ஞாயிறு, 18 நவம்பர், 2012

‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் இலங்கையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை!

ஈழத்தமிழர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு பதிலாக இலங்கையில் வேறு படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சன் டிவியில் நேற்று மாலை "உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம் ஒளிபரப்பானது. இதற்காக கடந்த ஒரு வார காலமாக முன்னோட்டம் சன் டிவியில் முன்னோட்டம் போட்டனர். இதனைப் பார்த்த யாழ்பாணத்தில் உள்ள தமிழர்கள் நேற்று மாலை இந்த திரைப்படம் பார்க்க ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அதே நேரத்தில் அங்கு உச்சிதனை முகர்ந்தால் படத்திற்குப் பதிலாக வேறு படத்தை ஒளிபரப்பு செய்துள்ளனர். இதனால் படத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்ததாக யாழ்பாணத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில்உள்ள "ஆஸ்க் நெற்வேக்' நிறுவனம் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்குகிறது. உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஒளிபரப்புவதற்கு இலங்கை அரசு தடை விதித்த காரணத்தினால்தான் அங்கு இந்த படத்திற்கு பதிலாக வேறு கேபிள் நிறுவனத்தினர் வேறு படத்தை ஒளிபரப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல