ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இறந்தவர்களை தோண்டியெடுத்து மேக்கப் போட்டு பண்டிகை கொண்டாட்டம் – (வீடியோ)

இறந்த தங்களது உறவினர்கள் உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு ஒப்பனைகள் செய்து பண்டிகை கொண்டாடும் மக்கள்!



இறந்தவர்களை தோண்டியெடுத்து அந்த சடலத்துடன் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விநோத பண்டிகை இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்கள், உலகத்துக்கு மட்டுமல்ல, இந்தோனேஷிய நாட்டுக்கே பரீட்சியப்படாதவர்கள்.

இவர்களை பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே முழுமையாக தெரியாது.

இந்த மக்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களது உறவினர்கள் யாரும் இறந்துவிட்டால், அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்து, அழகு ஒப்பனைகள் செய்து தங்களது அன்பினை பகிர்ந்துகொள்கின்றனர்.

அதாவது, ஒரு நபர் இறந்து 3 வருடங்களுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதற்காகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்த பண்டிகை மிக முக்கியமான பண்டிகை என்பதால், இந்த மக்கள் தங்கள் உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். வேற்று இனத்தவர்களுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை.









Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல