வெள்ளி, 4 டிசம்பர், 2015

தமிழர்களை ஏமாற்றினாரா நரேந்திர மோடி.??

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்தை பார்வையிட இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி மீட்பு பணிகளுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்குவதாக தெரிவித்து சென்றார்.


இந்நிலையில் பிரதமர் வருகையை ட்விட்டரில் பதிவு செய்திருந்த பத்திரிகைத் தகவல் அலுவலகம் அவர் ஹெலிகாப்டரில் இருந்த படி பார்வையிடும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் சந்தேகத்தில் அடிப்படையில் இந்த புகைப்படம் உண்மையானதில்லை என்ற கேள்வியை ட்விட்டர் வாசிகள் எழுப்ப உடனடியாக இந்த புகைப்படமானது ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் தரையில் இருக்கும் வீடு மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் தெளிவாக தெரிந்ததே ட்விட்டர் வாசிகளுக்கு சந்தேகத்தை கிளப்ப காரணமாக அமைந்தது.

மேலும் கேள்விகள் எழுப்பப்பட்ட அரை மணி நேரத்தில் ட்விட்டரில் இருந்து குறிப்பிட்ட ட்வீட் அழிக்கப்பட்டது புகைப்படம் போலியானது என்பதையே உணர்த்துகின்றது.






Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல