திங்கள், 27 டிசம்பர், 2010

பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்

சீனாவில் பொழுதுபோக்கிற்காக நண்பர்களை தூண்டி 40க்கும் மேற்பட்ட கார்கள் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சீனாவில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் டாய் குயில்வென். சிசுவான் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் பொழுதுபோக்கிற்காக கார் திருட்டில் ஈடுபட்டார். இவர் திட்டப்படி, நண்பர்கள் 4 பேர் கார்களை திருடி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட கார்களை இவர்கள் திருடியுள்ளனர்.

இவரது தற்போதைய நண்பர் ஜியாவோ கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை திருடி வந்தார். இந்நிலையில், டாய் மற்றும் இவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொழுபோக்கிற்காக கார்களை திருடியது பின்னர் அதுவே டாய் குயில்வெனுக்கு பழக்கமாகிவிட்டது தெரியவந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல