புதன், 5 நவம்பர், 2014

கனேடிய தமிழருக்கு லொத்தரில் 300 கோடி ரூபாய்!

கனடாவில் மிசிசாகாவில் வசித்து வருகின்ற ஈழ தமிழர் ஒருவருக்கு அதிஷ்ட இலாப சீட்டெழுப்பில் 300 கோடி ரூபாய் விழுந்து உள்ளது.



வேலாயுதன் வாமதேவன் - வயது 62 என்பவரே ஒக்டோபர் மாத நடுப் பகுதியில் மகனின் பிறந்த நாள் தினத்தில் கடைசித் தருணத்தில் சீட்டை கொள்வனவு செய்து 20 மில்லியன் அமெரிக்க டொலரை வென்று உள்ளார்.

இவர் 03 பிள்ளைகளின் தந்தை. வீட்டு தரகர் ஆவார். கடந்த 30 வருடங்களாக கனடாவில் வசிக்கின்றார். கடந்த 20 வருடங்களாக லொத்தர் சீட்டு எடுத்து வந்திருக்கின்றார்.

ஆயினும் இவ்வளவு பெரிய அதிஷ்டம் கிடைக்கும் என்று நினைத்து இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ள இவர் பணத்தை என்ன செய்வது? என்று தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல