வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நேரடி ஒளிபரப்பில் பன்றிக்கு பாலூட்டிய பெண் : அதிர்ச்சியடைந்த தொகுப்பாளர்! – வீடியோ

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.



இதில் குறிப்பாக விலங்குகள் பண்ணை வைத்து நடத்தியவர்களின் விலங்குகள் பாதிக்கப்பட்டதால் அவர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள Lima என்ற நகரில் பண்ணை வைத்து நடத்தி வரும் பெண்மணியிடம், வெள்ளப்பெருக்கின் காரணமாக அவரது பண்ணைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

நேடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பண்ணையின் உரிமையாளரான அந்த பெண்மணி தனது பண்ணைக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில், தனது கையில் வைத்திருந்த பன்றி குட்டிக்கு தனது ஆடையை விலக்கிவிட்டு பாலூட்டியுள்ளார்.

இவரின் இச்செயலால் நிலைகுலைந்த கமெராமேன், தனது கமெராவை வேறுபக்கம் திசைதிருப்பியுள்ளார், மேலும் தொகுப்பாளரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு ஒருவரிடம் பேட்டி எடுக்க சென்றுவிட்டார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல