சனி, 30 ஜனவரி, 2010

ஞாபகமறதியை தீர்க்கும் செல்போன் கதிர்வீச்சு!

செல்போன், செல்போன் கோபுரம் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஆபத்தானது. இது மனிதர்களுக்கு சில வியாதிகளை ஏற்படுத்தும் என்று அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு.

ஆனால் செல்போன் கதிர்களால் ஞாபக மறதி வியாதிக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Alsheimer என்பது ஒரு ஞாபகமறதி வியாதியாகும். வயதானவுடன் தொற்றிக் கொள்ளும் ஞாபகமறதி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

இதற்கு தீர்வு காணும் முயற்சியில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழக அல்சீமர் நோய்த்தடுப்பு மையம் ஆய்வு நடத்தியது. எலிகளில் இந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தி பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

அப்போது எலெக்ட்ரோமேக்னடிக் முறையில் சோதனை செய்யப்பட்டபோது, அந்த கதிர்வீச்சு, ஞாபகமறதி வியாதியை குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறையில் பயன்படுத்தப்பட்ட கதிர்கள் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சில் அதிகம் இருக்கும். எனவே செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஞாபகமறதி வியாதி தாக்க வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Amyloid Beta என்ற வேதிப்பொருள் குறைபாடுதான் Alsheimer ஞாபகமறதிக்கு காரணமாக இருக்கிறது.

செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்கள், மூளைசெல்களை தூண்டுவதால் ஞாபகமறதி பாதிப்பு உடையவர் களுக்கு அல்சீமரில் இருந்து முன்னேற்றம் கிடைக்கிறது.

எலிகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் வீதம் சுமார் 9 மாதங்கள் கதிர்வீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது Alsheimer பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. சித்தம் கலங்காத, நினைவுத்திறன் பாதிப்பு உடையவர்களுக்கு மட்டும் இந்த முறையில் தீர்வு கிடைக்கும். மனிதர்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். பக்க விளைவுகள் பற்றிய விரிவான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

"உண்மையாகவே இது வினோதமாக ஏற்படும் அதிசயிக்கத்தக்க மாற்றம்'' என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல