சனி, 6 மார்ச், 2010

பாலுறவில் அவசரம் தேவையா?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம்.

கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந்தாலோ, அல்லது மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண்டாலோ, அது சுவரஸ்யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.

திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப்பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் யோசிக்காமல், மனம் மகிழ ஒரே சிந்தனையில் பாலுறவுப் புணர்ச்சி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

Foreplay எனப்படும் பாலுறவு கொள்வதற்கு முன் மேற்கொள்ளப்படும் கிளர்ச்சி தூண்டல்மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த தூண்டல் நபருக்கு, நபர் வேறுபடும் என்பதோடு, பாலுறவில் இருவரில் யாருக்காவது ஒருவருக்கு நாட்டம் இல்லாதபோது, என்னதான் கிளர்ச்சியைத் தூண்டினாலும் அது சுவாரஸ்யத்தை அளிக்காது.

எனவே பாலுறவுப் புணர்ச்சியின் போது, அவசரத்தை கடைபிடித்தல் தேவையற்றது.தவிர, திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் இருபாலருக்குமே பாலுறவில் நாட்டம் விட்டுப்போவது சகஜம்தான். அதுபோன்ற நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில், அவரவர் சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்போது பாலுறவு வைத்துக் கொள்வதால் மனதில் உற்சாகம் எப்போதும் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல