சனி, 19 நவம்பர், 2016

நடுரோட்டில் வைத்து அடித்து, பின்பு உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்!:

 The young boy was beaten and set on fire after being accused of robbing locals and businesses in Lagos, Nigeria

நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது.
குறித்த கொடூர சம்பவம் லாகோஸ் மாநிலம் Badagry மாவட்டத்திலே நடந்துள்ளது.



சிறுவன் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அப்பகுதியினர் சிறுவன் செய்த குற்றத்திற்காக அவனை கொடூரமாக அடித்து உயிரோடு தீ வைத்து எரித்துள்ளனர்.

வெளியான வீடியோவில், சிறுவன் முகத்தில் இரத்தத்துடன் இரண்டு கால்களும் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடக்கிறான், ஒரு கும்பல் அவனை சரமாரியாக தாக்குகிறது.

இதை மக்கள் யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். சிறுவன் தனது உயிருக்காக அவர்களிடம் கெஞ்சுகிறான்.

ஆனால், நபர் ஒருவர் டயர் மீது எரியும் தன்மை உடைய திரவத்தை ஊற்றி அதை சிறுவனின் கழுத்தில் மாட்டி தீ வைத்து உயிரோடு எரிக்க முயற்சிக்கிறான்.

எனினும், சிறுவன் டயர் தள்ளிவிட்டு தப்பிகின்றான். இறுதியில், அந்த கும்பல் சிறுவன் மீது எரியும் திரவத்தை ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர்.

குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது. இதை கண்ட ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், சம்பவம் குறித்து பொலிசார் இன்னும் வாய்திறக்காமல் உள்ளனர்.

 A large crowd gathered to see the boy being killed after allegedly being caught stealing from a supermarket


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல