புதன், 22 டிசம்பர், 2010

ஜோர்தானில் இலங்கைப் பெண் சிறை வைப்பு

ஜோர்தானில் மற்றுமொரு இலங்கை பெண்;, வீடொன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜோர்தனுக்கு சென்ற ஷிரோமி நதிகா என்ற பெண்ணே இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார். மாதாந்தம் 175 ஜோர்தான் டினார்கள் ஊதியமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண் தனது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த பெண் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் வீட்டில் இருந்து தப்பிச் சென்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஜோர்தான் கிளையில் தஞ்சம் அடைந்ததாகவும் அவர்கள் மீண்டும் தன்னை அதே வீட்டுக்கொண்டு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல