ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்த ஆண்டின் நிலைவரம் ஜோதிட ரீதியாக எமக்கு சாதகமா ? அல்லது பாதகமா ? எனும் கேள்வி அடிப்படை பாமர மகன் தொடக்கம் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள்வரை கேட்கின்ற விடயம். பொதுவாகவே ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால் எமக்கு ஒரு வயது அதிகம் ஆகின்றது.
எமது வரவு செலவு பட்டியலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விடயத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்டுபண்ணலாம் என்பது குடும்பத்தலைவிகளின் கவலை. ஜோதிட ரீதியாக நாம் வருடப்பலன்களை அறிகின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்பங்களை முற்று முழுதாக நீக்கி வெற்றி காண முடியாது.
பெரும் பிரச்சினைகளில் இருந்து விலகி ஓரளவிற்கு எமது நடைமுறை செயற்பாடுகளின் மூலம் தலைக்கு வரும் துன்பம் தலைப்பாகையுடன் செல்லும் நிலைக்கு எம்மை தயார்படுத்திக்கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்த 2016 ஆம் ஆண்டில் 09.01.2016 அன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகின்றது.
கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ராகுவும் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி பெறுகின்றது. அத்தோடு 02.08.2016 அன்று குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி பெறுகின்றார்.
வருடம் முழுவதும் சனீஸ்வரன் விருட்சிக ராசியில் சஞ்சரிக்கின்றார். இதன் பலாபலன்களை ஒவ்வொரு ராசியினரும் அறிந்து அதற்கு ஏற்ப செயற்படும் போது பெரும்பாலான பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுக்கொள்ள முடியும். நாம் எமது எண்ணம் செயல் என்பனவற்றை தூய்மையாக கொண்டு செய்யும் தொழிலை நேர்மையாக செய்தாலே பல நன்மைகள் நம்மை சாரும்.
எனவே பிறக்கும் 2016ஆம் ஆண்டு அனைவருக்கும் அவரவர் எண்ணங்கள் நிறைவு காணவும் மனநிலையில் சந்தோஷம் பெருகவும் இனிமை, இங்கிதம், இன்பம் சேரவும் அன்னை ஆதிபராசக்தி அருள் பொழியட்டும்.
மேடராசி
( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம்பாதம்)
அன்பும் ஆதரவும் தெய்வ நம்பிக்கையும் அதிகம் கொண்ட மேட ராசி அன்பர்களே படபடவென முகத்திற்கு நேரே பேசுகின்ற சுபாவம் கொண்ட நீங்கள் நல்ல இதயம் படைத்தவர்கள். எல்லோருக்கும் உதவும் மனம் நிறைவாக கொண்டவர்கள். எதிரி என்று வந்துவிட்டால் கடைசி வரை மன்னிக்கவே மாட்டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்டிலே எப்படியான பலன்கள் சூழ இருக்கின்றது.
இந்த வருடம் முழுவதுமாக சனீஸ்வரன் அட்டமத்து சனியாக அமைவதால் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் குழப்பங்கள் அதிகம் இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குரு பகவான் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைகின்றார். 09.01.2016 முதல் சர்ப்ப கிரஹங்களான ராகு உங்களின் ராசி நிலைக்கு 5ஆம் இடமும், கேது உங்கள் ராசிக்கு 11ஆம் இடமும் அமைகின்றது. எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான நற்பலன்கள் கொடுக்கும் நிலை இருக்கும். 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஓரளவிற்கு உங்களின் எண்ணங்கள் ஈடேறும் நிலையிருக்கும். தொழில் நிலைகளில் அலைச்சல் நிலை சற்று அதிகமாகவே இருக்கும்.
எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத நிலைகள் ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். எந்த விடயத்திலும் பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்பட வேண்டும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும் நிலை உண்டு. அட்டமத்து சனி திடீரென உடல்நிலை சுகவீனங்கள், மருத்துவ செலவுகள், சத்திர சிகிச்சைகள் போன்ற பலாபலன்களை கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் 5ஆம் இடத்து சஞ்சாரம் சொத்து விவகாரங்களில் பிரச்சினைகளை கொடுக்கும். கேதுவின் 11ஆம் இடம் சஞ்சாரம் ஓரளவிற்கு நல்ல தலயாத்திரைப் பலன் ஏற்படுத்தும். 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் எந்த விடயம் என்றாலும் சற்று பிரச்சினைகள் கொடுக்கும் நிலை இருக்கும்.
பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் அதிகமாக அமையும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவர்கள் சற்றுக்கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எனவே 2016 ஜூலை மாதத்தின் மேல் சனீஸ்வரன் குரு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
அத்தோடு அம்மன் வழிபாடும் அனுகூலம் தருவதாய் அமையும். எனவே அதற்கு ஏற்ப பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்படுவது உங்களுக்கு மிகவும் நல்லது. மொத்தத்தில் இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 55% நன்மைகள் கொடுக்கும்.
இடப ராசி
(கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம்)
இறுக்கமான இதயமும் இன்சொல் இல்லாத பேச்சும் கொண்ட இடப ராசி அன்பர்களே உங்களுக்கு என சில வரையறைகள் வைத்துக்கொண்டு செயற்படும் நீங்கள் மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ள மாட்டீர்கள். யாருக்காகவும் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்டு எப்படி இருக்க போகின்றது. ராசி நிலைக்கு சனீஸ்வரன் களத்திர ஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைகின்றார். வருடம் முழுவதும் இதே நிலை அமைவதால் குடும்ப நிலையிலே சற்றுக்குழப்பமான நிலைகள் தொடரும் நிலை இருக்கும். 2016 நடுப்பகுதி வரை குருவின் பலன் சுகஸ்தானமாகிய 4ஆம் இடம் அமைவதும் 09.01.2016 முதல் ராகு 4ஆம் இடமும் கேது 10ஆம் இடமும் அமைகின்றது. எனவே ஆண்டின் முற்பகுதி பல வகையிலும் அலைச்சல் இழுபறி நிலையைக் கொடுக்கும். தொழில் நிலைகளில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் இழுபறி நிலையிருக்கும். எதையும் நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்பட வேண்டும். உடல் நிலை உபாதைகள் திடீரென அமைகின்ற நிலைகள் ஏற்படும். 2016 நடுப்பகுதியின் மேல் குருவின் கோசார பலன் பஞ்சமஸ் தானமாகிய 5ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலை இருக்கும். ராகுவின் 4 ம் இடத்து சஞ்சாரம் திடீர் சுகவீனங்கள், மருத்துவ செலவுகள், தாயாருடன் மனச்சஞ்சல நிலைகள் இடையிடையே ஏற்படுத்தும். கேதுவின் 10 ம் இடத்து சஞ்சாரம் தொழில் நிலையில் அலைச்சல், வேலைப்பளு, மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் போன்ற பலாபலன்களை கொடுக்கும். எனவே உங்களின் அசட்டைத்தனத்தை விடுத்து சற்று நிதானமுடன் காரியங்களில் ஈடுபாடு கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமைகின்ற நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு உங்கள் ராசி நிலைக்கு ஆண்டின் முழுவதும் சனி ராகு கிரஹங்களின் பலன்கள் சுமாரானதாகவே அமைகின்றது. எனவே இவ்விரு கிரஹ வழிபாடும் மேற்கொள்வது மிகவும் நல்லது. அத்தோடு முருகன் வழிபாடும் நன்மை தரும். எதையும் சகித்துக்கொள்ளுகின்ற மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு இந்த 2016ஆம் ஆண்டில் அமையும் பலன்களை சமாளிக்க கூடியதாகவே இருக்கும். உங்கள் ராசி நிலைக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் 2016 இல் உண்டு.
மிதுன ராசி
( மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)
அமைதியாக பேசி அடக்கமாக நடந்து ஆளுமையோடு செயல் ஆற்றி வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே யாராலும் உங்களின் செயல்பாடுகளை கணிக்க முடியாது. எதையும் ரகசியம் காத்து உங்கள் விடயங்களில் மட்டும் பயன்படுத்தி வெற்றி பெற்றுக்கொள்ளும் சாணக்கியர்கள் நீங்கள். உங்களின் ராசிக்கு 2016ஆம் ஆண்டிலே சனீஸ்வரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பானதாக 6ஆம் இடத்தில் அமைகின்றார் வருடம் முழுவதுமாக.
எனவே எந்த விடயத்தையும் வெற்றி கொள்ள கூடிய ஆளுமைத்திறன் சிறப்பாக அமையும். குருவின் கோசார பலன் 2016 நடுப்பகுதி வரை ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடம் அமைவது அலைச்சல் நிலை சற்று அதிகமாக இருக்கும். 09.01.2016 முதலாக ராகு 3ஆம் இடமும் கேது 9ஆம் இடமும் அமைவது மிகவும் அனுகூலமான நன்மைகள் அமையும் நிலை இருக்கும். எந்த விடயத்தையும் வெற்றி கொள்ளக்கூடிய அனுகூலப்பலன்கள் அமையும். இருப்பினும் குருவின் பலன் நடுப்பகுதி வரை 3ஆம் இடமும் அதன் பின்னர் 4ஆம் இடமும் அமைவது தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அமையும். வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டிய நிலைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் மனச்சஞ்சல நிலையும் உறவினர்களுடன் வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் அமையும் நிலை இருக்கும். திருமணம் போன்ற விடயங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று இழுபறி தாமத நிலைகளை கொடுக்கும். பணவரவு மந்த கதியிலேயே அமையும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் நிதானத்தோடு செயற்பட வேண்டும். பெண்களுக்கு மன நிலையிலே அதிகமான சஞ்சல நிலை அமையும். மாணவர்களுக்கு கல்வியில் அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் அமையும் குருவின் பலன் சிறு சிறு சிரமமான பலன்களை கொடுத்தாலும் எதிர்பாராத வகை நற்பலன்களும் இடையிடையே கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் ஜெயஸ்தானமாகிய 3ஆம் இட சஞ்சாரம் மற்றும் கேதுவின் பாக்கியஸ்தானமாகிய 9ம் இட சஞ்சாரம் என்பன எதிர்பாராத வகை பிரயாணங்கள், தலயாத்திரை போன்ற அனுகூலமான பலன்களை கொடுக்கும் நிலையும் ஏற்படும். எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு நன்மைகள் தரும் ஆண்டாகவே அமையும். எனவே அதற்கு அமைய உங்களின் செயற்பாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்லது. இந்த 2016இல் நூற்றிற்கு 60% நன்மைகள் அமையும்.
கடக ராசி
( புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
காரியவாதிகளாக உங்களின் செயற்பாட்டில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் கடகராசி அன்பர்களே உங்களின் கலகலப்பான நடைமுறை அனைவரையும் கவர்ந்து விடும். ஆனால் அது உங்களின் காரிய வெற்றிக்கான செயல்பாடு என்பது பின்புதான் தெரிய வரும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் அதிகமாக கொண்ட உங்களுக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்வரனின் சஞ்சாரமானது பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடத்தில் அமைகின்றது. எடுக்கின்ற முயற்சிகளில் பொறுமையும் நிதானமும் மிகவும் முக்கியம். பூர்வீக சொத்துக்களின் மூலம் வழக்குகள் அமையும். தொழில் நிலை அலைச்சல் சற்று அதிகமாகவே அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குருவின் சஞ்சாரமானது தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் கொடுக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும் நிலை இருக்கும். பண வரவு மிகவும் திருப்திகரமாக அமைகின்ற நிலை கொடுக்கும். 09.01.2014முதலாக ராகுவின் சஞ்சாரம் தனஸ்தானமாகிய 2ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் அட்டமஸ்தானமாகிய 8ஆம் இடமும் அமைகின்றமை சிறப்பான நிலை அல்ல. உடல் நிலையில் உபாதைகளும் எடுக்கின்ற முயற்சிகளில் அலைச்சல் நிலைகளும் தொடரும். தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எதிலும் நிதானம் வேண்டும். 2016ஆண்டு நடுப்பகுதியின் மேல் குருவின் பலன் ஜெயஸ்தானமாகிய 3ம் இடம் அமைவது சிறப்பான நிலையாக இருக்காது. எனவே ஆண்டின் நடுப்பகுதியின் மேல் எந்த விடயம் எடுத்தாலும் அலைச்சல் பிரச்சினை தொடரும் நிலை இருக்கும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகளும் குடும்பத்தில் பலவிதமான நெருக்கடி நிலைகளும் ஏற்படுகின்ற பலன் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சற்றுக்கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். உழைப்பும் முயற்சியும் அதிகம் கொண்ட உங்களுக்கு உங்களின் சொத்துக்களின் மூலமாக ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்ற நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்களின் முயற்சி செயல்பாடு போன்ற விடயங்களில் மிக நிதானமாக காரியம் ஆற்ற வேண்டும். சனீஸ்வரன் குரு கிரஹங்களுக்கு வழிபாடு மேற்கொள்வது மிகமிக நல்லது.
அத்தோடு அம்மன் வழிபாடும் மேற்கொள்ளவும் அதிகமான உயரத்தை தொட வேண்டும் என்கின்ற எண்ணப்பாங்கு மிகவும் அதிகமாக கொண்ட உங்களுக்கு அதற்கேற்ப உழைப்பும் முயற்சியும் அதிகம் இருக்கும். எனவே தேவையற்ற விடயங்களைத் தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் பாடு உண்டு என இருப்பதே நல்லது. இந்த ஆண்டு நூற்றிற்கு 55% நன்மைகள் அமையும்.
சிம்ம ராசி
( மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்)
மனதைரியமும் தீர்க்கமான செயற்பாடும் நினைத்ததை சாதிக்கும் குணமும் கொண்ட சிம்மராசி அன்பர்களே யாருக்காகவும் உங்களின் நிலையில் இருந்து இறங்கி வரமாட்டீர்கள். எதையும் உங்களின் எண்ணப்படியே செய்து முடிப்பீர்கள். பிடிவாதமும் முயற்சியும் உங்களோடு என்றும் ஒட்டி நிற்பவை. உங்கள் ராசி நிலைக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்வரன் சஞ்சாரம் கண்டார்த்த சனியாக 4ம் இடத்தில் அமைந்து வருடம் முழுவதும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அத்தோடு குருவின் சஞ்சாரம் ஆண்டின் நடுப்பகுதி வரை ஜென்மக்குருவாக அமைவது அலைச்சல், குடும்பப்பிரிவு, வழக்கு விவகாரம், சிறைவாசம் போன்ற நிலைகளுக்கு ஒப்பான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகுவின் சஞ்சாரம் உங்களின் ராசி நிலையில் கேதுவின் சஞ்சாரம் களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடத்தில் அமைவது பல வகையிலும் அலைச்சல் நிலை இருக்கும். தொழில் நிலைகளில் வேலைப்பளுவும் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் அமையும் நிலை இருக்கும். எதிர்பாராத பணவிரயம் பொருள்விரயம் என்பன அமையும் பலன் இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியின் மேல் குருபகவான் தனஸ்தானமாகிய 2ம் இடம் அமைவதன் மூலமாக ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும். குடும்பத்திலே சுபகாரிய பலன்கள் ஏற்படும். எதையும் சமாளிக்கக்கூடிய தெம்பும் ஆற்றலும் இருக்கும். பெண்களுக்கு ஆண்டின் முற்பகுதி பலவிதமான பிரச்சினைகளை கொடுத்தாலும் பிற்பகுதி ஓரளவிற்கு இடையிடையே நன்மையான பலன்கள் கொடுக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் பெற முடியும். பொதுவாக சனீஸ்வரன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. எதிர்பாராத வகை சுகவீனங்கள் மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும். மனநிலையில் அதிகமான யோசனைகள் அமையும். எனவே சனீஸ்வரன் வழிபாட்டுடன் உங்களின் ராசிநாத தெய்வம் அம்மன் வழிபாடும் மேற்கொள்ளவும். எனவே எதையும் சாதித்து வெற்றி கொள்ள வேண்டும் என்கிற துடிப்பும் ஆர்வமும் கொண்ட உங்களுக்கு 2016ஆம் ஆண்டு ஓரளவிற்கு நன்மைகள் கொடுக்கும். இந்த ஆண்டிலே உங்களுக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் உண்டு.
கன்னி ராசி
(உத்தரம் 2 ,3, 4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்)
எப்போதும் மனதிலே ஏதேனும் ஒரு சிந்தனை கொண்டவராக குழப்ப நிலை அதிகம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, உங்களைப்பற்றிய பிரச்சினை அல்லது உறவினர் நண்பர்கள் பற்றிய பிரச்சினை என்பனவற்றை உங்களுக்குள் வாங்கி அதிகமான போராட்ட நிலைகளை கொண்டு சிரமப்படுவீர்கள். இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு வருடம் முழுவதுமாக சனீஸ்வரனின் சஞ்சாரம் ஜெயஸ்தானம் எனப்படும் 3ஆம் இடம் அமைவது சிறப்பான நிலையே. குருவின் சஞ்சாரம் ஆண்டின் நடுப்பகுதி வரை விரயஸ்தானமாகிய 12ஆம் இடம் அமைவதால் எதிர்பாராத சுபச்செலவுகள் அமைகின்ற நிலை இருக்கும். 09.01.2016 முதலாக ராகு 12ம் இடமும் கேது 6 ம் இடமும் அமைவது சிறப்பான அனுகூலமான பலன்கள் கொடுக்கும் நிலையிருக்கும். எனவே முற்பகுதியில் ஓரளவிற்கு உங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடியதான நிலைகள் அமைந்திருக்கும். தொழில் நிலைகளில் ஓரளவிற்கு நன்மையான நிலைகள் இருக்கும். சனீஸ்வரன் ராகு கேது பலன்கள் இந்த 2016ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலம் தருவதாகவே அமையும் நிலையுண்டு. எனவே தொழில்நிலை குடும்பநிலை என்பன ஏற்புடைய நற்பலன்களை கொடுக்கும். இருப்பினும் ஆண்டின் நடுப்பகுதியின் மேல் 2016 ஜூலை மாதத்தின் பின் குருவின் கோசார சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய முதலாம் இடம் அமைவது சற்றுப்பிரச்சினைகள் சிக்கல் நிலைகளை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத நிலைகள் இருக்கும். உடல்நிலையில் திடீர் சுகவீனம், மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும். தொழில் நிலைச்சிக்கல்களும் அமையும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமைய இடமுண்டு. பிற்பகுதியில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வி நிலையில் சற்று இறுக்கமான நிலைகள் இருக்கும். கூடுதலான முயற்சியும் நிதானமும் வேண்டும். எனவே 2016ம் ஆண்டு முற்பகுதி உங்களின் பலாபலன் ஓரளவிற்கு அனுகூலமான நிலைகளை கொடுக்கும். எந்த விடயத்தையும் ஒன்றுக்கு பலமுறை ஆலோசித்து செயற்படுகின்ற உங்களுக்கு அதற்கு ஏற்ப காரியங்களை நகர்த்தி செயல்படவும் முடியும். எனவே அதை தெரிந்து செயற்படுங்கள். இந்த ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 55% நன்மை தரும்.
துலாம் ராசி
( சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
எதைச்செய்தாலும் அதை சரியாக நேர்மையாக செய்ய வேண்டும் எனும் மனநிலை கொண்ட துலா ராசி அன்பர்களே, ஒரு தவறைச் செய்தாலும் அதற்கு ஏற்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுகின்ற உங்களின் மனச்சாட்சிக்கு பயம் கொள்ளும் குணயியல்பு உங்களுக்கு உரிய தனித்துவமான குணமாகும். 2016ஆம் ஆண்டிலே உங்கள் ராசி நிலைக்கு ஏழரைச்சனி கடைக்கூற்றுச் சஞ்சாரம் வருடம் முழுவதும் அமைகின்றது. எனவே சிறு சிறு காரியத்தடைகளும் குடும்ப நிலையில் மந்தமான மத்திமமான பலன்களும் அமைகின்ற நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்சாரம் ஜூலை மாதம் வரை லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது தொழில் நிலைச்சிறப்பும், நல்ல பணவரவும் அமையும் நிலையிருக்கும்.
புதிய முயற்சிகள் அனுகூலமான நன்மைகளை கொடுக்கும்.
திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலை இருக்கும். மற்றும் ஜனவரி 09 முதலாக ராகு 11ஆம் இடமும் கேது 5ஆம் இடமும் அமைவதும் ராகுவின் 11ஆம் இடச்சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் கொடுக்கும். தொழில் நிலைச்சிறப்புக்கள் அமைகின்ற நிலை இருக்கும். கேதுவின் 5ஆம் இடச்சஞ்சாரம் பூர்வீக சொத்து விடயங்களில் சிக்கல் நிலை புத்திரர்களால் மனச்சஞ்சல நிலை போன்ற பலன்களை ஏற்படுத்தும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் கோசார பலன் விரயஸ்த்தானம் எனப்படுகின்ற 12 ம் இடம் அமைவது எதிர்பாராத செலவீனங்கள் ஏற்படுகின்ற நிலை இருக்கும்.
மனநிலையில் சிறு சிறு குழப்ப நிலை இருக்கும். இருப்பினும் பெரும் சிரமங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் இருக்காது. ஏழரைச்சனி நிறைவு பெறுகின்ற காலத்தை இவ்வருடம் எட்டுவதால் எதிர்பாராத வகை திடீர் நன்மைகள் அமையும் நிலை இருக்கும். பொதுவாகவே பெண்களுக்கு திடீர் அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலைச்சிறப்புக்கள் நன்மை தருவதாக அமையும். எதையும் சமாளிக்கக்கூடிய நிலை அமையும்.
எதையும் மிகவும் நேர்த்தியாக செய்யும் உங்களுக்கு எதிரிகளும் பிரச்சினைகளும் மிகவும் அதிகமாக இருக்கும் நிலை உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்படவும். நூற்றிற்கு 70% உங்களுக்கு நன்மை உண்டு. (தொடரும்)
விருட்சிக ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
தயக்கமின்றி எதையும் துணிவோடு செய்யும் ஆற்றலும் அயராத முயற்சியும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே! உங்களின் குண இயல்பானது எந்த விடயத்தையும் ஆராய்ந்து அதிலே உங்களுக்கு உரிய வெற்றி நிலையை தெளிவாக பெற்றுக்கொள்ளுகின்ற நடைமுறையாகும். அந்த வகையில் பல விடயங்களிலும் நீங்கள் சுயநலத்தோடு தெளிவாக செயற்படுவீர்கள். இந்த 2016 ஆம் ஆண்டு உங்களுக்கு ஜென்மச்சனி எனப்படும் ஏழரைச்சனியின் நடுச்சுற்று சஞ்சாரம் நடைபெறுகின்றது.
எனவே எதிர்பாராத திடீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கும். தொழில் நிலைகளில் தேவையற்ற பிரச்சினைகள் உங்களைச்சூழுகின்ற பலன் அமையும். மருத்துவ செலவு சத்திர சிகிச்சை போன்ற பலன்களும் அமையும். பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். அத்தோடு குருவின் கோசார நிலை ஜீவனஸ்தானமாகிய 10ம் இடம் அமைவதால் தொழில் நிலைகளில் அலைச்சலும் திடீர் இடமாற்றங்களும் தொழில் சார்ந்த பிரயாணங்களும் அமையும் நிலை இருக்கும்.
எனவே பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். ஜனவரி 9 முதல் ராகுவின் சஞ்சாரம் 10ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் 4ம் இடமும் அமைகின்றன. எனவே இவ்விரு சஞ்சாரமும் சற்று சிக்கல் நிலைகளையே கொடுக்கும். 2016 ஆண்டு நடுப்பகுதியின் மேல் குருவின் சஞ்சாரம் லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அமையும் நிலையுண்டு. இருப்பினும் வருடம் முழுவதும் ஏழரைச்சனியின் ஜென்ம சஞ்சாரம் சிக்கல் நிலைகள் போராட்ட நிலைகள் கொடுத்த வண்ணமே இருக்கும். எனவே அதற்கு ஏற்ப நிதானமான செயற்பாடு கொள்வதே மிக நல்லது. பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் ஆண்டின் நடுப்பகுதியின் மேல் அமையும். மாணவர்கள் நிதானமுடன் செயற்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். எனவே பொதுவாக இந்த 2016ம் ஆண்டு போராடி ஜெயிக்க வேண்டிய நிலையே அதிகமாக அமைகின்றது.
குடும்ப நிலைகளில் திடீரென பிரச்சினைகள் ஏற்படும் நிலை இருக்கும். பொருள் நஷ்டம், பண விரயம், வழக்கு விவகாரம் போன்ற பலன் திடீரென உங்களைச்சூழுகின்ற பலன்கள் அமையும். எனவே அதற்கு ஏற்ப செயற்பாடு கொள்ளவும். உங்களின் காரியங்களில் அதிகமான ஆர்வமும் ஊக்கமும் கொண்டு செயற்பட்டு எந்த நிலையிலும் வெற்றி பெறும் அயராத முயற்சி கொண்டவர்கள் நீங்கள். இந்த ஆண்டு நூற்றிற்கு 55% நன்மைகள் தரும் நிலையுண்டு.
தனுசு ராசி
(மூலம், பூராடம், உத்தராடம், 1ம்பாதம்)
தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் துணிவும் அதிகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே! எதை எங்கே எப்படி செய்ய வேண்டும் என்கின்ற சூட்சுமம் தெரிந்தவர்கள் நீங்கள். உங்களுக்கு தெரியாத சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட உங்களின் தலையீடு அமைய நேரிட்டால் அதிலும் ஏதோ ஒரு வகையில் வெற்றிகளை பெற்று விடுகின்ற ஆளுமை கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு 2016ஆம் ஆண்டு ஏழரைச்சனி சஞ்சாரம் முதற்கூற்று நிலை வருடம் முழுவதும் அமைகின்றது. குருவின் சஞ்சாரம் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைந்திருக்கின்றது.
எனவே ஆண்டின் நடுப்பகுதிவரை அனுகூலமான நன்மைகள் அமையும். தொழில் நிலைச்சிறப்புகள் நல்ல மேன்மை தரும். குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய பலன்களும் அமைகின்ற நிலை இருக்கும். எந்த விடயம் என்றாலும் வெற்றிகளாக அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகு 9ம் இடமும் கேது 3ம் இடமும் அமைவதும் சிறப்பான நிலையே. உங்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமிருக்கும். 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ஜீவஸ்தானமாகிய 10ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் மறைமுக எதிர்ப்புக்களும் வேலைப்பளுவும் அதிகமிருக்கும். தொழில் சார்ந்த வெளிநாட்டுப்பிரயாணங்களும் அமையும் நிலை இருக்கும். இருப்பினும் தொழில் நிலையில் பெரும் சிரமங்கள் அமைய இடமில்லை. ஏழரைச்சனியின் சஞ்சார பலன் இடையிடையே உடல் நிலை உபாதைகள் திடீர் செலவீனங்கள் போன்ற நிலைகளைக்கொடுக்கும். குடும்ப நிலையிலும் புத்திரர்கள் மூலம் சஞ்சலமான நிலைகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு அனுகூலமான நன்மைகள் அமையும் நிலை உண்டு. மனதிலே மகிழ்வும் எதிர்பார்ப்புக்களில் நிறைவும் அமையும் நிலை உண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் அனுகூலமான வெற்றிகள் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறக் கூடிய நிலை இருக்கும். பொதுவாக உங்களின் ராசி நாதன் குருபகவானாக இருப்பது எதையும் சிந்தித்து செயல்படுகின்ற குண இயல்பு அதிகமாக அமைந்திருக்கும். நீங்கள் நினைக்கும் விடயங்களை எப்படியும் தொட்டு விடுகின்ற முயற்சி ஆளுமை உழைப்பு என்பன உங்களின் தனித்துவமாகும். எனவே அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்க. இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 65% நன்மை தரும்.
மகர ராசி
(உத்தராடம் 2 ,3, 4 பாதம் திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம்)
மனதிலே படும் விடயங்களை முகத்திற்கு நேரே பேசி விடுகின்ற குண இயல்பு கொண்ட மகர ராசி அன்பர்களே!
உங்களின் தைரியமான செயற்பாடு பல விடயங்களிலும் உங்களுக்கு வெற்றி தருகின்றதாய் அமைகின்றது. எதையும் சாதிக்கக் கூடிய துணிவு கொண்டவராய் செயற்படுகின்றீர்கள். உங்களின் ராசிக்கு 2016ஆம் ஆண்டு சனீஸ்வரன் சஞ்சாரம் லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்களை வருடம் முழுவதும் கொடுக்கும் நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்சார நிலையானது 2016 ஜுலை மாதம் வரை அட்டமஸ்தானமாகிய 8ம்இடம் அமைந்திருப்பது எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடைகள் தாமத இழுபறி நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். உடல் நிலை உபாதைகளும் மருத்துவ செலவும் அமையும். அத்தோடு ராகுவின் சஞ்சாரம் 8ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் 2ம் இடமும் அமைவது சற்று மந்தமான பலனாகவே இருக்கும். இருப்பினும் 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் பலன் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைவது எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகளும் தொழில் நிலைச் சிறப்புக்களும் அமையும் நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்வான பலன்களும் உறவினர்களுடன் நல்ல அணுகு முறையான நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பலா பலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். எனவே ஆண்டின் பிற்பகுதியானது மிக மிக சிறப்பானதாக அமையும். சனீஸ்வரனின் லாபஸ்தான சஞ்சாரம் குருவின் பாக்கியஸ்தான சஞ்சாரம் என்பன மிகவும் அனுகூலமான நிலையைக் கொடுக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். பெண்களுக்கு மன மகிழ்வும் எதிர்பார்ப்புக்களில் வெற்றியும் கிடைக்கும் நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நல்ல முன்னேற்றகரமானதாக இருக்கும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறலாம். எனவே உங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் நிலையாக 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் உங்களுக்கு மிகச் சிறப்பான பலன் அமையும். எதையும் வெற்றி கொள்ள முடியும். 2016ஆம் ஆண்டு நூற்றிற்கு 75% நன்மைகள் தரும்.
கும்ப ராசி
(அவிட்டம் 3, 4ம் பாதம் சதயம் பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
உங்களின் உயர்வு நிலையை எப்படி மேலோங்க செய்யலாம் எனும் எண்ணமும் செயலும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே பல விடயங்களிலும் உங்களின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இடம் பொருள் ஏவல்களுக்கு ஏற்ப வெற்றிகளையும் பெற்றுக் கொள்ளும் உங்களின் சாணக்கியம் அற்புதமானது. 2016ஆம் ஆண்டு முழுவதும் சனீஸ்வரன் உங்கள் ராசி நிலைக்கு ஜிவனஸ்தானமாகிய 10 ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் சிக்கல்களும் வேலைப்பளுவும் திடீர் இடமாற்றமும் அமையும் நிலை இருக்கும். ஜனவரி 9முதலாக ராகுவின் சஞ்சாரம் களஸ்திரஸ்தானமாகிய 7ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய 1 ஆம் இடமும் அமைவது குடும்ப நிலையில் பலவிதமான குழப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதம் உறவினர்களுடன் மனச் சஞ்சலம் தேவையற்ற வீண் பிரச்சினைகள் என்பன ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். ஜூலை மாதம் வரை குருவின் பலன் 7ஆம் இடம் அமைவது இடையிடையே சிறு சிறு நன்மையான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் பலன் அட்டமஸ்தானம் எனும் 8ம் இடம் அமைவது பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எதையும் தீர்க்கமாக செய்ய முடியாத நிலை இருக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை இருக்கும். உடல் நிலை உபாதைகளும் மருத்துவ செலவு என்பன அமையும் நிலை இருக்கும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலையும் தேவையற்ற உறவினர்களின் பிரச்சினைகளும் எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப நிலையில் சிக்கல் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் நிதானமான முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டிலே அமையும் கோசார பலா பலன்களின்படி எந்த விடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். உங்களின் மன நிலையில் பலவிதமான பிரச்சினைகள் சூழும் நிலையும் இந்த 2016 ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 45% நன்மையுண்டு.
மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)
எல்லா இடங்களிலும் உங்களின் பதிவுகளை நிலை நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணம் கொண்ட மீனராசி அன்பர்களே உங்களின் மனநிலை தைரியம் அதிகமானது. நீங்கள் எதைச் செய்தாலும் அதிலே உங்களின் செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் உங்களிடம் அதிகமாக இருக்கும். மிடுக்கான குணமும் கோபமும் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 2016ம் ஆண்டு சனீஸ்வரன் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றம் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமாக அமையும். குடும்ப நிலை மகிழ்வும் இருக்கும். உங்களின் ராசிக்கு குருபகவான் சஞ்சாரம் ரோகஸ்தானமாகிய 6ம் இடம் அமைவது சற்று சிறு சிறு மந்தமான பலன்கள் அமையும். மறைமுகமான எதிர்ப்புகள் தொழில் நிலையில் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலைகள் கொடுக்கும் நிலையுண்டு. அத்தோடு ராகு 6ம் இடமும் கேது 12ம் இடமும் அமைவது சிறு சிறு நன்மைகளும் அதிர்ஷ்ட பலன்களும் அமைகின்ற நிலையுண்டு. ஜூலை மாதத்தின்பின் குருவின் பலன் களத்திரஸ்தானமாகிய 7ம் இடம் அமைவது அனுகூலமான பலன்களை கொடுக்கும். குடும்ப நிலையில் மகிழ்வான பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமாக அமையும் நிலை உண்டு. எனவே ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கொடுக்கும். புதிய முயற்சிகள் நல்ல வெற்றிகளைத் தரும். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு மிகவும் மன மகிழ்வும் அனுகூலமான நிலைகளும் ஏற்படும் நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றகரமான நிலைகள் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறும் நிலையிருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் அமையும். எனவே உங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதி பலவகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் நிலைகள் இருக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் அமையும் பலாபலனும் உண்டு. நிறைவான நிலை அமையும். இந்த ஆண்டு நூற்றிற்கு 70% நன்மையுண்டு.
துன்னையூர் கலாநிதி ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்
எமது வரவு செலவு பட்டியலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விடயத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்டுபண்ணலாம் என்பது குடும்பத்தலைவிகளின் கவலை. ஜோதிட ரீதியாக நாம் வருடப்பலன்களை அறிகின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்பங்களை முற்று முழுதாக நீக்கி வெற்றி காண முடியாது.
பெரும் பிரச்சினைகளில் இருந்து விலகி ஓரளவிற்கு எமது நடைமுறை செயற்பாடுகளின் மூலம் தலைக்கு வரும் துன்பம் தலைப்பாகையுடன் செல்லும் நிலைக்கு எம்மை தயார்படுத்திக்கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்த 2016 ஆம் ஆண்டில் 09.01.2016 அன்று ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகின்றது.
கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ராகுவும் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி பெறுகின்றது. அத்தோடு 02.08.2016 அன்று குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி பெறுகின்றார்.
வருடம் முழுவதும் சனீஸ்வரன் விருட்சிக ராசியில் சஞ்சரிக்கின்றார். இதன் பலாபலன்களை ஒவ்வொரு ராசியினரும் அறிந்து அதற்கு ஏற்ப செயற்படும் போது பெரும்பாலான பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுக்கொள்ள முடியும். நாம் எமது எண்ணம் செயல் என்பனவற்றை தூய்மையாக கொண்டு செய்யும் தொழிலை நேர்மையாக செய்தாலே பல நன்மைகள் நம்மை சாரும்.
எனவே பிறக்கும் 2016ஆம் ஆண்டு அனைவருக்கும் அவரவர் எண்ணங்கள் நிறைவு காணவும் மனநிலையில் சந்தோஷம் பெருகவும் இனிமை, இங்கிதம், இன்பம் சேரவும் அன்னை ஆதிபராசக்தி அருள் பொழியட்டும்.
மேடராசி
( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம்பாதம்)
அன்பும் ஆதரவும் தெய்வ நம்பிக்கையும் அதிகம் கொண்ட மேட ராசி அன்பர்களே படபடவென முகத்திற்கு நேரே பேசுகின்ற சுபாவம் கொண்ட நீங்கள் நல்ல இதயம் படைத்தவர்கள். எல்லோருக்கும் உதவும் மனம் நிறைவாக கொண்டவர்கள். எதிரி என்று வந்துவிட்டால் கடைசி வரை மன்னிக்கவே மாட்டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்டிலே எப்படியான பலன்கள் சூழ இருக்கின்றது.
இந்த வருடம் முழுவதுமாக சனீஸ்வரன் அட்டமத்து சனியாக அமைவதால் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் குழப்பங்கள் அதிகம் இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குரு பகவான் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைகின்றார். 09.01.2016 முதல் சர்ப்ப கிரஹங்களான ராகு உங்களின் ராசி நிலைக்கு 5ஆம் இடமும், கேது உங்கள் ராசிக்கு 11ஆம் இடமும் அமைகின்றது. எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான நற்பலன்கள் கொடுக்கும் நிலை இருக்கும். 2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஓரளவிற்கு உங்களின் எண்ணங்கள் ஈடேறும் நிலையிருக்கும். தொழில் நிலைகளில் அலைச்சல் நிலை சற்று அதிகமாகவே இருக்கும்.
எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத நிலைகள் ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். எந்த விடயத்திலும் பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்பட வேண்டும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும் நிலை உண்டு. அட்டமத்து சனி திடீரென உடல்நிலை சுகவீனங்கள், மருத்துவ செலவுகள், சத்திர சிகிச்சைகள் போன்ற பலாபலன்களை கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் 5ஆம் இடத்து சஞ்சாரம் சொத்து விவகாரங்களில் பிரச்சினைகளை கொடுக்கும். கேதுவின் 11ஆம் இடம் சஞ்சாரம் ஓரளவிற்கு நல்ல தலயாத்திரைப் பலன் ஏற்படுத்தும். 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் எந்த விடயம் என்றாலும் சற்று பிரச்சினைகள் கொடுக்கும் நிலை இருக்கும்.
பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் அதிகமாக அமையும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவர்கள் சற்றுக்கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். எனவே 2016 ஜூலை மாதத்தின் மேல் சனீஸ்வரன் குரு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
அத்தோடு அம்மன் வழிபாடும் அனுகூலம் தருவதாய் அமையும். எனவே அதற்கு ஏற்ப பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்படுவது உங்களுக்கு மிகவும் நல்லது. மொத்தத்தில் இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 55% நன்மைகள் கொடுக்கும்.
இடப ராசி
(கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம்)
இறுக்கமான இதயமும் இன்சொல் இல்லாத பேச்சும் கொண்ட இடப ராசி அன்பர்களே உங்களுக்கு என சில வரையறைகள் வைத்துக்கொண்டு செயற்படும் நீங்கள் மற்றவர்களின் மனதை புரிந்து கொள்ள மாட்டீர்கள். யாருக்காகவும் எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்டு எப்படி இருக்க போகின்றது. ராசி நிலைக்கு சனீஸ்வரன் களத்திர ஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைகின்றார். வருடம் முழுவதும் இதே நிலை அமைவதால் குடும்ப நிலையிலே சற்றுக்குழப்பமான நிலைகள் தொடரும் நிலை இருக்கும். 2016 நடுப்பகுதி வரை குருவின் பலன் சுகஸ்தானமாகிய 4ஆம் இடம் அமைவதும் 09.01.2016 முதல் ராகு 4ஆம் இடமும் கேது 10ஆம் இடமும் அமைகின்றது. எனவே ஆண்டின் முற்பகுதி பல வகையிலும் அலைச்சல் இழுபறி நிலையைக் கொடுக்கும். தொழில் நிலைகளில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் இழுபறி நிலையிருக்கும். எதையும் நிதானத்தோடும் பொறுமையோடும் செயல்பட வேண்டும். உடல் நிலை உபாதைகள் திடீரென அமைகின்ற நிலைகள் ஏற்படும். 2016 நடுப்பகுதியின் மேல் குருவின் கோசார பலன் பஞ்சமஸ் தானமாகிய 5ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலை இருக்கும். ராகுவின் 4 ம் இடத்து சஞ்சாரம் திடீர் சுகவீனங்கள், மருத்துவ செலவுகள், தாயாருடன் மனச்சஞ்சல நிலைகள் இடையிடையே ஏற்படுத்தும். கேதுவின் 10 ம் இடத்து சஞ்சாரம் தொழில் நிலையில் அலைச்சல், வேலைப்பளு, மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் போன்ற பலாபலன்களை கொடுக்கும். எனவே உங்களின் அசட்டைத்தனத்தை விடுத்து சற்று நிதானமுடன் காரியங்களில் ஈடுபாடு கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமைகின்ற நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு உங்கள் ராசி நிலைக்கு ஆண்டின் முழுவதும் சனி ராகு கிரஹங்களின் பலன்கள் சுமாரானதாகவே அமைகின்றது. எனவே இவ்விரு கிரஹ வழிபாடும் மேற்கொள்வது மிகவும் நல்லது. அத்தோடு முருகன் வழிபாடும் நன்மை தரும். எதையும் சகித்துக்கொள்ளுகின்ற மனப்பக்குவம் கொண்ட உங்களுக்கு இந்த 2016ஆம் ஆண்டில் அமையும் பலன்களை சமாளிக்க கூடியதாகவே இருக்கும். உங்கள் ராசி நிலைக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் 2016 இல் உண்டு.
மிதுன ராசி
( மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)
அமைதியாக பேசி அடக்கமாக நடந்து ஆளுமையோடு செயல் ஆற்றி வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே யாராலும் உங்களின் செயல்பாடுகளை கணிக்க முடியாது. எதையும் ரகசியம் காத்து உங்கள் விடயங்களில் மட்டும் பயன்படுத்தி வெற்றி பெற்றுக்கொள்ளும் சாணக்கியர்கள் நீங்கள். உங்களின் ராசிக்கு 2016ஆம் ஆண்டிலே சனீஸ்வரனின் சஞ்சாரம் மிகவும் சிறப்பானதாக 6ஆம் இடத்தில் அமைகின்றார் வருடம் முழுவதுமாக.
எனவே எந்த விடயத்தையும் வெற்றி கொள்ள கூடிய ஆளுமைத்திறன் சிறப்பாக அமையும். குருவின் கோசார பலன் 2016 நடுப்பகுதி வரை ஜெயஸ்தானமாகிய 3ஆம் இடம் அமைவது அலைச்சல் நிலை சற்று அதிகமாக இருக்கும். 09.01.2016 முதலாக ராகு 3ஆம் இடமும் கேது 9ஆம் இடமும் அமைவது மிகவும் அனுகூலமான நன்மைகள் அமையும் நிலை இருக்கும். எந்த விடயத்தையும் வெற்றி கொள்ளக்கூடிய அனுகூலப்பலன்கள் அமையும். இருப்பினும் குருவின் பலன் நடுப்பகுதி வரை 3ஆம் இடமும் அதன் பின்னர் 4ஆம் இடமும் அமைவது தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அமையும். வழக்கு விவகாரங்களில் சிக்க வேண்டிய நிலைகளும் ஏற்படலாம். குடும்பத்தில் மனச்சஞ்சல நிலையும் உறவினர்களுடன் வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடுகளும் அமையும் நிலை இருக்கும். திருமணம் போன்ற விடயங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று இழுபறி தாமத நிலைகளை கொடுக்கும். பணவரவு மந்த கதியிலேயே அமையும். புதிய முயற்சிகளில் அவசரம் காட்டாமல் நிதானத்தோடு செயற்பட வேண்டும். பெண்களுக்கு மன நிலையிலே அதிகமான சஞ்சல நிலை அமையும். மாணவர்களுக்கு கல்வியில் அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் அமையும் குருவின் பலன் சிறு சிறு சிரமமான பலன்களை கொடுத்தாலும் எதிர்பாராத வகை நற்பலன்களும் இடையிடையே கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் ஜெயஸ்தானமாகிய 3ஆம் இட சஞ்சாரம் மற்றும் கேதுவின் பாக்கியஸ்தானமாகிய 9ம் இட சஞ்சாரம் என்பன எதிர்பாராத வகை பிரயாணங்கள், தலயாத்திரை போன்ற அனுகூலமான பலன்களை கொடுக்கும் நிலையும் ஏற்படும். எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு ஓரளவிற்கு நன்மைகள் தரும் ஆண்டாகவே அமையும். எனவே அதற்கு அமைய உங்களின் செயற்பாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்லது. இந்த 2016இல் நூற்றிற்கு 60% நன்மைகள் அமையும்.
கடக ராசி
( புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
காரியவாதிகளாக உங்களின் செயற்பாட்டில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் கடகராசி அன்பர்களே உங்களின் கலகலப்பான நடைமுறை அனைவரையும் கவர்ந்து விடும். ஆனால் அது உங்களின் காரிய வெற்றிக்கான செயல்பாடு என்பது பின்புதான் தெரிய வரும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் அதிகமாக கொண்ட உங்களுக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்வரனின் சஞ்சாரமானது பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடத்தில் அமைகின்றது. எடுக்கின்ற முயற்சிகளில் பொறுமையும் நிதானமும் மிகவும் முக்கியம். பூர்வீக சொத்துக்களின் மூலம் வழக்குகள் அமையும். தொழில் நிலை அலைச்சல் சற்று அதிகமாகவே அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குருவின் சஞ்சாரமானது தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் கொடுக்கும். உறவினர்களின் மூலமாக நன்மைகள் அமையும் நிலை இருக்கும். பண வரவு மிகவும் திருப்திகரமாக அமைகின்ற நிலை கொடுக்கும். 09.01.2014முதலாக ராகுவின் சஞ்சாரம் தனஸ்தானமாகிய 2ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் அட்டமஸ்தானமாகிய 8ஆம் இடமும் அமைகின்றமை சிறப்பான நிலை அல்ல. உடல் நிலையில் உபாதைகளும் எடுக்கின்ற முயற்சிகளில் அலைச்சல் நிலைகளும் தொடரும். தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். எதிலும் நிதானம் வேண்டும். 2016ஆண்டு நடுப்பகுதியின் மேல் குருவின் பலன் ஜெயஸ்தானமாகிய 3ம் இடம் அமைவது சிறப்பான நிலையாக இருக்காது. எனவே ஆண்டின் நடுப்பகுதியின் மேல் எந்த விடயம் எடுத்தாலும் அலைச்சல் பிரச்சினை தொடரும் நிலை இருக்கும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகளும் குடும்பத்தில் பலவிதமான நெருக்கடி நிலைகளும் ஏற்படுகின்ற பலன் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சற்றுக்கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். உழைப்பும் முயற்சியும் அதிகம் கொண்ட உங்களுக்கு உங்களின் சொத்துக்களின் மூலமாக ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகின்ற நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்களின் முயற்சி செயல்பாடு போன்ற விடயங்களில் மிக நிதானமாக காரியம் ஆற்ற வேண்டும். சனீஸ்வரன் குரு கிரஹங்களுக்கு வழிபாடு மேற்கொள்வது மிகமிக நல்லது.
அத்தோடு அம்மன் வழிபாடும் மேற்கொள்ளவும் அதிகமான உயரத்தை தொட வேண்டும் என்கின்ற எண்ணப்பாங்கு மிகவும் அதிகமாக கொண்ட உங்களுக்கு அதற்கேற்ப உழைப்பும் முயற்சியும் அதிகம் இருக்கும். எனவே தேவையற்ற விடயங்களைத் தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் பாடு உண்டு என இருப்பதே நல்லது. இந்த ஆண்டு நூற்றிற்கு 55% நன்மைகள் அமையும்.
சிம்ம ராசி
( மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்)
மனதைரியமும் தீர்க்கமான செயற்பாடும் நினைத்ததை சாதிக்கும் குணமும் கொண்ட சிம்மராசி அன்பர்களே யாருக்காகவும் உங்களின் நிலையில் இருந்து இறங்கி வரமாட்டீர்கள். எதையும் உங்களின் எண்ணப்படியே செய்து முடிப்பீர்கள். பிடிவாதமும் முயற்சியும் உங்களோடு என்றும் ஒட்டி நிற்பவை. உங்கள் ராசி நிலைக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்வரன் சஞ்சாரம் கண்டார்த்த சனியாக 4ம் இடத்தில் அமைந்து வருடம் முழுவதும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அத்தோடு குருவின் சஞ்சாரம் ஆண்டின் நடுப்பகுதி வரை ஜென்மக்குருவாக அமைவது அலைச்சல், குடும்பப்பிரிவு, வழக்கு விவகாரம், சிறைவாசம் போன்ற நிலைகளுக்கு ஒப்பான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகுவின் சஞ்சாரம் உங்களின் ராசி நிலையில் கேதுவின் சஞ்சாரம் களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடத்தில் அமைவது பல வகையிலும் அலைச்சல் நிலை இருக்கும். தொழில் நிலைகளில் வேலைப்பளுவும் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் அமையும் நிலை இருக்கும். எதிர்பாராத பணவிரயம் பொருள்விரயம் என்பன அமையும் பலன் இருக்கும். ஆண்டின் நடுப்பகுதியின் மேல் குருபகவான் தனஸ்தானமாகிய 2ம் இடம் அமைவதன் மூலமாக ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் அமையும். குடும்பத்திலே சுபகாரிய பலன்கள் ஏற்படும். எதையும் சமாளிக்கக்கூடிய தெம்பும் ஆற்றலும் இருக்கும். பெண்களுக்கு ஆண்டின் முற்பகுதி பலவிதமான பிரச்சினைகளை கொடுத்தாலும் பிற்பகுதி ஓரளவிற்கு இடையிடையே நன்மையான பலன்கள் கொடுக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் பெற முடியும். பொதுவாக சனீஸ்வரன் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. எதிர்பாராத வகை சுகவீனங்கள் மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும். மனநிலையில் அதிகமான யோசனைகள் அமையும். எனவே சனீஸ்வரன் வழிபாட்டுடன் உங்களின் ராசிநாத தெய்வம் அம்மன் வழிபாடும் மேற்கொள்ளவும். எனவே எதையும் சாதித்து வெற்றி கொள்ள வேண்டும் என்கிற துடிப்பும் ஆர்வமும் கொண்ட உங்களுக்கு 2016ஆம் ஆண்டு ஓரளவிற்கு நன்மைகள் கொடுக்கும். இந்த ஆண்டிலே உங்களுக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் உண்டு.
கன்னி ராசி
(உத்தரம் 2 ,3, 4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்)
எப்போதும் மனதிலே ஏதேனும் ஒரு சிந்தனை கொண்டவராக குழப்ப நிலை அதிகம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, உங்களைப்பற்றிய பிரச்சினை அல்லது உறவினர் நண்பர்கள் பற்றிய பிரச்சினை என்பனவற்றை உங்களுக்குள் வாங்கி அதிகமான போராட்ட நிலைகளை கொண்டு சிரமப்படுவீர்கள். இந்த 2016ஆம் ஆண்டு உங்களுக்கு வருடம் முழுவதுமாக சனீஸ்வரனின் சஞ்சாரம் ஜெயஸ்தானம் எனப்படும் 3ஆம் இடம் அமைவது சிறப்பான நிலையே. குருவின் சஞ்சாரம் ஆண்டின் நடுப்பகுதி வரை விரயஸ்தானமாகிய 12ஆம் இடம் அமைவதால் எதிர்பாராத சுபச்செலவுகள் அமைகின்ற நிலை இருக்கும். 09.01.2016 முதலாக ராகு 12ம் இடமும் கேது 6 ம் இடமும் அமைவது சிறப்பான அனுகூலமான பலன்கள் கொடுக்கும் நிலையிருக்கும். எனவே முற்பகுதியில் ஓரளவிற்கு உங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடியதான நிலைகள் அமைந்திருக்கும். தொழில் நிலைகளில் ஓரளவிற்கு நன்மையான நிலைகள் இருக்கும். சனீஸ்வரன் ராகு கேது பலன்கள் இந்த 2016ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு அனுகூலம் தருவதாகவே அமையும் நிலையுண்டு. எனவே தொழில்நிலை குடும்பநிலை என்பன ஏற்புடைய நற்பலன்களை கொடுக்கும். இருப்பினும் ஆண்டின் நடுப்பகுதியின் மேல் 2016 ஜூலை மாதத்தின் பின் குருவின் கோசார சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய முதலாம் இடம் அமைவது சற்றுப்பிரச்சினைகள் சிக்கல் நிலைகளை கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை தாமத நிலைகள் இருக்கும். உடல்நிலையில் திடீர் சுகவீனம், மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும். தொழில் நிலைச்சிக்கல்களும் அமையும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமைய இடமுண்டு. பிற்பகுதியில் நிதானம் தேவை. மாணவர்கள் கல்வி நிலையில் சற்று இறுக்கமான நிலைகள் இருக்கும். கூடுதலான முயற்சியும் நிதானமும் வேண்டும். எனவே 2016ம் ஆண்டு முற்பகுதி உங்களின் பலாபலன் ஓரளவிற்கு அனுகூலமான நிலைகளை கொடுக்கும். எந்த விடயத்தையும் ஒன்றுக்கு பலமுறை ஆலோசித்து செயற்படுகின்ற உங்களுக்கு அதற்கு ஏற்ப காரியங்களை நகர்த்தி செயல்படவும் முடியும். எனவே அதை தெரிந்து செயற்படுங்கள். இந்த ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 55% நன்மை தரும்.
துலாம் ராசி
( சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
எதைச்செய்தாலும் அதை சரியாக நேர்மையாக செய்ய வேண்டும் எனும் மனநிலை கொண்ட துலா ராசி அன்பர்களே, ஒரு தவறைச் செய்தாலும் அதற்கு ஏற்ப பிராயச்சித்தம் செய்து கொள்ளுகின்ற உங்களின் மனச்சாட்சிக்கு பயம் கொள்ளும் குணயியல்பு உங்களுக்கு உரிய தனித்துவமான குணமாகும். 2016ஆம் ஆண்டிலே உங்கள் ராசி நிலைக்கு ஏழரைச்சனி கடைக்கூற்றுச் சஞ்சாரம் வருடம் முழுவதும் அமைகின்றது. எனவே சிறு சிறு காரியத்தடைகளும் குடும்ப நிலையில் மந்தமான மத்திமமான பலன்களும் அமைகின்ற நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்சாரம் ஜூலை மாதம் வரை லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது தொழில் நிலைச்சிறப்பும், நல்ல பணவரவும் அமையும் நிலையிருக்கும்.
புதிய முயற்சிகள் அனுகூலமான நன்மைகளை கொடுக்கும்.
திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலை இருக்கும். மற்றும் ஜனவரி 09 முதலாக ராகு 11ஆம் இடமும் கேது 5ஆம் இடமும் அமைவதும் ராகுவின் 11ஆம் இடச்சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் கொடுக்கும். தொழில் நிலைச்சிறப்புக்கள் அமைகின்ற நிலை இருக்கும். கேதுவின் 5ஆம் இடச்சஞ்சாரம் பூர்வீக சொத்து விடயங்களில் சிக்கல் நிலை புத்திரர்களால் மனச்சஞ்சல நிலை போன்ற பலன்களை ஏற்படுத்தும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் கோசார பலன் விரயஸ்த்தானம் எனப்படுகின்ற 12 ம் இடம் அமைவது எதிர்பாராத செலவீனங்கள் ஏற்படுகின்ற நிலை இருக்கும்.
மனநிலையில் சிறு சிறு குழப்ப நிலை இருக்கும். இருப்பினும் பெரும் சிரமங்கள் ஏற்படக்கூடிய நிலைகள் இருக்காது. ஏழரைச்சனி நிறைவு பெறுகின்ற காலத்தை இவ்வருடம் எட்டுவதால் எதிர்பாராத வகை திடீர் நன்மைகள் அமையும் நிலை இருக்கும். பொதுவாகவே பெண்களுக்கு திடீர் அனுகூலமான பலன்கள் அமையும் நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நிலைச்சிறப்புக்கள் நன்மை தருவதாக அமையும். எதையும் சமாளிக்கக்கூடிய நிலை அமையும்.
எதையும் மிகவும் நேர்த்தியாக செய்யும் உங்களுக்கு எதிரிகளும் பிரச்சினைகளும் மிகவும் அதிகமாக இருக்கும் நிலை உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்படவும். நூற்றிற்கு 70% உங்களுக்கு நன்மை உண்டு. (தொடரும்)
விருட்சிக ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
தயக்கமின்றி எதையும் துணிவோடு செய்யும் ஆற்றலும் அயராத முயற்சியும் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே! உங்களின் குண இயல்பானது எந்த விடயத்தையும் ஆராய்ந்து அதிலே உங்களுக்கு உரிய வெற்றி நிலையை தெளிவாக பெற்றுக்கொள்ளுகின்ற நடைமுறையாகும். அந்த வகையில் பல விடயங்களிலும் நீங்கள் சுயநலத்தோடு தெளிவாக செயற்படுவீர்கள். இந்த 2016 ஆம் ஆண்டு உங்களுக்கு ஜென்மச்சனி எனப்படும் ஏழரைச்சனியின் நடுச்சுற்று சஞ்சாரம் நடைபெறுகின்றது.
எனவே எதிர்பாராத திடீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கும். தொழில் நிலைகளில் தேவையற்ற பிரச்சினைகள் உங்களைச்சூழுகின்ற பலன் அமையும். மருத்துவ செலவு சத்திர சிகிச்சை போன்ற பலன்களும் அமையும். பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். அத்தோடு குருவின் கோசார நிலை ஜீவனஸ்தானமாகிய 10ம் இடம் அமைவதால் தொழில் நிலைகளில் அலைச்சலும் திடீர் இடமாற்றங்களும் தொழில் சார்ந்த பிரயாணங்களும் அமையும் நிலை இருக்கும்.
எனவே பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். ஜனவரி 9 முதல் ராகுவின் சஞ்சாரம் 10ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் 4ம் இடமும் அமைகின்றன. எனவே இவ்விரு சஞ்சாரமும் சற்று சிக்கல் நிலைகளையே கொடுக்கும். 2016 ஆண்டு நடுப்பகுதியின் மேல் குருவின் சஞ்சாரம் லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அமையும் நிலையுண்டு. இருப்பினும் வருடம் முழுவதும் ஏழரைச்சனியின் ஜென்ம சஞ்சாரம் சிக்கல் நிலைகள் போராட்ட நிலைகள் கொடுத்த வண்ணமே இருக்கும். எனவே அதற்கு ஏற்ப நிதானமான செயற்பாடு கொள்வதே மிக நல்லது. பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் ஆண்டின் நடுப்பகுதியின் மேல் அமையும். மாணவர்கள் நிதானமுடன் செயற்பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். எனவே பொதுவாக இந்த 2016ம் ஆண்டு போராடி ஜெயிக்க வேண்டிய நிலையே அதிகமாக அமைகின்றது.
குடும்ப நிலைகளில் திடீரென பிரச்சினைகள் ஏற்படும் நிலை இருக்கும். பொருள் நஷ்டம், பண விரயம், வழக்கு விவகாரம் போன்ற பலன் திடீரென உங்களைச்சூழுகின்ற பலன்கள் அமையும். எனவே அதற்கு ஏற்ப செயற்பாடு கொள்ளவும். உங்களின் காரியங்களில் அதிகமான ஆர்வமும் ஊக்கமும் கொண்டு செயற்பட்டு எந்த நிலையிலும் வெற்றி பெறும் அயராத முயற்சி கொண்டவர்கள் நீங்கள். இந்த ஆண்டு நூற்றிற்கு 55% நன்மைகள் தரும் நிலையுண்டு.
தனுசு ராசி
(மூலம், பூராடம், உத்தராடம், 1ம்பாதம்)
தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் துணிவும் அதிகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே! எதை எங்கே எப்படி செய்ய வேண்டும் என்கின்ற சூட்சுமம் தெரிந்தவர்கள் நீங்கள். உங்களுக்கு தெரியாத சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட உங்களின் தலையீடு அமைய நேரிட்டால் அதிலும் ஏதோ ஒரு வகையில் வெற்றிகளை பெற்று விடுகின்ற ஆளுமை கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு 2016ஆம் ஆண்டு ஏழரைச்சனி சஞ்சாரம் முதற்கூற்று நிலை வருடம் முழுவதும் அமைகின்றது. குருவின் சஞ்சாரம் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைந்திருக்கின்றது.
எனவே ஆண்டின் நடுப்பகுதிவரை அனுகூலமான நன்மைகள் அமையும். தொழில் நிலைச்சிறப்புகள் நல்ல மேன்மை தரும். குடும்பத்தில் மகிழ்வும் சுபகாரிய பலன்களும் அமைகின்ற நிலை இருக்கும். எந்த விடயம் என்றாலும் வெற்றிகளாக அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகு 9ம் இடமும் கேது 3ம் இடமும் அமைவதும் சிறப்பான நிலையே. உங்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமிருக்கும். 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் ஜீவஸ்தானமாகிய 10ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் மறைமுக எதிர்ப்புக்களும் வேலைப்பளுவும் அதிகமிருக்கும். தொழில் சார்ந்த வெளிநாட்டுப்பிரயாணங்களும் அமையும் நிலை இருக்கும். இருப்பினும் தொழில் நிலையில் பெரும் சிரமங்கள் அமைய இடமில்லை. ஏழரைச்சனியின் சஞ்சார பலன் இடையிடையே உடல் நிலை உபாதைகள் திடீர் செலவீனங்கள் போன்ற நிலைகளைக்கொடுக்கும். குடும்ப நிலையிலும் புத்திரர்கள் மூலம் சஞ்சலமான நிலைகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு அனுகூலமான நன்மைகள் அமையும் நிலை உண்டு. மனதிலே மகிழ்வும் எதிர்பார்ப்புக்களில் நிறைவும் அமையும் நிலை உண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலையில் அனுகூலமான வெற்றிகள் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறக் கூடிய நிலை இருக்கும். பொதுவாக உங்களின் ராசி நாதன் குருபகவானாக இருப்பது எதையும் சிந்தித்து செயல்படுகின்ற குண இயல்பு அதிகமாக அமைந்திருக்கும். நீங்கள் நினைக்கும் விடயங்களை எப்படியும் தொட்டு விடுகின்ற முயற்சி ஆளுமை உழைப்பு என்பன உங்களின் தனித்துவமாகும். எனவே அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்க. இந்த 2016ம் ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 65% நன்மை தரும்.
மகர ராசி
(உத்தராடம் 2 ,3, 4 பாதம் திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம்)
மனதிலே படும் விடயங்களை முகத்திற்கு நேரே பேசி விடுகின்ற குண இயல்பு கொண்ட மகர ராசி அன்பர்களே!
உங்களின் தைரியமான செயற்பாடு பல விடயங்களிலும் உங்களுக்கு வெற்றி தருகின்றதாய் அமைகின்றது. எதையும் சாதிக்கக் கூடிய துணிவு கொண்டவராய் செயற்படுகின்றீர்கள். உங்களின் ராசிக்கு 2016ஆம் ஆண்டு சனீஸ்வரன் சஞ்சாரம் லாபஸ்தானமாகிய 11ம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்களை வருடம் முழுவதும் கொடுக்கும் நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்சார நிலையானது 2016 ஜுலை மாதம் வரை அட்டமஸ்தானமாகிய 8ம்இடம் அமைந்திருப்பது எடுக்கின்ற முயற்சிகளில் சிறு சிறு தடைகள் தாமத இழுபறி நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். உடல் நிலை உபாதைகளும் மருத்துவ செலவும் அமையும். அத்தோடு ராகுவின் சஞ்சாரம் 8ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் 2ம் இடமும் அமைவது சற்று மந்தமான பலனாகவே இருக்கும். இருப்பினும் 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் பலன் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைவது எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகளும் தொழில் நிலைச் சிறப்புக்களும் அமையும் நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்வான பலன்களும் உறவினர்களுடன் நல்ல அணுகு முறையான நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய பலா பலன்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். எனவே ஆண்டின் பிற்பகுதியானது மிக மிக சிறப்பானதாக அமையும். சனீஸ்வரனின் லாபஸ்தான சஞ்சாரம் குருவின் பாக்கியஸ்தான சஞ்சாரம் என்பன மிகவும் அனுகூலமான நிலையைக் கொடுக்கும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையில் அமையும். பெண்களுக்கு மன மகிழ்வும் எதிர்பார்ப்புக்களில் வெற்றியும் கிடைக்கும் நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நல்ல முன்னேற்றகரமானதாக இருக்கும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறலாம். எனவே உங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் நிலையாக 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியின் மேல் உங்களுக்கு மிகச் சிறப்பான பலன் அமையும். எதையும் வெற்றி கொள்ள முடியும். 2016ஆம் ஆண்டு நூற்றிற்கு 75% நன்மைகள் தரும்.
கும்ப ராசி
(அவிட்டம் 3, 4ம் பாதம் சதயம் பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)
உங்களின் உயர்வு நிலையை எப்படி மேலோங்க செய்யலாம் எனும் எண்ணமும் செயலும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே பல விடயங்களிலும் உங்களின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இடம் பொருள் ஏவல்களுக்கு ஏற்ப வெற்றிகளையும் பெற்றுக் கொள்ளும் உங்களின் சாணக்கியம் அற்புதமானது. 2016ஆம் ஆண்டு முழுவதும் சனீஸ்வரன் உங்கள் ராசி நிலைக்கு ஜிவனஸ்தானமாகிய 10 ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் சிக்கல்களும் வேலைப்பளுவும் திடீர் இடமாற்றமும் அமையும் நிலை இருக்கும். ஜனவரி 9முதலாக ராகுவின் சஞ்சாரம் களஸ்திரஸ்தானமாகிய 7ம் இடமும் கேதுவின் சஞ்சாரம் ஜென்மஸ்தானமாகிய 1 ஆம் இடமும் அமைவது குடும்ப நிலையில் பலவிதமான குழப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதம் உறவினர்களுடன் மனச் சஞ்சலம் தேவையற்ற வீண் பிரச்சினைகள் என்பன ஏற்பட்டு மறையும் நிலை இருக்கும். ஜூலை மாதம் வரை குருவின் பலன் 7ஆம் இடம் அமைவது இடையிடையே சிறு சிறு நன்மையான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் பலன் அட்டமஸ்தானம் எனும் 8ம் இடம் அமைவது பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். எதையும் தீர்க்கமாக செய்ய முடியாத நிலை இருக்கும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை இருக்கும். உடல் நிலை உபாதைகளும் மருத்துவ செலவு என்பன அமையும் நிலை இருக்கும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலையும் தேவையற்ற உறவினர்களின் பிரச்சினைகளும் எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப நிலையில் சிக்கல் இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்சைகளில் நிதானமான முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டிலே அமையும் கோசார பலா பலன்களின்படி எந்த விடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். உங்களின் மன நிலையில் பலவிதமான பிரச்சினைகள் சூழும் நிலையும் இந்த 2016 ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 45% நன்மையுண்டு.
மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)
எல்லா இடங்களிலும் உங்களின் பதிவுகளை நிலை நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணம் கொண்ட மீனராசி அன்பர்களே உங்களின் மனநிலை தைரியம் அதிகமானது. நீங்கள் எதைச் செய்தாலும் அதிலே உங்களின் செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் உங்களிடம் அதிகமாக இருக்கும். மிடுக்கான குணமும் கோபமும் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 2016ம் ஆண்டு சனீஸ்வரன் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றம் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமாக அமையும். குடும்ப நிலை மகிழ்வும் இருக்கும். உங்களின் ராசிக்கு குருபகவான் சஞ்சாரம் ரோகஸ்தானமாகிய 6ம் இடம் அமைவது சற்று சிறு சிறு மந்தமான பலன்கள் அமையும். மறைமுகமான எதிர்ப்புகள் தொழில் நிலையில் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலைகள் கொடுக்கும் நிலையுண்டு. அத்தோடு ராகு 6ம் இடமும் கேது 12ம் இடமும் அமைவது சிறு சிறு நன்மைகளும் அதிர்ஷ்ட பலன்களும் அமைகின்ற நிலையுண்டு. ஜூலை மாதத்தின்பின் குருவின் பலன் களத்திரஸ்தானமாகிய 7ம் இடம் அமைவது அனுகூலமான பலன்களை கொடுக்கும். குடும்ப நிலையில் மகிழ்வான பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமாக அமையும் நிலை உண்டு. எனவே ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கொடுக்கும். புதிய முயற்சிகள் நல்ல வெற்றிகளைத் தரும். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு மிகவும் மன மகிழ்வும் அனுகூலமான நிலைகளும் ஏற்படும் நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றகரமான நிலைகள் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறும் நிலையிருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் அமையும். எனவே உங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதி பலவகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் நிலைகள் இருக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் அமையும் பலாபலனும் உண்டு. நிறைவான நிலை அமையும். இந்த ஆண்டு நூற்றிற்கு 70% நன்மையுண்டு.
துன்னையூர் கலாநிதி ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக