திங்கள், 28 செப்டம்பர், 2020

இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல்


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடகராக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, கன்னடத்தில் பாடத் தொடங்கி விட்டார். சென்னையில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த அவர் இளையராஜாவின் பாவலர் சகோதரர்கள் குழுவில் இணைந்து மேடை கச்சேரிகளில் பாடி வந்தார். பின்னர் இளையராஜா திரைப்பட இசை அமைப்பாளர் ஆனதும் பாலூட்டி வளர்த்த கிளி என்ற படத்தில் "நான் பேச வந்தேன்... சொல்லத்தான் வார்த்தை இல்லை..." என்ற பாடலை முதன் முறையாக பாடினார்.

சனி, 26 செப்டம்பர், 2020

சங்கீதம் கற்காமல் கேள்வி ஞானத்தை வைத்தே பாடல்கள் பாடி அசத்திய எஸ்.பி.பி.

 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கொணடம்பேட்டையில் 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகனாக பிறந்தவர். இவரது இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

சனி, 19 செப்டம்பர், 2020

முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் ரோபோ!

 


ஜப்பானில் பொது இடங்களில்  முகக்கவசமின்றி நடமாடுவோரை  முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தும் புதியவகை ரோபோவொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2020

"அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயசுல கர்ப்பம் ஆயிட்டேன், என் கணவர் கடும் கோபத்தில் இருக்கிறார்"


நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார்.

அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு இடம்பெறும் நிலையில் அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?

 

கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது. அதுவும் கிழக்கு அம்பாறை சங்கமன் கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பலில் தீ பரவியிருக்கின்றது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் K.S. ராஜா!

 

இன்றைக்கு செவிட்டு மெசின் மாதிரி ஹெட் போனை மாட்டிக் கொண்டு பலர் கேட்கும் எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர் களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர் ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல