சனி, 29 செப்டம்பர், 2012

கிராமத்து மணம் கமழும் பரவை முனியம்மா சமையல்

சமையல் செய்வது அனைவருக்கும் கை வந்து விடாது அதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதுபோலத்தான் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், அதை செய்து காட்டுவதும் எல்லோராலும் சிறப்பாக செய்து விட முடியாது. கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் ‘சுவையோ சுவை' நிகழ்ச்சியில் பரவை முனியம்மா வின் ‘கிராமத்து சமையல்' சிறப்பானதாக அமைந்துள்ளது.

சமையல் செய்வது பாரம்பரியம் மிக்க மண் சட்டிகளில்களில்தான். பக்குவமாக வறுத்து அவற்றை அம்மியில் அரைத்து பாட்டி செய்யும் சமையல் பக்குவமே தனிதான். வறுக்கும் போது ஒரு பாட்டு, கறி வேகும் போது ஒரு பாட்டு என கலந்து கட்டி அடிக்கிறார். கண் பார்வைக்கு ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை பொறியல் ஆகட்டும், சளி, ஜலதோசத்திற்கு மருந்தாக சமைத்த இளந்தேங்காய் பொரியல் அற்புதமான சமையல். அம்மாவின் கைமணமும், பாட்டி வைத்தியமும் கலந்த ரசனையான சமையல் அது.

கிராமத்து திருவிழாக்களில் பாட்டுக்களை பாடி தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக்கொண்டிருந்த பரவை முனியம்மா தூள் படத்தின் மூலம் சினிமாவில் காலடி வைத்தார். பின்னர் சன் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் களம் இறங்கி பாரம்பரிய சமையலை கற்றுக்கொடுத்தார். இப்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மதியம் விதம் விதமான கிராமத்து விருந்தினை சமைத்து உணவே மருந்து என்று நிரூபித்து வருகிறார். சமையல் ரசிகர்கள் கொஞ்சம் பரவை முனியம்மாவின் கிராமத்து சமையலையும் பார்த்து ரசிக்கலாமே.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல