ஞாயிறு, 27 மார்ச், 2016

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும்.



அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். அதை பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அது கவலை அளிக்கும் அம்சம் ஆகும்.

நிபுணர்கள், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கருப்பு நிற உதிரம், பெண்ணின் யோனியில் இருந்து மெதுவான விகிதத்தில் உதிரம் வெளியேறுவதைக் குறிக்கின்றது, என தெரிவிக்கின்றார்கள்.

மறுபுறம், பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பொழுது அதிக வலியை அனுபவிக்கக் கூடாது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அதிக வலியானது நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

எனவே, இன்று, நாம் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரத்தின் நிறம் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உங்களுக்கு இங்கே குறிப்பிடப்படும் அறிகுறிகள் எதேனும் தென்பட்டால் அதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு கண்டிப்பாக மேல் சிகிச்சையை தொடருங்கள்.

பழுப்பு நிறம்
அடர் பழுப்பு இரத்த நிறம், பழைய இரத்தத்தை குறிக்கிறது. நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த இரத்தம், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது. இந்த வகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.

சிவப்பு நிறம்
இது புதிய இரத்தத்தைக் குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறுகின்றது. இந்த வகை இரத்தம் உதிரப் போக்கு அதிகம் உள்ள நாட்களில் காணப்படும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகின்றது.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறம்
இது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாள் காணப்படுகிறது. நிபுணர்கள் ஒரு நீண்ட கால மாதவிடாய் சுழற்சி இல்லாதவர்களுக்கு கருப்பை சுவரின் அசுத்தங்கள் உதிரத்தின் வழியாக மெதுவான விகிதத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரிவிக்கின்றார்கள். மேலும் காலப்போக்கில், இந்த குருதிநெல்லி நிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.

கருப்பு அல்லது பழுப்பு நிறம்
இந்த வண்ணம் மிகவும் ஆபத்தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவு செய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள். பழுப்பு அல்லது கருப்பு நிற இரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது. எனினும், மாதவிடாய் தொடங்கி 4 வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்பு நிற திட்டுக்களை நீங்கள் காண நேரிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது. ஆகவே இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

ஆரஞ்சு நிறம்
கருப்பை வாயிலிருந்து திரவங்கள் வெளியேறி உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த வண்ணம் காணப்படுகிறது. இதில் பிரகாசமான ஆரஞ்சு வண்ணம் உங்களுக்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கின்றது. எனவே, நீங்கள் இந்த ஆரஞ்சு நிறம் அல்லது சிவப்பைத் தவிர்த்து வேறு ஏதேனும் நிறத்தில் உதிரத்தை உங்களுடைய மாதவிடாய் காலத்தில் காண நேரிட்டால், அதைப் புறக்கணிக்காமல் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்.

thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல