2004 ஆம் ஆண்டிலிருந்து Yahoo Chatroom பழக்கம். Yahoo chatroom ல் Crossdressers என்று ஒரு பிரிவே இருக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்து பெருமைகொள்வார்கள். சிலருக்கு அது போதையாகவே மாறியது. தான் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி இருப்போம். அழகும், கவர்ச்சியும் சேர்ந்தால் நாம் எப்படி இருப்போம் என்று ரசிப்பது என்பது ஒருவகையான Crossdressers மனநிலை தான். இதில் தவறேதும் இல்லை.ஆனால் Face app போன்ற செயற்கை அறிவாற்றல் கொண்ட செயலிகளைப் பயன்படுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Face app செயலியை பயன்படுத்துவோருக்கெல்லாம் Deep Nude என்ற சொல்லாடலையோ அல்லது செயற்கை அறிவாற்றலால் உருவாக்கப்படும் நிர்வாணப் படங்கள் பற்றியோ தெரிந்திருக்கவோ, கேள்விப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை.
எக்காலத்திலும் ஆபாசப்படங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட் உண்டு. இப்போது இந்த Face app போன்ற செயலிகளில் நீங்கள் உருமாற்றம் செய்ய பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு படமும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஓர் புதிய உள்ளீடு. பல வகையான உள்ளீடுகளையும், சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நபர்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து #Deepnude வணிகம் இயங்கும். பின்னாளில் இது மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூட வாய்ப்புண்டு.
எவ்வளவுதான் மிக பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும், பலரும் அதிக நேரம் செலவிடுவது சோஷியல் மீடியாவில்தான் என்றால் அது மிகையல்ல. இதனிடையே சமீபகாலமாக சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகின்றன Face App புகைப்படங்கள்.
எதிர்காலத்தில் ஒருவருடைய முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த ஃபேஸ் ஆப்பில் உள்ள ஃபில்டர் மூலம் காண்பிக்கப்படுகிறது. இதனை பல்வேறு தரப்பினர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அதுதொடர்பான மீம்ஸ்களும் உலவி வருகின்றன.
இந்நிலையில் Face App ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் ஸ்மார்ட்ஃபோன்களில் முடக்கப்பட்டு உள்ளதாக பலர் ட்விட்டர் வாயிலாக புகார் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த Face App பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் சமூக வலைதளவாசிகள் இதனை பொழுதுபோக்கு என்கிற பேரில் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் அப் செயலி பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட் ஃபோன் கேலரியில் உள்ள புகைப் படங்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த Wireless Lab என்ற நிறுவனம் வடிவமைத்த செயலிதான் ஃபேஸ் ஆப். இது கடந்த 2017ம் ஆண்டே பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதே இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த ஃபேஸ் ஆப் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்பிள் ஐ ஸ்டோரில் இலவச செயலிகள் வரிசையில் முதலிடத்திலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் முன்னிலை வகிக்கிறது ஃபேஸ் அப். இருந்தாலும் அச்செயலி மீதான குற்றச்சாட்டு களையப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப செய்தியாளர் ஸ்காட் பட்மேன் என்பவர், ஃபேஸ் அப் நமது அந்தரங்க தரவுகளை திருடுவதாகவும், நமக்கு தெரிவிக்காத வகையில் தரவுகள் திருடப்படுவதாகவும் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியர்களின் ஆண்ட்ராய்டு பயனாளர்களின் ஃபேஸ் அப்பில், “Something went wrong, Please try again” என்றும், ஐஃபோன் பயனாளர்களின் ஃபேஸ் அப்பில் “ApiRequestError error 6 – Operation couldn’t be completed” என்றும் வருகிறது என பலர் ட்விட்டர், ஃபேஸ்ப்புக்கில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் ஃபேஸ் அப் பயனாளர்கள் தங்களது சுயதரவுகள் திருடப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பிரைவசி பாலிசிகளில் குறைபாடுகள் உள்ள ஃபேஸ் அப் செயலியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் வழக்கம் போல், எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், ஒவ்வொரு செயலியையும் பயன்படுத்தும் போது அதன் நோக்கமும், செயலாற்றும் விதங்களையும் அறிந்து பயன்படுத்துங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள்.
எக்காலத்திலும் ஆபாசப்படங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட் உண்டு. இப்போது இந்த Face app போன்ற செயலிகளில் நீங்கள் உருமாற்றம் செய்ய பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு படமும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஓர் புதிய உள்ளீடு. பல வகையான உள்ளீடுகளையும், சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நபர்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து #Deepnude வணிகம் இயங்கும். பின்னாளில் இது மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூட வாய்ப்புண்டு.
எவ்வளவுதான் மிக பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும், பலரும் அதிக நேரம் செலவிடுவது சோஷியல் மீடியாவில்தான் என்றால் அது மிகையல்ல. இதனிடையே சமீபகாலமாக சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகின்றன Face App புகைப்படங்கள்.
எதிர்காலத்தில் ஒருவருடைய முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை இந்த ஃபேஸ் ஆப்பில் உள்ள ஃபில்டர் மூலம் காண்பிக்கப்படுகிறது. இதனை பல்வேறு தரப்பினர் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். அதுதொடர்பான மீம்ஸ்களும் உலவி வருகின்றன.
இந்நிலையில் Face App ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன் ஸ்மார்ட்ஃபோன்களில் முடக்கப்பட்டு உள்ளதாக பலர் ட்விட்டர் வாயிலாக புகார் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர்களிலும் டவுன்லோட் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த Face App பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் சமூக வலைதளவாசிகள் இதனை பொழுதுபோக்கு என்கிற பேரில் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ் அப் செயலி பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட் ஃபோன் கேலரியில் உள்ள புகைப் படங்களைத் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த Wireless Lab என்ற நிறுவனம் வடிவமைத்த செயலிதான் ஃபேஸ் ஆப். இது கடந்த 2017ம் ஆண்டே பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதே இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். தற்போது மீண்டும் இந்த ஃபேஸ் ஆப் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்பிள் ஐ ஸ்டோரில் இலவச செயலிகள் வரிசையில் முதலிடத்திலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் முன்னிலை வகிக்கிறது ஃபேஸ் அப். இருந்தாலும் அச்செயலி மீதான குற்றச்சாட்டு களையப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப செய்தியாளர் ஸ்காட் பட்மேன் என்பவர், ஃபேஸ் அப் நமது அந்தரங்க தரவுகளை திருடுவதாகவும், நமக்கு தெரிவிக்காத வகையில் தரவுகள் திருடப்படுவதாகவும் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியர்களின் ஆண்ட்ராய்டு பயனாளர்களின் ஃபேஸ் அப்பில், “Something went wrong, Please try again” என்றும், ஐஃபோன் பயனாளர்களின் ஃபேஸ் அப்பில் “ApiRequestError error 6 – Operation couldn’t be completed” என்றும் வருகிறது என பலர் ட்விட்டர், ஃபேஸ்ப்புக்கில் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் ஃபேஸ் அப் பயனாளர்கள் தங்களது சுயதரவுகள் திருடப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பிரைவசி பாலிசிகளில் குறைபாடுகள் உள்ள ஃபேஸ் அப் செயலியை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என தொழில்நுட்ப வல்லுநர்கள் வழக்கம் போல், எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், ஒவ்வொரு செயலியையும் பயன்படுத்தும் போது அதன் நோக்கமும், செயலாற்றும் விதங்களையும் அறிந்து பயன்படுத்துங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக