ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இந்துக்கள் செய்ய வேண்டிய கருமங்கள்

* இருது சங்க மனம் : மனைவியின் ருது காலத்தில் கூடும்படி செய்யும் கிரியை.

* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.

* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.

* சீமந்தம் : மூன்றிடத்து வளர்ப்புள்ள பன்றிமுள்ளினால் பிரசவஸ்திரியின் தலைமயிரை வகிர்ந்து செய்யும் கிரியை.

* ஜாதகன்மம் : புத்திர உற்பத்தி காலத்தில் செய்யும் கிரியை.

* உத்தாபனம் : சுத்தமில்லாத வீட்டினின்று சுத்தமான வீட்டின் அறைக்கு குழந்தையைச் சேர்ப்பிக்கச் செய்யும் கிரியை.

* நாமகரணம் : பெயர் வைக்கும் காலத்தில் செய்யும் கிரியை.

* ரவாசம் : குழந்தையுடன் கோவிலுக்குச் செல்லும் கிரியை.

* அன்னப் பிரசாசனம் : குழந்தைக்கு உணவு புசிக்கச் செய்யும் கிரியை.

* பிண்டவர்த்தனம் : குழந்தையின் தேக வளர்ச்சியின் பொருட்டு செய்யும் கிரியை

* செளனம் : ரோமம் வளரச் செய்யும் கிரியை.

* உபநயனம் : சிவனை வணங்குவதற்கு குருமூலமாக செய்யும் கிரியை.

* காண்டோபக்கிரணம் : வேத சாஸ்திரங்களைக் கற்று அறிவதற்கு ஆரம்பிக்கும் கிரியை

* காண்ட மோசனம் : அத்தியனத்தை விடச் செய்யும் கிரியை

* சாமாவர்த்தனம் : பிரம்மசாரி நோன்பை ஒழிக்கச் செய்யும் கிரியை

* விவாகம் : இல்லற வாழ்க்கை நடத்த அக்கினி சாட்சியாக கன்னியைத் திருமணம் செய்யும் காலத்தில் செய்யும் கிரியை.

மேற்குறிப்பிட்ட கிரியைகள் எல்லாம் ஒருமனிதன் புனித பரிபூரணனாக வாழ்வதற்காகவும் இவ்வையகத்தில் வாழும் காலத்தில் அவன் பெயர் நிலைக்கவும், ஆன்மீக ஞான அறிவுடன் வாழ்ந்து வரலாறு படைக்கவும் உதவுவதாகும். இக்கலிகால விஞ்ஞான யுகத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலமென ஒரு மனிதனின் வரலாறு தொடர்கின்றது.

அர்த்தமுள்ள இந்து சமயத்தில் ஆழப் பொதிந்த பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளது- மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. அதற்கு முடியுமானவரை இந்து சமய அறநூல்களையும் ஆன்மீக போதனைகளிலும் ஆலய வழிபாடுகளிலும் மனதை செலுத்தி அவசியம் செய்யவேண்டிய கருமங்களையும் செய்து வருவோமானால் மனித நேயமுள்ள புனிதனாக ஆறறிவு படைத்த மனிதனாக வாழமுடியும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல