இதன் மூலம் உலகிலேயே இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட பின்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்ததல் பெண் என்ற பெருமையை ஸ்டெபானியா டெமாயோ (Stefania deMayo) என்ற மேற்படி பெண் பெறுகிறார்.
2008 ஆம் அண்டு இறுதியில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஸ்டெபானியாவுக்கு (29 வயது), குறைந்தது ஒரு வருட காலத்திற்கு கருத்தரிக்கக் கூடாது எனவும் அவ்வாறு மீறி கருத்தத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், ஸ்டெபானியா அறுவைச் சிகிச்சை செய்து சில மாதங்களிலேயே கருத்தரித்தார்.
ஸ்டெபானியாவுக்கு கார் விபத்தில் இறந்த சீன் கிளெக் (Sean Clegg)என்ற 14 வயது சிறுவனின் இருதயமே பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி அபூர்வ பிரசவம் குறித்து ஸ்டெபானியாவின் கணவரான றிச்சர்ட் (Hubby Richard) (35 வயது) விபரிக்கையில், ““அனைத்து பெருமையும் சீன் கிளெக்கிற்கே சேரும்'' என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக