வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அமெரிக்காவுடன் சேர்ந்து அல்-கொய்தாவை உருவாக்கியது நாங்கள்தான் -லிபியாவில் அமெரிக்கதூதரை கொன்றது அமெரிக்காதான்

எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக் காவுடன் சேர்ந்து அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியது நாங்கள் தான் என பிரிட்டன் நாடாளு மன்ற உறுப்பினர் ஜார்ஜ் கேல்லொவே தெரிவித்துள்ளார்.

இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கி வருவது அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் தாக்கி உலகையே அச்சுறுத்தியது அல்-கொய்தா. இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளை யும், மேற்கத்திய நாடுகள் தங்களது மிகப் பெரிய எதிரிகளாக கருதும் சோவியத் யூனி யனுக்கு எதிராக தங்களது ஆயுதமாகப் போராட கடந்த 1980ம் ஆண்டு அமெ ரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தான் உருவாக்கியது என்ற அதிர்ச்சித் தக வலை பிரிட்டனின் பிராட்ஃபோர்ட் வெஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூயார்ஜ் கேல்லவோ, யூ டியூப் நிறுவனத் தின் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், அல்-கொய்தாவை நாங் கள் தான் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பி வைத்தோம். அவர்களுக்கான ஆயுதங்க ளையும், நிதி உதவிகளையும் நாங்கள் தான் வழங்கினோம். அவர்களை சுதந்தி ரப் போராட்ட வீரர்கள் என்றும் ஹீரோக் கள் என்றும் அழைத்தோம். அவர்களை உருவாக்கியது மட்டுமல்ல, எங்களது எதிரிகளை அழிப்பதற்கான ஆயுதங் களாக அவர்களை நாங்கள் பயன்படுத்தி னோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், அவர்களுக்கு ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் பயிற்சியளித்ததாக குற் றம் சாட்டியுள்ளார். அவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதற்கு, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இஸ்லாத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அமெரிக்கப் படத்திற்கு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கடந்த செப்டம்பர் 11ம் தேதி லிபி யாவின் பெங்காசி தூதரகத்தில் நடை பெற்ற தாக்குதலில் அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில், அங்கு கூடியிருந்த மக்கள் மீது பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரிட்டனும், அமெரிக்காவும் தங்களது எதிரிகளின் எதிரிகளை நண்ப னாக்கிக் கொள்ளும் கொள்கையைக் கொண்டுள்ளன. இதனால், தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக தங்களது தாக்குதல்களை நடத்தி வரு கின்றனர். அல்-கொய்தா மற்றும் தலிபான் கள் மட்டுமன்றி சர்வதேச அளவிலான அனைத்து தீவிரவாதிகளையும் ஆப்கா னிற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அனுப்பியுள்ளது. அவர்கள் ஆப்கானிஸ்தா னில் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எதிராக ஆட்சி புரியும் சிரியா உள்ளிட்ட எந்த நாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படலாம் என்றார்.

மேலும், லிபியாவின் பெங்காசி தூதரகத் தில் நடைபெற்ற தாக்குதலில் அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார். இதனையடுத்து அமெரிக்கா அனைத்து நாடுகளில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பை பலப் படுத்த உத்தரவிட்டார். லிபியாவில் தூத ரைக் கொன்றவர்கள், அங்கு ஆட்சிமாற் றம் ஏற்படுவதற்காக மக்கள் கிளர்ச்சியை தூண்டுவதற்காக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் அனுப்பி வைக்கப்பட்ட வர்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர கட்டிட தாக்குதல் குறித்து தெரிவித்த அவர், இது திட்டமிடப்பட்ட சதிச் செய லாகும் என்றார். மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அமெரிக்காவில் பயிற்சியளிக்கப்பட்டவர்கள், அவர்க ளுக்கு எவ்வாறு விமானத்தை இயக்க வேண்டும் என்றும், இரட்டைக் கோபுரத் திற்குள் எவ்வாறு நுழைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல