செவ்வாய், 15 நவம்பர், 2016

யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூழியர்களின் கள்ளத்தொடர்பு

யாழ் போதனா வைத்தியசாலை கடைநிலை சிற்றூழியர்களின் திருகுதாளங்கள் ஆதாரங்களுடன் எமது புலனாய்வு செய்தியாளர்களிடம் சிக்கியுள்ளது.



பிறப்பும் இறப்பும் உலக நியதி. ஆனால் கருவறையில் இருந்து கல்லறை வரை ஒவ்வொரு சடங்குகளிலும் மனிதனை பயன்படுத்தி பணம் உழைக்கும் கூட்டம் ஒன்று சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றது.

தொழில் ரீதியான சாதி பிரிப்புக்களுக்கும் சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சரி விடயத்திற்கு வருவோம்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இறந்த பிணத்தை வீடு கொண்டு செல்வது என்பது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் போன்றது.

சட்ட வைத்தியர், வைத்தியசாலை நிர்வாகம் தமது பணிகளை ஒழுங்காக செய்து இறந்த பிணத்தை வீடு கொண்டு செல்ல அனமதி பாஸ் கொடுத்த பின்பு மக்கள் படும்பாடு வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.

செத்த பிணத்தை வைத்து பல வியாபாரங்களை செய்கின்றனர் யாழ் போதனா வைத்தியசாலை கீழ் சாதி கடைநிலை அரச ஊழியர்கள்.

அவர்களால் இறந்த பிணத்தை இலகுவாக வீடு கொண்டு செல்ல போடப்படும் நிபந்தனைகள்

1- தமக்கு தெரிந்த மலர்சாலை கடையில் சவப்பெட்டி வாங்க வேண்டும்.

2- 5000 தொடக்கம் 8000 வரை இலஞ்சத்தை அவர்களுடைய பொக்கற்றில் வைக்க வேண்டும்.

3- சாராய போத்தல் வாங்கி கொடுக்க வேண்டும்.

4- அவர்களை ஐயா அண்ணை சேர் போட்டு கதைக்க வேண்டும்( கெஞ்ச வேண்டும் )

சில பணக்காரர்கள் உடனடியாக பிணத்தை வீடு கொண்டு சென்று இறுதி கிரிகை செய்ய வேண்டும் என்பதற்காக குறித்த நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

ஆனால் ஏழைகள் படும் பாடு சொல்ல முடியாது.

இவ் அவலங்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உடனடியாக தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட மக்கள் சார்பாக கோரிக்கை விடுகின்றோம்.

சிற்றூழியர்களுக்கும் சவப்பெட்டி கடைகளுக்கும் உள்ள கள்ள தொடர்புகளை பெயர் விபரங்களாக வெளியிட உள்ளோம்.
( இவ் செய்தியுடன் தொடர்பில் இருங்கள் )

பாதிக்கப்பட்ட மக்கள் உங்கள் முறைப்பாடுகளை எமது இணையதளத்துக்கு அறிவிக்க முடியும்.

NewJaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல