வியாழன், 30 ஜூலை, 2020

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா??

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த பல விஷயங்களில் அறிவியல் காரணமும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என்பது.
பலரும் மொட்டை போடுவது ஓர் குடும்ப வழக்கம் மற்றும் நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகின்றனர். ஆனால் உண்மையில் இதற்கு காரணம் குழந்தை அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் நிறைந்த தண்ணீரில் தான் ஒரு 10 மாதங்கள் இருக்கின்றது. சாதாரணமாகவே தண்ணீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தால் கை ஊறி இருக்கும்.

அப்படி இருக்கும் நிலையில் 10 மாதம் காலம் தண்ணீரிலேயே ஊறிய குழந்தையின் உடல் எந்த அளவுக்கு ஊறி இருக்கும். இதனால் குழந்தையின் உடல் மற்றும் தலையில் கழிவுகள் தேங்கி இருக்கும். உடம்பில் உள்ள கழிவுகளை குளிப்பதன் மூலம் வெளியேறும், ஆனால் தலையில் உள்ள கழிவுகள் முடியின் வேர் கால்கள் வழியாக தான் வெளியேறும்.

எனவே தான் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலும், முன்று வயதிலும் மொட்டை போட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி நாம் செய்வதன் மூலம் முடி வேர் கால்கலின் வழியே தலையில் தேங்கிய கழிவுகள் வெளிவந்து விடும்.

Kumudham


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல