ஒரு போராளியின் நினைவுக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு போராளியின் நினைவுக் குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5

சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்

எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.

திங்கள், 25 மார்ச், 2013

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4

இந்தியப் பயணமும் தொல்லைகளும்

இந்த நிலையில் அவரிடம் இந்தியா சென்று எப்போது வேறு நாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்வது என்று கேட்டேன். அவர் சொன்னார் இந்தியாவை விட வேறு நாடு இல்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பலர் எம்மைக் கேட்ட கேள்வி நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்பதே. இந்தியா ஒரு போதும் எமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. பிரச்சினையாகத் தான் இருக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நமது பொறுப்பாளர் சொன்னார். நாங்கள் சோசலிசத்தை அணுகிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் தான் பயிற்சி எடுக்கின்றோம். இந்தியாவைத் தளமாகத் தான் பயன்படுத்துகின்றோம் என்று. நான் எனக்குள் நினைத்தேன். சோசலிசத்தை அணுகுகின்ற நாடு என்றால் ரஷ்யாவாகத்தான் இருக்கும் என்று. எனக்குத் தெரியும் இந்தியா சோசலிசத்தை அணுகவில்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாம் சொன்னது என்னவோ, ஆனால் செய்கிறதோ வேறொன்றாக இருந்தது. எனினும் எனது பாதுகாப்பற்ற நிலைமை என்னை இந்தியா போக வைத்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டிற்குப் புலம்பெயரும் எனது பயணம் தயாரான நிலையில் இருந்தது. எனினும் நான் என்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணித்து இந்தியா போக முடிவு செய்தேன்.

செவ்வாய், 19 மார்ச், 2013

ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

1983 இல் 13 இராணுவத்தினரின்கொலையும்மக்கள்போராட்டமும்

1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேரவேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேரவேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத்தாக்கம் ஒரு பெருங்காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்த பட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது.

ஏன்ரெலோவில்சேர்ந்தேன்?

வெள்ளி, 15 மார்ச், 2013

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 2


போராளிஅந்தஸ்துசுமத்தப்பட்டது

எனது விசாரணையின் பின் நான் எனது கிராமத்திற்கு வந்தபோது என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப்பற்றி பலவாறு பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர். மேலும் சிலர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனது கல்லூரியிலும் பலர் தாங்களாகவே பலகதைகளை உருவாக்கி என்னைப்பற்றி ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் பின் எவரும் என்னுடன் பிரச்சினைப்படுவதில்லை. என்னைவிட வயதில் மூத்தவர்களும் என்னை மரியாதையாக நடத்தினார்கள்.

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 1

போராளியின்ரிஷிமூலம்

பாடசாலையில் பயிலும்போதே நான் அரசியலில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். அதற்கு எனது குடும்பத்தின் அரசியல், தொழிற்சங்க ஈடுபாடு முக்கிய காரணங்களாக இருந்தன என்று நினைக்கிறேன். எனது அப்பா அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்த போதிலும் தமிழரசுக்கட்சி வேலைகளிலும் ஈடுபாடு காட்டினார். அதேவேளை எனது கிராமத்திலுள்ள சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற் சங்க வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருடைய மகன் என்ற ரீதியில் சிறுவயதிலிருந்தே நான் அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எனது குடும்பத்தினர் பெரிய குற்றமாகக் கருதவில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல