திங்கள், 17 மே, 2010

கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'

 "சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர் விசாரித்ததற்கு, "முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.

பார்வதி அம்மாளிடம் பேசியபோது, "நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.

Thatstamil

Images: Tamilnet
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல