வியாழன், 2 அக்டோபர், 2014

மகாபாரத கதை

ஆசிரியர் மிகவும் உற்சாகத்துடன் பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.

" மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கணவன் வாசுதேவனை சிறையில் அடைத்தான்.



முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை......"

மாணவன் ஒருவன் இடையில் கேட்டான்....

" சார் ஒரு சந்தேகம்..."

"சொல்! என்ன சந்தேகம்? மகாபாரதத்தில் எனக்கு தெரியாதது கிடையாது....!" ஆசிரியர் பெருமை பொங்க சொன்னார்.

மாணவன் கேட்டான் ...

"8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஐயா ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?"
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல