வெள்ளி, 4 மார்ச், 2016

6 மாத கால­மாக 5 வயது சிறு­மியின் மூக்­கி­லி­ருந்த 1.5 அங்­குல பூட்­டூசி (safety pin)

கடந்த ஆறு மாத கால­மாக கடும் சளியால் பாதிக்­கப்­பட்டு மருத்­துவ சிகிச்சை பெற்றும் குண­ம­டை­யாத 5 வயது சிறு­மி­யொ­ரு­வரின் மூக்கில் 1.5 அங்­குல நீள­மான பூட்­டூசி இருப்­பது கண்­ட­றி­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.


கலி­போர்­னிய ஹெமெட் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கலோ என்ற மேற்­படி சிறுமி 6 மாத காலத்­திற்கு முன்னர் அந்த பூட்­டு­சியை மூக்கில் வைத்து விளை­யா­டிய போது அது அவ­ரது மூக்­கினுள் உறிஞ்­சப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அந்த சிறு­மி­, ­மேற்­படி சம்­ப­வத்தை முழு­மை­யாக மறந்­துள்ளார்.
இத­னை­ய­டுத்து கடும் சளியால் பாதிக்­கப்­பட்ட சிறு­மியை மருத்­து­வர்­க­ளிடம் சிறு­மியின் தாயா­ரான கத்­தலின் பவல் அழைத்துச் சென்ற போது, சிறு­மிக்கு சாதா­ரண சளிச்­சுரம் இருப்­ப­தாக கருதி நோயெ­திர்ப்பு மாத்­தி­ரை­களை மருத்­து­வர்கள் வழங்­கி­யுள்­ளனர்.

எனினும் சிறுமி குண­ம­டை­யா­ததால் திகைப்­ப­டைந்த சிறு­மியின் மாமனார், மூக்கை பலமாக சீறு­மாறு சிறு­மியை பணித்­துள்ளார்.

அதனை செவி­ம­டுத்து சிறுமி சீறிய போது அவ­ரது மூக்­கி­லி­ருந்து பூட்­டூசி வெளியே வந்து விழுந்­துள்­ளது.

இதனையடுத்து சிறுமி, 6 மாத காலத்துக்கு முன்னர் பூட்டூசியை மூக்கில் நுழைத்து விளையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல