திங்கள், 1 மே, 2017

மியன்மார் அகதிகளுக்கு உதவ சில அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் நிதிசேகரிக்க முயற்சி..!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தற்போது விளக்கமறியலில் உள்ள மியன்மார் அகதிகளுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு சில அடையாளம் தெரியாத நபர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் தகவல்களை பரப்பி நிதிசேகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.



காங்கேசந்துறை கடல் மார்க்கமாக தத்தளித்த 30 மியன்மார் அகதிகள் தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கான அத்தியாவசிய உதவிகள் பலரால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இப்பகுதியில் உள்ள தனிப்பட்ட நபர்கள் வைத்துள்ள முகவரியற்ற அமைப்புக்கள் மக்களால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள் குறித்த மியன்மார் அகதிகளிற்கு தங்கள் ஊடாக உதவிகளை பெற சமூக ஊடகங்களை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.









Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல