அவனது பெயர் ரயிப் பதாவி. பதாவியின் பெயர் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது என்றால், அவன் மீதான பார்வைக் கோணங்கள் இதற்குக் காரணமாகும். இந்த மனிதன் இஸ்லாத்தை அவமதித்தான் என்பது முதற்கோணம். கருத்துச் சுதந்திரம் பேசி, சமயம் தொடர்பான கருத்தாடல்களை ஊக்குவித்தான் என்பது இரண்டாவது கோணம்.
ரயிப் பதாவி 1983ஆம் ஆண்டு பிறந்தவர். தமது 23ஆவது வயதில் என்ற Free Saudi Liberals என்ற பெயரிலான இணையத்தளம் ஒன்றை தொடங்கியிருந்தார். இதனனூடாக, தமது கருத்துக்களைப் பதிவு செய்தார். மற்றவர்களின் கருத்தாடல்களுக்கும் வாய்ப்பளித்தார். இதில் இஸ்லாம் பற்றி மாத்திரமன்றி, சவூதி அரேபியா பற்றியும் பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்னர், சவூதி அதிகாரிகள் பதாவியைக் கைது செய்தார்கள். இஸ்லாத்தை இழிவுபடுத்துதல், சமயத்தைத் துறத்தல், சட்டவிரோதமான இணையத்தளத்தை ஆரம்பித்தல் என்பது பதாவிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதாவிக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைக்கு எதிராக பல மேன்முறையீடுகள். இந்த வழக்கு கடைசியாக, சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. சவூதி நீதிமன்றம் பத்தாண்டு கால சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் பிரம்படிகள் என்ற தண்டனையை ஊர்ஜிதம் செய்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை பதாவியின் மனைவி ஊர்ஜிதம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜித்தா மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், ஆயிரம் பிரம்படிகள் 50 தடவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும், பொது மக்கள் முன்னிலையில் பிரம்படிகள் வழங்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. கடந்த ஜனவரி மாதம் 50 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
தண்டனை முழுமை பெற வேண்டுமாயின், இன்னமும் 19 தடவைகள் பதாவி பிரம்படிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான விடயம் யாதெனில், ஜனவரி 9ஆம் திகதிக்குப் பின்னர் பதாவிக்கு பிரம்படி வழங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களின் அடிப்படையில், அடுத்த தண்டனை பல தடவைகள் பின்போடப்பட்டிருக்கிறது. கடைசியாக, கடந்த வெள்ளிக்கிழமை பிரம்படி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் பின்போடப்பட்டதாக பதாவியின் மனைவி கனடாவில் இருந்து ட்விற்றர் செய்தி மூலம் அறிவித்திருக்கிறார்.
ஜனவரியில் பதாவி பெற்ற பிரம்படிகள் மூலம், அவரது காலிலும் பிருஷ்டங்களிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அந்தக் காயங்கள் ஆறவில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதன் அடிப்படையில், மருத்துவ ரீதியான காரணங்களை முன்வைத்து அடுத்த பிரம்படியை சவூதி அரசாங்கம் தவிர்த்ததாக அறிக்கப்பட்டது.
பதாவி மீதான தண்டனை என்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம். இந்தத் தண்டனையை நிறுத்த வேண்டுமென மேற்குலகம் வலியுறுத்துவதையும், அதனை சவூதி அதிகாரிகள் நிராகரிப்பதையும் அடிக்கடி காண்கிறோம். தண்ட னையை நிறுத்துமாறு வலுவாகக் குரல் கொடுத்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. மத்திய கிழக்கின் சமகால அரசியல் யதார்த்தத்தை ஆராய்ந்தால், அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அதிகாரிகள் தட்ட முடியுமா என்ற கேள்வி எழும்.
பிரம்படித் தண்டனை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு சவூதி அரேபியா அடிபணிந்திருக்கிறது என்றால், இது முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் கிடையாது. ஒருவரை அதீதமாக துன்புறுத்தக்கூடிய தண்டனை முறைகளை ஒழித்துக் கட்டும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்க முடியும்.
இத்தகைய தண்டனைகள் சவூதியில் மாத்திரம் அன்றி, வேறு பல நாடுகளிலும் அமுலில் இருக்கின்றன. ஆப்கான், ஈரான் போன்ற நாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ேயமன், தன்சானியா முதலான நாடுகளையும் மறந்து விட முடியாது.
தனது ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியத்தில், இஸ்லாமிய இராச்சியம் என்ற இயக்கம் கட்டவிழ்த்து விடும் தண்டனைகளும் ஏராளம்.
இந்நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காக உடலைத் துன்புறுத்தக்கூடிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்காக பதாவிக்கு பிரம்படி கிடைத்தது. மதுபானம் அருந்துதல் முதலான குற்றங்களுக்கு ஈரானில் கசையடித் தண்டனை வழங்கப்படும்.
இது தவிர, சமூக நெறிபிறழ்வாகக் கருதப்படும் பாலியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒருவரும் கசையடி பெறலாம். இதில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில், ஒருவர் ஒருபாலினச் சேர்க்கையாளர் என்று சந்தேகிக்கப்படும் பட்சத்திலும், அவருக்கு தண்டனை வழங்கப்படக்கூடியதாக இருப்பது சற்று கவனிக்கத்தக்க விடயமாகும்.
பெண்களது விடயத்திலும், இந்தத் தண்டனை தவறாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றி பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவுகளைப் பேணி சோரம் போனதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களுக்கு கசையடி அல்லது பிரம்படித் தண்டனை வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இத்தகைய குற்றம் இழைத்த பெண்கள் கல்லால் அடித்து கொல்லப்படும் போக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தண்டனை பெற்றவர்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களும் உண்டென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் தம்மைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாத பெண்கள், சோரம் போனவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற சம்பவங்கள் பற்றியும் மனித உரிமை அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
பிரம்படி, கசையடி, கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற தண்டனைகள் ஒரு தேசத்தின் இறையாண்மையுடன் தொடர்புடையவை என்பது உண்மை தான். எனினும், இவை கொடுமையானவை என்பதையும் மறுக்க முடியாது.
ஒருவருக்கு நியாயமற்ற முறையில் தண்டனை வழங்கப்படுகிறதென ஒட்டுமொத்த உலகமும் கருதும் பட்சத்தில், அந்தத் தண்டனை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.
இத்தகைய தண்டனைகள் பற்றி சவூதி அரேபியாவிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் நிகழக்கூடிய களம் ஐக்கிய நாடுகள் சபையாகும்.
இந்தக் களத்தில் சவூதியின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்தாடல்கள் நிகழ்கின்றன. தமது சட்டங்கள் ஷரீ-ஆவை அடிப்படையாகக் கொண்டதென சவூதி அரேபியா வாதிடுகிறது. இந்த சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் நியாயமானவை என்பது சவூதியின் வாதமாகும்.
சவூதி அரேபியாவின் செயற்பாடுகளை ஆட்சேபிக்கும் நாடுகள் சர்வதேச சட்டங்கள் எனக் கருதப்படக்கூடிய ஆவணங்களை சுட்டிக்காட்டுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் சாசனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், சித்திரவதைக்கு எதிரான சமவாயம் போன்றவற்றை அவை சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய பிரகடனங்களும் சமவாயங்களும் உள்நாட்டு நீதித்துறையின் மீது சர்வதேசத் தலையீடுகள் என சவூதி அரேபியா வாதிடுகிறது. கடுமையான தண்டனைகள் சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கத்தைக் கொண்டவை என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது சவூதியின் வாதமாகத் திகழ்கிறது.
இங்கு அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட சவூதியின் சட்டங்கள் சரியானவையா அல்லது அடிப்படை உரிமைளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சர்வதேச சமவாயங்கள் முக்கியமானவையா என்ற கேள்விக்குள், கடுமையான தண்டனைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் மையம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
இதில் சவூதி அரேபியா என்ற நாடு, ஷரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சட்ட திட்டங்களின் அடிப்படையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேண முடியும் பல நாடுகளின் அணியை தலைமை தாங்கி வழி நடத்துகிறது.
இந்நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும், பல வருடங்களாக இவற்றின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்நாடுகளில் தொடர்ச்சியாக கடும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை மாத்திரமன்றி, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஐஎஸ் போன்ற அமைப்புக்களும் கடுமையான தண்டனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இவற்றை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கோரிக்கை விடுப்பதன்மூலம் சவூதி அரேபியாவின் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ, இஸ்லாமிய இராச்சியம் வழங்கும் தண்டனைகளை நிறுத்துவதோ சாத்தியமான விஷயம் அல்ல.
ஓட்டுமொத்த உலகமும் சேர்ந்து அழுத்தம் தொடுக்கும் பட்சத்தில், அந்த அழுத்தத்தை தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் சவூதி அரேபியாவிற்கு கிடையாது என்பது சமகால அரசியல் யதாhர்த்தமாகும்.
பதாவி மீதான பிரம்படியை நிறுத்த வேண்டும் என்ற கோஷம் சர்வதேச இயக்கமாக மாறி சவூதியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமாயின், அது முக்கியமான திருப்புமுனை என்பதை மறுக்க முடியாது.
தாம் செய்வது நியாயமற்றதாக இருக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் தம்மீது பாயும் என்ற உணர்வு எந்தவொரு தேசத்திற்கும் ஏற்படுமாயின், அந்தத் தேசம் சரியான திசையில் செல்லும்.
அத்தகையதொரு பின்புலம், கசையடி பிரம்படி முதலான கொடூரமான தண்டனைகளை ஒழிப்பதற்குரிய சர்வதேச இயக்கத்தை வெற்றிப் பாதையில் செலுத்தலாம்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
ரயிப் பதாவி 1983ஆம் ஆண்டு பிறந்தவர். தமது 23ஆவது வயதில் என்ற Free Saudi Liberals என்ற பெயரிலான இணையத்தளம் ஒன்றை தொடங்கியிருந்தார். இதனனூடாக, தமது கருத்துக்களைப் பதிவு செய்தார். மற்றவர்களின் கருத்தாடல்களுக்கும் வாய்ப்பளித்தார். இதில் இஸ்லாம் பற்றி மாத்திரமன்றி, சவூதி அரேபியா பற்றியும் பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
சரியாக மூன்றாண்டுகளுக்கு முன்னர், சவூதி அதிகாரிகள் பதாவியைக் கைது செய்தார்கள். இஸ்லாத்தை இழிவுபடுத்துதல், சமயத்தைத் துறத்தல், சட்டவிரோதமான இணையத்தளத்தை ஆரம்பித்தல் என்பது பதாவிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகும். இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதாவிக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தண்டனைக்கு எதிராக பல மேன்முறையீடுகள். இந்த வழக்கு கடைசியாக, சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. சவூதி நீதிமன்றம் பத்தாண்டு கால சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் பிரம்படிகள் என்ற தண்டனையை ஊர்ஜிதம் செய்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை பதாவியின் மனைவி ஊர்ஜிதம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜித்தா மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், ஆயிரம் பிரம்படிகள் 50 தடவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவும், பொது மக்கள் முன்னிலையில் பிரம்படிகள் வழங்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. கடந்த ஜனவரி மாதம் 50 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
தண்டனை முழுமை பெற வேண்டுமாயின், இன்னமும் 19 தடவைகள் பதாவி பிரம்படிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான விடயம் யாதெனில், ஜனவரி 9ஆம் திகதிக்குப் பின்னர் பதாவிக்கு பிரம்படி வழங்கப்படவில்லை. பல்வேறு காரணங்களின் அடிப்படையில், அடுத்த தண்டனை பல தடவைகள் பின்போடப்பட்டிருக்கிறது. கடைசியாக, கடந்த வெள்ளிக்கிழமை பிரம்படி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் பின்போடப்பட்டதாக பதாவியின் மனைவி கனடாவில் இருந்து ட்விற்றர் செய்தி மூலம் அறிவித்திருக்கிறார்.
ஜனவரியில் பதாவி பெற்ற பிரம்படிகள் மூலம், அவரது காலிலும் பிருஷ்டங்களிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அந்தக் காயங்கள் ஆறவில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதன் அடிப்படையில், மருத்துவ ரீதியான காரணங்களை முன்வைத்து அடுத்த பிரம்படியை சவூதி அரசாங்கம் தவிர்த்ததாக அறிக்கப்பட்டது.
பதாவி மீதான தண்டனை என்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம். இந்தத் தண்டனையை நிறுத்த வேண்டுமென மேற்குலகம் வலியுறுத்துவதையும், அதனை சவூதி அதிகாரிகள் நிராகரிப்பதையும் அடிக்கடி காண்கிறோம். தண்ட னையை நிறுத்துமாறு வலுவாகக் குரல் கொடுத்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. மத்திய கிழக்கின் சமகால அரசியல் யதார்த்தத்தை ஆராய்ந்தால், அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அதிகாரிகள் தட்ட முடியுமா என்ற கேள்வி எழும்.
பிரம்படித் தண்டனை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு சவூதி அரேபியா அடிபணிந்திருக்கிறது என்றால், இது முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் கிடையாது. ஒருவரை அதீதமாக துன்புறுத்தக்கூடிய தண்டனை முறைகளை ஒழித்துக் கட்டும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்க முடியும்.
இத்தகைய தண்டனைகள் சவூதியில் மாத்திரம் அன்றி, வேறு பல நாடுகளிலும் அமுலில் இருக்கின்றன. ஆப்கான், ஈரான் போன்ற நாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ேயமன், தன்சானியா முதலான நாடுகளையும் மறந்து விட முடியாது.
தனது ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியத்தில், இஸ்லாமிய இராச்சியம் என்ற இயக்கம் கட்டவிழ்த்து விடும் தண்டனைகளும் ஏராளம்.
இந்நாடுகளிலும் பிராந்தியங்களிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காக உடலைத் துன்புறுத்தக்கூடிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இஸ்லாத்தை அவமதித்த குற்றத்திற்காக பதாவிக்கு பிரம்படி கிடைத்தது. மதுபானம் அருந்துதல் முதலான குற்றங்களுக்கு ஈரானில் கசையடித் தண்டனை வழங்கப்படும்.
இது தவிர, சமூக நெறிபிறழ்வாகக் கருதப்படும் பாலியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒருவரும் கசையடி பெறலாம். இதில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில், ஒருவர் ஒருபாலினச் சேர்க்கையாளர் என்று சந்தேகிக்கப்படும் பட்சத்திலும், அவருக்கு தண்டனை வழங்கப்படக்கூடியதாக இருப்பது சற்று கவனிக்கத்தக்க விடயமாகும்.
பெண்களது விடயத்திலும், இந்தத் தண்டனை தவறாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றி பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.
திருமணத்திற்கு புறம்பான உறவுகளைப் பேணி சோரம் போனதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களுக்கு கசையடி அல்லது பிரம்படித் தண்டனை வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இத்தகைய குற்றம் இழைத்த பெண்கள் கல்லால் அடித்து கொல்லப்படும் போக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தண்டனை பெற்றவர்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களும் உண்டென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் தம்மைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாத பெண்கள், சோரம் போனவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற சம்பவங்கள் பற்றியும் மனித உரிமை அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
பிரம்படி, கசையடி, கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற தண்டனைகள் ஒரு தேசத்தின் இறையாண்மையுடன் தொடர்புடையவை என்பது உண்மை தான். எனினும், இவை கொடுமையானவை என்பதையும் மறுக்க முடியாது.
ஒருவருக்கு நியாயமற்ற முறையில் தண்டனை வழங்கப்படுகிறதென ஒட்டுமொத்த உலகமும் கருதும் பட்சத்தில், அந்தத் தண்டனை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.
இத்தகைய தண்டனைகள் பற்றி சவூதி அரேபியாவிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் நிகழக்கூடிய களம் ஐக்கிய நாடுகள் சபையாகும்.
இந்தக் களத்தில் சவூதியின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்தாடல்கள் நிகழ்கின்றன. தமது சட்டங்கள் ஷரீ-ஆவை அடிப்படையாகக் கொண்டதென சவூதி அரேபியா வாதிடுகிறது. இந்த சட்டங்களின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் நியாயமானவை என்பது சவூதியின் வாதமாகும்.
சவூதி அரேபியாவின் செயற்பாடுகளை ஆட்சேபிக்கும் நாடுகள் சர்வதேச சட்டங்கள் எனக் கருதப்படக்கூடிய ஆவணங்களை சுட்டிக்காட்டுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் சாசனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், சித்திரவதைக்கு எதிரான சமவாயம் போன்றவற்றை அவை சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய பிரகடனங்களும் சமவாயங்களும் உள்நாட்டு நீதித்துறையின் மீது சர்வதேசத் தலையீடுகள் என சவூதி அரேபியா வாதிடுகிறது. கடுமையான தண்டனைகள் சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற நோக்கத்தைக் கொண்டவை என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது சவூதியின் வாதமாகத் திகழ்கிறது.
இங்கு அல்குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட சவூதியின் சட்டங்கள் சரியானவையா அல்லது அடிப்படை உரிமைளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சர்வதேச சமவாயங்கள் முக்கியமானவையா என்ற கேள்விக்குள், கடுமையான தண்டனைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் மையம் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
இதில் சவூதி அரேபியா என்ற நாடு, ஷரீஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சட்ட திட்டங்களின் அடிப்படையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேண முடியும் பல நாடுகளின் அணியை தலைமை தாங்கி வழி நடத்துகிறது.
இந்நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும், பல வருடங்களாக இவற்றின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்நாடுகளில் தொடர்ச்சியாக கடும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை மாத்திரமன்றி, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஐஎஸ் போன்ற அமைப்புக்களும் கடுமையான தண்டனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இவற்றை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கோரிக்கை விடுப்பதன்மூலம் சவூதி அரேபியாவின் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ, இஸ்லாமிய இராச்சியம் வழங்கும் தண்டனைகளை நிறுத்துவதோ சாத்தியமான விஷயம் அல்ல.
ஓட்டுமொத்த உலகமும் சேர்ந்து அழுத்தம் தொடுக்கும் பட்சத்தில், அந்த அழுத்தத்தை தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் சவூதி அரேபியாவிற்கு கிடையாது என்பது சமகால அரசியல் யதாhர்த்தமாகும்.
பதாவி மீதான பிரம்படியை நிறுத்த வேண்டும் என்ற கோஷம் சர்வதேச இயக்கமாக மாறி சவூதியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமாயின், அது முக்கியமான திருப்புமுனை என்பதை மறுக்க முடியாது.
தாம் செய்வது நியாயமற்றதாக இருக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் தம்மீது பாயும் என்ற உணர்வு எந்தவொரு தேசத்திற்கும் ஏற்படுமாயின், அந்தத் தேசம் சரியான திசையில் செல்லும்.
அத்தகையதொரு பின்புலம், கசையடி பிரம்படி முதலான கொடூரமான தண்டனைகளை ஒழிப்பதற்குரிய சர்வதேச இயக்கத்தை வெற்றிப் பாதையில் செலுத்தலாம்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக