வியாழன், 18 டிசம்பர், 2014

பாலச்சந்தர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

இயக்குநர் பாலச்சந்தர் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளது. அவர் உடல் நிலையில் பெரிய மாறுதல் ஏதுமில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கடந்த இரு தினங்களாக அவர் மெல்ல தேறி வருவதாகக் கூறினர் மருத்துவர்கள்.

ஆனால் இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவுமில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தன்னைப் பார்க்க வருபவர்களை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அதே நேரம் அவரது கை கால்கள் மட்டும் மெல்ல அசைகின்றன.

அவரது உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததுதான் கவலையளிக்கிறது. இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளதால், அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது.

மூச்சுத் திணறல் இன்னும் தொடர்வதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

பாலச்சந்தர் நலமடைய வேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல