்படுகிறது. இணைய மறுக்கும் பட்சத்திலேயே விவாகரத்தை விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்குகிறது.
சாதாரணமாக வீட்டை விட்டு வெளியேறுதல்
குடும்ப சண்டை வந்ததும் மனைவி அல்லது கணவன் வீட்டை விட்டு வெளியேறி தாய், தகப்பன் வீட்டிற்கு அல்லது சகோதரர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு வெளியேறுவது வன்ம உறவு அறுத்தல் என்று கூற முடியாது. இதை சாட்டாக வைத்து பல கணவன்மார் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டாள் என்றும் எனவே தனக்கு விவாகரத்து பெற்றுத் தருமாறும் சட்டத்தரணியிடம் கணவன்மார் கேட்பதுண்டு. பலர் வழக்குகளை தாக்கல் செய்வதும் உண்டு. ஆனால் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்று விவாகரத்தை வழங்கமாட்டாது. ஏனெனில், வழக்கு ஒன்றுக்கு தேவையான வழக்கெழு காரணம் இங்கு இல்லையென்பதாலாகும். தீர்க்கப்பட்ட பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டவைகளில் ஒரு உதராணம் என்னவெனில், தாய்க்கு சுகவீனம் என்று கூறி மகள் தாய் வீட்டுக்கு சென்று தங்கியது தவறு என்று கூறி கணவன் வழக்கு தாக்கல் செய்தான். நீதிமன்றம் அவனுக்கு கூறியது என்னவெனில், பெற்று வளர்த்த தாய் நோயாய் இருக்கும் போது அவளது மகள் சென்று தாய்க்கு இறுதி உதவி செய்வது தவறா? என்று கேட்டு கணவனது வழக்கை தள்ளுபடி செய்தது. இன்னுமொரு வழக்கில் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை மீண்டும் வீட்டிற்கு வந்து வாழுமாறு கேட்டு சந்தர்ப்பம் கொடுத்தாயா? என்று கேட்டு அதற்கு பதில் இல்லை என்று கிடைக்கவே கணவனின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்பது வீட்டை விட்டு வெளியேறுவதால் வந்து விடமாட்டாது. குடும்ப அலகை உடைக்க வேண்டும் என்ற இறுதி எண்ணத்துடன் வெளியேறி மீண்டும் இணைய மறுப்பதையே குறிக்கும். வெளியேறுதல் இறுதியானதாக இருக்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியேறாமலே வன்ம உறவு நடைபெறலாம்
சில சந்தர்ப்பங்களில் ஒரு வீட்டிற்குள்ளேயே வன்ம உறவு அறுத்தல் நடைபெறுவதுண்டு. யாழ்ப்பாண வழக்கொன்றில் ஆசிரியை ஒருவர் தனது கணவனுடன் தொடர்ச்சியாக சண்டை பிடிப்பது வழக்கம். இதற்கு காரணம் புருஷனார் ஒரு அப்பாவி மனிதராகும். அவரும் ஆசிரியராவார். மனைவியான ஆசிரியை தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்த இன்னுமொருவருடனேயே உணவும் மற்றும் தேவைகளையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தாள். இதனால் ஆசிரியர் அவள் மீது வழக்கை தாக்கல் செய்து விவகாரத்தை கோரிய போது தான் வீட்டிலேயே இருப்பதாகவும் வேறு எங்கும் செல்லவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்யும்படி கேட்டார்.
ஆனால் நீதிமன்றம் சகல விடயங்களையும் கேட்டறிந்து வன்ம உறவு அறுத்தலின் கீழ் ஆசிரியருக்கு விவகாரத்து வழங்கியது. ஆகவே வன்ம உறவு அறுத்தல் என்பதற்கு கணவன் மனைவியரில் யாராவது ஒருவர் தாம் வசிக்கும் மனையில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் சென்று வாழ வேண்டும் என்ற நியதியில்லை எனலாம். இதனை புனைவான வன்ம உறவு அறுத்தல் என்பர் Fulfort VS Fulfort என்ற தென் ஆபிரிக்க வழக்கிலும் ஆரியபாலா எதிர் ஆரியபாலா வழக்கிலும் இது நன்றாக ஆராயப்பட்டுள்ளது.
புனைவான வன்ம உறவறுத்தல் பற்றி Constructive Desertion
இலங்கையிலும் தென் ஆபிரிக்காவிலும் கொடூரமானது விவகாரத்துக்கு ஒரு காரணமாக கொள்ளப்படுவதில்லை. ஆனால் கணவனது அல்லது மனைவியினது நடத்தையைகொண்டு அங்கு வன்ம உறவு அறுத்தலுக்குத் தேவையான நிகழ்வுகள் உண்டா எனப் பார்ப்பதுணடு. உதாரணமாக ஒருவர் தனது மனைவியை தொடர்ந்தும் துன்புறுத்துவதும் அடிப்பதும் உதைப்பதுமாக இருந்தால் அங்கே நடப்பவைகளை புனைவான வன்ம உறவு அறுத்தலாக கொள்ளலாமா? என நீதிமன்றம் ஊகிக்கலாம். கொடூரமானது அதிகமாக சீதனம், புறங்காட்டி நடத்தல், மனைவியை கவனிக்காது விடுதல், நிபந்தனையான வார்த்தைகள், பெற்றோர்களை தகாத வார்த்தையால் திட்டுதல் போன்றவை புனைவான வன்ம உறவு அறுத்தலுக்கு அடிப்படையாக நீதிமன்றங்கள் கொள்கின்றன. விக்கிரம சூரிய எதிர் விக்கிரம சூர்ய வழக்கில் 68 NLR 155 இதனை காணலாம்.
பின்வருவனவற்றையும் புனைவான வன்ம உறவு அறுத்தலாக நீதிமன்றங்கள் கொண்டுள்ளன.
1. டீமெல் எதிர் டீமெல் 54 NLR என்ற வழக்கில் பொய்யாக தனது மனைவி வேறு ஒருவருடன் சோரம் போகிறாள் என்று பிரசாரம் செய்து அவளை வீட்டில் இருந்து வெளியேறச் செய்வது புனைவான வன்ம உறவறுத்தல் என கொள்ளப்பட்டது.
2. கணவனின் பாலியல் தொடர்புக்கு விருப்பமில்லாமை புனைவான வன்ம உறவறுத்தலாக கொள்ள முடியாது. ஆனால் மனைவி பாலியலுக்கு மறுப்பது புனைவான வன்ம உறவு அறுத்தலுக்குள் வரும் என்று விஜயரத்ன எதிர் விஜயரத்ன வழக்கில் 47 NLR 324 இல் தீர்க்கப்பட்டது.
3. அதிக மது போதை, கொடூரம் ஆகியவை புனைவான வன்ம உறவு அறுத்தல் எனக் கொள்ளப்படும்.
4. நீண்ட நாள் வீடு திரும்பாமல் இருப்பவர்களையும் புனைவான வன்ம உறுவு அறுத்தலுக்குள் கொண்டு வரலாம். ஆனால் சிறையில் இருப்பவர்கள் இதனுள் அடங்கார்.
ஆண்மை இன்மை
விவாகரத்துக்கு தேவையான இன்னுமொரு காரணம் ஆண்மையின்மையாகும். ஆண்மை இன்மை விவாகம் செய்யும் தினத்தில் இருந்திருக்க வேண்டும். மலடி என்பதும் மலடன் என்பதும் இதனுள் அடங்காது. தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவர்களாக இருக்க வேண்டும். இந்த ஆண்மை இன்மை அலரம்பாள் வழக்கின் தீர்ப்புப்படி உடலின் எந்த உறுப்பிலும் இருக்கலாம் எனக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் பெண் பாலியலுக்கு தகுதியானவள், ஆனால் சிறுவயதில் இருந்து பித்துப் பிடித்தவள் மூளையிலேயே பழுது ஆயினும் அதனையும் ஆண்மை இன்மைக்குள் கொண்டுவரலாம் என நீதிமன்றம் கூறியது. ஆண்மை இன்மை பிரத்தியேக உறுப்பில் இருக்க வேண்டியதில்லை.
இன்றைய விவாகரத்து நிலை
மேலே கூறிய காரணங்களே விவாகரத்துக்கு காரணிகளாக அமையும் என சட்டம் கூறினாலும் நடைமுறையில் உள்ள விவாகரத்து வழக்குகளில் அக் காரணங்கள் பெரிதாக காட்டப்படுதில்லை. சிறு சண்டைகள், சீதனம் இன்மை, வெளிநாட்டில் உறவினருடன் சேர வேண்டும் என்பவை போன்ற காரணங்களை காட்டி பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. உண்மையான வழக்கெழுகாரணம் இருப்பதில்லை. குடும்ப வாழ்வை ஒரு முற்றுக்கு கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் இருப்பதில்லை. குடிப்பது வழக்கம். வீட்டைக் கவனிப்பதில்லை வேலைக்கு போவதில்லை என்பன போன்ற காரணங்களை காட்டியும் விவாகரத்துக்கள் பெறப்படுகின்றன. ஒரு தலைப்பட்ச தீர்ப்பின் மூலம் இவ்விவகாரத்து வழக்குகள் தீர்க்கப்படுகின்றன. ஒரு தலைப்பட்சமான தீர்ப்பில் கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் நீதிமன்றத்திற்கு சரியாக நடைபெற்றது என்று காட்டுவதற்காக தேவையான தகவல்களை கொடுப்பது மூலம் விவாகரத்தை பெற்றுக் கொள்வதையும் நாம் இன்று காணக்கூடியதாயிருக்கிறது. இவற்றை நோக்கும் போது இன்று விவாகரத்து வழக்குகள் திருமணத்தவறு என்பதில் இருந்து விலகி திருமண முறிவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செல்கிறது எனலாம்.
சட்டத்தரணி கே.ஜி.ஜோன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக