வியாழன், 29 மார்ச், 2012

தாய் வெளிநாட்டில், 8 வயது மகளை ஆபாச படம்காட்டி கெடுத்த காமத்தந்தை கைது!

தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம்கெட்ட தந்தை ஒருவர் ராகம - கல்வலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,



ராகம - கல்வலவத்தை பகுதியில் வசிக்கும் இக்குடும்பத்தில் வறுமை காரணமாக தாய் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் புரிய சென்றுள்ளார்.

தாய் தனது 8 வயது மகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டுவிட்டே சென்றுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது போல் 40 வயதுடைய குறித்த தந்தை 8 வயதான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மனிதாபிமானமற்ற முறையில் 8 வயது சிறுமியிடம் அபாச படங்களை காட்டி அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் குறித்த தந்தை.

இந்த சம்வம் தொடர்பில் ராகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது நேற்று (29) செய்துள்ளனர்.

சிறுமி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (30) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல