ஞாயிறு, 19 ஜூலை, 2020

மருத்துவர் ஏன் நமது நாக்கை முதலில் பார்க்கிறார்!!

உடம்பு சரி இல்லை என்று மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் உங்கள் நாக்கைதான்  நீட்ட சொல்லி பார்ப்பார். அதற்கு காரணம் உங்கள் நாக்கின் நிறத்தை வைத்தே  உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை அவர்களால் கணிக்க முடியும் என்கின்றனர்.
உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறதாம்.

நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.

உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தமாம்.

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறதாம்.

ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உடலில் நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறதாம்.

நாக்கு காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறதாம்.

உங்கள் நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உள்ளது என்பதை குறிக்கிறதாம்.

நாக்கு நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறதாம்.

kumudam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல