புதன், 17 மார்ச், 2010

பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூகம்

இன்றைய இளம் வயதினர்கள் சிலர், தமது பெற்றோரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொள்ளும் போக்கினையும் அதனால் அவர்கள் பல்வேறு சிக்கல்களிலும் துன்பங்களிலும் சிக்கிக் கொண்டு தாம் துன்பப்படுவதோடு மட்டுமின்றி தமது பெற்றோர்களையும் பல்வேறு துன்பங்களுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆளாக்கிவிடும் நிலை அதிகரித்து வருகின்றதை அன்றாட வாழ்வில் காணக்கூடியதாக உள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் தகவல்களை தேடிப் பெற்றுக் கொள்ளக்கூடிய இயலுமை நவீன உபகரணங்களை கையாளுந்திறன் போன்றவற்றால் பெற்றோர்களை விட இன்றைய இளம் தலைறையினர் சிறந்த அறிவினையும் ஆற்றல்களையும் கொண்டிருப்பதன் விளைவாக தமது பெற்றோர்களை விட தமக்கே உலக அனுபவம் அறிவும் அதிகம் என்ற நினைப்பில் தமது பெற்றோர்களின் வார்த்தைகளை தட்டிக் கழித்தும் மதிக்காதும் செயற்படும் போக்கும் தற்போதைய நிலையில் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாக இன்றைய இளந் தலைமுறையினல் பலர் அதிலும் குறிப்பாக மாணவப் பருவத்தில் உள்ளவர்கள் பல்வேறான தவறான பாதைகளில் சென்று தம்மை பாழாக்கி கொள்ளும் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதனை பலரும் அவதானித்திருக்கக் கூடும். அந்த வகையில் ஆண்களில் பலர் மது, போதைவஸ்து போன்ற பழக்கங்களுக்கு உட்பட்டு சீரழிவினை எதிர்நோக்குவதனையும் இளம் பெண்கள் பலர் பல்வேறு வகையான தூண்டுதல்களுக்கு உட்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய நிலைகளும் பல்வேறு இடங்களில் ஏற்பட்டிருந்ததை பத்திகைகளை படிப்பவர்கள் எவரும் தெந்து கொண்டிருக்க முடியும்.

இவ்வாறான ஒரு போக்கு பரவாலாக நாட்டின் பல பிரதேசங்களிலும் சமூகங்களிலும் நாம் தெளிவாக அவதானிக்கக்கூடிய ஒன்றாக அண்மைக் காலமாக மாறி வருவதனை யாரும் அறிவர். அந்த வகையில் எமது மலையக சமூகத்திலும் கூட இத்தகையதொரு போக்கு வெகு வேகமாக இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

படித்தவர்களோ படிக்காதவர்களோ, தம்மை விட அறிவில் குறைந்தவர்களோ, கூடியவர்களோ எவ்வாறு இருப்பினும் எமது பெற்றோர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்ட வற்றை எமது அறிவுக்கு நிகராக கூற முடியாது.
எனவே எந்தவொரு பெற்றோரும் தமது பிள்ளைகளை நல்ல வழியில் நடத்தவே விருப்பப்படுவர். இதன்போது அவர்கள் கூறும் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றில் உள்ள உண்மையான அன்பையும் கரிசனையினையும் பாசத்தினையும் புரிந்து கொண்டு பிள்ளைகள் நடந்துக்கொள்ள ன்வர வேண்டும்.

இல்லையேல் நாம் துன்பத்தில் சிக்கி தமது பெற்றோர்களையும் பரிதவிக்கவிட நேரிடும்.
இதற்கு நல்ல ஒரு உதாரணமாக அண்மையில் கொட்டகலை பொரஸ்ட்கிக் தோட்டத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம். காளிமுத்து (பிள்ளையை இழந்த தந்தை) நானும் எனது மனைவியும் வேலைக்கு போயிட்டு அந்திக்குத்தான் வீட்டுக்கு வருவோம், காலையில் எங்க முன்னுக்குத்தான் ஸ்கூலுக்கு சின்ன மகளும் அவனும் ஸ்கூல் போவாங்க. அந்திக்கு நாங்க திரும்ப வரும் போது அவர்கள் ஸ்கூல்போயிட்டு வந்துவிட்டதாக கூறுவார்கள். ஆனால் இவர்கள் போனார்களா இல்லையா என்பது கூட எங்களுக்கு தெயாது.

இந் நிலையில் ஒருநாள் தெரிய வந்திச்சி சில நாட்களில் எங்களிடம் ஸ்கூல் போவதாக கூறி விட்டு, இவன் ஸ்கூலுக்கு போயிருக்கவில்லை யென்று அவ்வாறான நாட்களில் நாங்கள் அவனை கண்டித்ததுண்டு.

இந்த சம்பவம் நடந்த அன்று காலையில இவன் புறப்பட்டு இருந்தபோது நாங்கள் வேலைக்கு போயிட்டோம், அதனால் இவன் ஸ்கூல் போனானா போகலியாங்கிறது எங்களுக்கு தெரியாது. ஆனா அன்னைக்கு என்னவோ மனசு உருத்திக்கிட்டே இருந்திச்சி. நான் வேலைக்கு போறதுக்கு மொதல்ல. மரம் வெட்டும் இடத்திற்கு போய், அங்கிருந்த காவல்காரர்கிட்ட மகன் ஏதும் வந்தா விரட்டி அனுப்பிடுங்க என்று சொல்லிட்டுத்தான் போனேன் ஆனால் நான் வேலைக்கு போய் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போன் வருது மகன் மரத்திலிருந்து விழுந்திட்டானு. நான் காலையில போகும்போதே அவனுக்கு சொல்லிட்டுத்தான் போனேன். ஆனா எங்க கிட்ட ஸ்கூலுக் குத்தான் போறேன்னு ஏமாத்திட்டு மரம் வெட்டுற இடத்திற்கு போயிருந்தான். இப்ப ஒரேயடியா எங்க எல்லாத்தையும் ஏமாத்திட்டு போய் சேந்திட்டான் என இறந்துபோன கார்த்திகேசன் எனும் 16 வயது சிறுவனின் தந்தை சோகம் தாளாமல் தளுதளுக்கிறார்.

என்ன நடந்தது...

கார்த்திகேசன் வயது 16 தரம் எட்டில் பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் சம்பவ தினத்தன்று தான் பாடசாலை போவதாக சொல்லிவிட்டு தனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்றவுடன் தோட்டத்தில் மரம் தறிக்கும் இடத்திற்கு தெரியாமல் சென்றிருக்கின்றான். எனினும் இவனது தந்தை காளிமுத்து தன்னிடம் காலையில் ""தனது மகன் விறகுக்கு வந்தால் விரட்டியனுப்பு'' எனச் சொல்லியிருந்ததை மனதில் கொண்டு இங்கிருந்த காவல்காரர் குறித்த மாணவனை வீட்டுக்கு விரட்டி அனுப்பியுள்ளார்.

ஆயினும் கார்த்திகேசன் அவரது முன்னால் போவது போல் போய்விட்டு மீண்டும் அங்கேயே வர, அவ்விடத்தில் வேலை செய்தவர்களும் குறித்த மாணவனை எச்சரித்து வீட்டுக்கு ஏசி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் இதன் பின்னர் கார்த்திகேசன் வீட்டுக்கு போவது போல் போய்விட்டு மீண்டும் அவ்விடத்திற்கு வந்து மரம் வெட்டும்போது சரிந்து விழக்கூடிய பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக உள்ள ஒரு செடியின் மறைவில் நின்றிருக்கிறான். மரம் வெட்டி வீழ்த்தப்பட்டதும் அதில் உள்ள காய்ந்த ஒடி விறகுகளை சேகரிப்பதற்காக.

ஆனால் அவனின் விதியோ வேறு விதமாக அமைந்துவிட்டது. வெட்டப்பட்டு விழத் தயாராக இருந்த மரம், தான் சரிய வேண்டிய பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக சரிந்து விழத் தொடங்கவே அருகில் இருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். ஆனால் இவை எதுவுமே தெரியாமல் எதிர்ப் பக்கமாக சரியத் தொடங்கிய மரந்தான் தனக்கு எமனாக வரப் போகின்றது என்பதும் தெரியா மலேயே இந்த சிறுவன் காய்ந்த விறகுகளுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளான்.

ஆனால் எதிர்ப்புறமாக மிகப் பெரும் பாரத்தோடும் விசையோடும் சாய்ந்த மரமோ, இன்னொரு மரத்தின் மீது சாய்ந்து அம்மரத்தின் கிளையொன்று வந்து சிறுவனின் தலையை பதம் பார்த்தது. ஒரு சிறு சத்தம் கூட எழுப்ப வாய்ப்பின்றி சிறுவன் அந்த இடத்திலேயே மூளை சிதறி பலியானான். இவ்வளவு நடந்தும் எவருக்குமே இது பற்றி தெயவில்லை. இறுதியாக மரத்தை துண்டம் செய்ய வந்தபோதே சிறுவன் உயிரற்று கிடப்பதை அனைவரும் பார்த்திருக்கின்றனர்.

பிறகென்ன குய்யோ முறையோ எல்லோர் வாயிலும் ஓலம், அப்பாவுக்கு தகவல் சென்றது. அம்புலன்ஸ் ஆஸ்பத்திக்கு பறந்தது.
என்ன பிரயோசனம் எல்லாமே முடிந்து போய் விட்டது.

""நல்ல பையன் சார். எந்த வேலை சொன்னாலும் செய்வான் இது ஊரான் வாக்கு மூலம் ""சிவன் நல்ல பையன் ஆனால் அடிக்கடி பாடசாலைக்கு கட் அடித்து விடுவான்'' இது இவனுக்கு கற்பித்த ஆசியர்களின் அபிப்பிராயம்.

""எங்க பேச்சை கேட்டிருக்காட்டியும் இந்த ஊர்காரங்க பேச்சை கேட்டிருந்தாலாவது உயிர் பிழைத்திருப்பான். எம்புள்ளை காலத்து பிள்ளைங்க யார் பேச்சத்தான் கேட்டதுங்க! இது அந்த ஊரின் மூத்த பிரஜை ஒருவன் ஆதங்கம்.

எது எப்படியோ இன்று கார்த்திகேசன் இல்லை. ஆனால் அவன் பெற்றோர்களின் நிலை! அடுத்த மாதம் சம்பளம் கிடைக்காவிட்டால் நிலைமை என்னவாக இருக்கும் என்பது நன்றாக தெந்திருந்தும் கூட அந்த வீட்டில் இன்றுவரை எவருமே வேலைக்குச் செல்ல வில்லை, அவரது தாய் மற்றவர்களிடம் பேசியே பதினாறு நாள் ஆகிறது பாயில் தான் சுருண்டு கிடக்கிறாள்.

நடந்ததை விசாரிக்கக் கூட கஷ்டமாக இருந்தது. அந்தளவிற்கு அந்த குடும்பத்தை கார்த்தி கேசனின் இழப்பு பாதித்திருக்கிறது. ஆனால் இந்த இழப்பு, வேதனை, துன்பம் எதுவுமே கார்த்திகேசனுக்கு தெரியுமா என்பது கடவுளுக்கே வெளிச்சம் இது.

ஒரு காலங்கடந்த சம்பவமாக வாசிப்போருக்கு படலாம், ஆனால் காலங் கடத்திருந்தாலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவங்கள் அவசியமானது என்பதை அனைவரும் புந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இறந்துபோன இந்த கார்த்திகேசனிடமிருந்து ஏதாவதொரு செய்தி இன்றைய தலைமுறையினருக்கு சென்று சேர்ந்தால் சரிதான். இதுவே எமது எதிர்பார்ப்புமாகும்.

குறிஞ்சி குணா

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல