செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஈராக்கை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து அதன் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ். (காணொளி இணைப்பு)

ஈராக்கில் நான்கு பேரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அவர்களை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் விடியோ படம் பிடித்து அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.



காண்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றனர். முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அந்த நபர்களை உயிரோடு எரிக்கின்றனர். மரணவேதனையில் நால்வரும் துடிக்கின்றனர்.

அந்த விடியோவில் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி இந்த வீடியோவானது தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்றான்.

ஈராக் அரசு படையினர் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை உயிருடன் கொளுத்தினர். அதற்குப் பழி வாங்கவே இப்போது 4 பேர் எரித்துக் கொல்லப்படுகின்றனர்" எனவும் வீடியோவில் தோன்றும் தீவிரவாதி தெரிவித்துள்ளான்.

தீவிரவாதிகளால் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட வீடியோ இணைய தளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

 Warning: Next Video Very Graphic !!!!


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல