செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஓவியாவுக்காக இலங்கையை சேர்ந்த கலைஞர்கள் பாடல் வெளியிட்டுள்ளார்கள் (video)

கோலிவுட்டில் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நிலைமையே வேறு. கோலிவுட்டில் அவரின் மவுசு அதிகரித்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.



பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா கிளம்பிச் சென்றாலும் ஓவியா ஆர்மி இன்னும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளது. ஓவியாவை புகழ்ந்து கொண்டிருக்கிறது ஆர்மி.

இலங்கையை சேர்ந்த கலைஞர்கள் பிரேம் ராஜ், யஜீவன், பிரசாதன், ரமேஷ்காந்த், பிரபு ஆகியோர் வந்துட்டேன்னு சொல்லு என்ற ஓவியா ஆர்மி பாடலை பாடி வெளியிட்டுள்ளார்கள்.

பாடலில் ஓவியாவின் குணம், அவர் பிக் பாஸ் வீட்டில் பேசியது ஆகியவற்றை தெரிவித்துள்ளனர். இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஓவியா பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்பினாலும் அவருக்கு விருப்பம் இல்லை. படத்தில் என்னை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார் ஓவியா.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல