புதன், 12 மே, 2010

ஜப்பானிய பெண்ணின் எவரெஸ்ட் ஏறும் முயற்சி தோல்வி

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை கைவிட்டுப் பாதியில் திரும்பினார் ஒரு ஜப்பானியப் பெண்மணி.

ஜப்பானைச் சேர்ந்த ஐகோ பனாஹாஷி (Eiko Funhashi வயது 70 ), வக்கீலாக பணி புரிகிறார். இவர் உலகிலேயே மிக உயரமான பனிபடர்ந்த இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.

அதற்காக நியூசிலாந்தை சேர்ந்த மார்க்விண்டன் வுட்வார்ட் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

சுமார் 6 ஆயிரம் அடி உயரம் ஏறியவுடன் கடும் குளிர் நிலவியது. மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனவே, எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை அவர் கைவிட்டுப் பாதியில் திரும்பினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் ஜப்பானைச் சேர்ந்த தேம் வாடனபிள் என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இவர் 8,848 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்தார். அப்போது அவருக்கு 63 வயது.

ஆனால் பனாஹாஷி, தனது 70ஆவது வயதில் எவரெஸ்ட் சிகர உச்சியில் ஏறி அதிக வயதில் மலை ஏறிய முதியவர் என்ற உலக சாதனை படைக்க விரும்பினார். இதற்காகத் தற்போது 5ஆவது தடவையாக கடும் முயற்சியில் ஈடுபட்டார்.

பாதியில் திரும்பியதால் அவரது உலக சாதனை கைநழுவியது. பன்ஹாசி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால் அவரால் இன்னமும் அந்தச் சாதனையை எட்ட முடியவில்லை.

பனாஹாசி திருமணம் ஆனவர் அவரது கணவர் அட்டர்னி காஷீ போசி (76). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல