ஞாயிறு, 10 மே, 2015

அச்சுவேலியில் கள்ளுத் தவறணைக்குள் கள்ளக்காதல்

அச்சுவேலியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடியொன்றை ஊர்மக்கள் வளைத்துப்பிடித்து நையப்படைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்



07.05.2015 பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆளரவமற்ற கள்ளுத்தவறணை ஒன்றிற்குள் கள்ளக்காதல் ஜோடியொன்று இரகசியமாக நுழைந்துள்ளது. இது காட்டுப்பகுதியை ஒத்த பகுதியில் அமைந்துள்ளது. இதனை கண்ட இணைஞன் ஒருவர், அதனை ஏனையவர்களிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சற்றுநேரத்தில் இளைஞர்களும், ஊர்மக்களும் ஒன்றுதிரண்டு கள்ளுத்தவறணையை வளைத்து உள்நுழைந்துள்ளனர். அங்கு கள்ளக்காதல் ஜோடி ஏடாகூடாமான நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை பிடித்து ஊர்மக்கள் நையப்புடைத்துள்ளனர். பின்னர் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப;பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலன் திருமணமாகாத அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், கள்ளக்காதலியும் அதே பகுதியை சேர்ந்தவரென்பதும் தெரியவந்தது. எனினும், காதலி ஏற்கனவே திருமணமாகி கணவனுடன் வசித்து வருபவர் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கள்ளக்காதலியின் கணவனை இன்றுகாலையில் பொலிஸ்நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல