வெள்ளி, 5 மார்ச், 2010

போதையில் ஆட்டம் போட்ட நடிகைகள்

விடிய விடிய குடித்து விட்டு படு கும்மாளமாக நடிகைகள் சேர்ந்து போட்ட குத்தாட்டமும், கோலாகல பார்ட்டியும் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரிக்க வைத்துள்ளது.




ஆண்களுக்குப் போட்டியாக ரீமாவும், ஸ்ரேயாவும் இந்த பார்ட்டியில் படு ஓவராக குடித்து, பயங்கரமாக குதியாட்டம் போட்டனராம். வார இதழ் ஒன்று இந்தப் பார்ட்டியில் பாட்டிலும், பசங்களுமாக நடிகைகள் போட்ட ஆட்டத்தை படத்துடன் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தங்களின் ஆண் நண்பருடன் அரை குறை ஆடையும் கைகளில் சரக்குமாக நெருக்கியடித்துக் கொண்டு ஆட்டம் போட்டதை செய்தியாக வெளியிட்டிருந்தன சில மாலை பத்திரிகைகள். அவை போதிய கவனம் பெறாத நிலையில்தான், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் இதனை மீண்டும் பெரிய அளவில் வெளியிட்டது.

இந்தப் படங்களில் அரை குறை ஆடைகள், வாய் நிறைய மப்புச் சிரிப்பு, கண்களில் ததும்பி வழியும் போதை, குத்தாட்டம் என்று படு ராவாக இருக்கிறார்கள் ரீமாவும், ஷ்ரியாவும்.

மொத்தம் ஆறு ஆண்களாம், எட்டு பெண்களாம். 14 பேரும் சேர்ந்து விடிய விடிய கூத்தடித்துள்ளனராம்.

மும்பையிலோ வேறு எங்குமோ இந்த கோலாகல கலாச்சார திருவிழா நடைபெறவில்லை. சிங்காரச் சென்னையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில்தான் இந்த குத்தாட்ட சமபந்தி நடந்துள்ளது.

சினிமாக்களில் பக்தியும், பவித்ரமுமாக வரும் நடிகைகள் எல்லாம் குடிபோதையில் போடும் இந்த ரகசிய ஆட்டங்கள் வருத்தமும், வேதனையும் அளிப்பதாக திரையுலகினரில் சிலரே கூறுவதாக இந்த செய்தியை வெளியிட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளது.






Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல