சனி, 29 ஆகஸ்ட், 2015

பல மாணவிகளை தனது காமலீலைகளுக்குப் பலியாக்கிய கைதடியில் பாடசாலை அதிபர் மகேந்திரன்

காது கேளாத, கண் பார்வையற்ற, வாய் பேச முடியாதவர்களுக்காக கைதடியில் உருவாக்கப்பட்ட நவீல்ட் பாடசாலையில் அப்பாடசாலை அதிபரால் அங்கு கற்றுவந்த மாணவிகள் பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.



மாணவிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்களால் சிறுவர் மற்றும் மகளிர் நன்னடத்தைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த அதிபரை பாடசாலைச் சமூகம் இடைநிறுத்தியிருந்ததோடு, நன்னடத்தைப் பிரிவினரால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த அதிபரைக் கைதுசெய்த பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது சந்தேகநபரை செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவீல்ட் பாடசாலை அதிபரான ஜீ.மகேந்திரன் என்பவனே அங்கு படித்த விசேட தேவையுள்ள மாணவிகளைத் துஸ்பிரயோகம் செய்தவனாவன். இவன் யாழ் மத்தியகல்லுாரியிலும் பௌதீகவியல் பாடம் கற்பித்து வந்துள்ளான்.

அந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு கற்பித்து வந்த ஆசிரியை ஒருவருடன் பாலயல்ரீதியில் தவறான செயற்பாடுகளைக் கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.



இவன் தனது பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவிகள் பலரைத் துஸ்பிரயோகப்படுத்தி அவர்கள் கர்ப்பமான போது அவர்களை கொழும்புக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என அழைத்துச் சென்று கருவைக் கலைத்ததாகவும் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் எமக்குத் தெரிவித்துள்ளார்.

NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல