இச்சம்பாஷணையின் இறுதிப் பாகம்
கேள்வி: தங்குமிடம், உணவு ஆகியவற்றை தந்தமைக்கு அப்பால் பிரபாகரன் உங்களுக்கு செய்த வேறு விடயங்கள் என்ன?
பதில்: என்னை அவர் போர் முனைக்கு அனுப்பவில்லை. புலிகள் இயக்கத்தில் என்னை ஒரு விசேட நபராகவே நடத்தினார். 27 வயதில் நான் திருமணம் செய்கின்றமைக்கு அவரால் அனுமதி தரப்பட்டது. புலிகள் இயக்கத்தில் ஏனையோர் 30 வயதில்தான் திருமணம் செய்ய முடியும். எனக்கு ஒரு புதிய வீடும், மோட்டார் சைக்கிளும் கொடுத்தார்.
கேள்வி: நீங்கள் சொல்கின்றமையைப் பார்க்கின்றபோது அவர் அடிக்கடி கொள்கைகளை சுய விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றுகின்ற தலைவர் போல தெரிகின்றதே?
பதில்: நான் அந்த அர்த்தத்தில் எதுவுமே சொல்லவில்லை. இயக்கத்தை சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைகின்றபோது அவர்களுக்கு புதிய வீடு வழங்கப்படும். நானும் திருமணம் செய்தேன். எங்களுக்கும் வீடு கிடைத்தது. ஒரே ஒரு வித்தியாசம். என்னை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தார்.
கேள்வி: அதாவது உங்களை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தமை மூலம் கொள்கையை மாற்றிக் கொண்டார்?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. அவர் எனக்கு அப்பா. அவரில் குறை காண என்னால் முடியாது.
கேள்வி: உங்கள் மனைவியின் பெயர் என்ன?
பதில்: செல்வராணி
கேள்வி: உங்கள் மனைவியும் ஒரு புலிப் போராளி என்றீர்கள். இயக்கத்தில் அவர் வகித்த பங்கு என்ன?
பதில்: புலிகளின் அரசியல் பிரிவைப் பலப்படுத்துகின்றமைக்காக உழைத்தார்.
கேள்வி: இராணுவத்திடம் சரண் அடைகின்ற வரை புலிகள் இயக்கத்துக்காக இருவரும் உழைத்தீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: ஏன் சரண் அடைந்தீர்கள்?
பதில்: நாங்கள் இறக்க விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு குஞ்சு மகன் இருக்கின்றான். அவனுக்கு இப்போது நான்கு வயது. அவனை பலி கொடுக்க நான் விரும்பவில்லை.
கேள்வி: இருவரும் புலி உறுப்பினர்களாக இருந்தும் படையினரிடம் சரண் அடைய அஞ்சவில்லையா?
பதில்: நாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்று நினைத்தோம். நினைத்தபடிதான் நடந்தது.
கேள்வி: உங்கள் மனைவிக்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லையா?
பதில்: எமது பையன் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
கேள்வி: இப்போது எங்கே வசிக்கின்றார்கள்?
பதில்: புதுக்குடியிருப்பில்.
கேள்வி: புனர் வாழ்வைத் தொடர்ந்து என்ன செய்ய உத்தேசித்து உள்ளீர்கள்?
பதில்: நான் முகாமில் தச்சு வேலை பழகுகின்றேன். தச்சுத் தொழிலாளியாக வேலை செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது.
கேள்வி: புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றால் என்ன செய்வீர்கள்?
பதில்: அது சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி: ஒரு வேளை அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் கேள்வி?
பதில்: நான் இப்போது நிறையவே படித்து விட்டேன். மீண்டும் ஒரு போர் எனக்கு தேவை இல்லை. இந்நாட்டில் எம்மால் அமைதியாக வாழ முடியும். எனக்கு மனைவியும், குழந்தையும் இருக்கின்றார்கள். நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றேன். நான் விரைவில் குடும்பத்துடன் மீள் இணைவேனாக இருந்தால் அது எனக்கு மிக பெரிய மன நிறைவைத் தரும்.
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 1
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 2

கேள்வி: தங்குமிடம், உணவு ஆகியவற்றை தந்தமைக்கு அப்பால் பிரபாகரன் உங்களுக்கு செய்த வேறு விடயங்கள் என்ன?
பதில்: என்னை அவர் போர் முனைக்கு அனுப்பவில்லை. புலிகள் இயக்கத்தில் என்னை ஒரு விசேட நபராகவே நடத்தினார். 27 வயதில் நான் திருமணம் செய்கின்றமைக்கு அவரால் அனுமதி தரப்பட்டது. புலிகள் இயக்கத்தில் ஏனையோர் 30 வயதில்தான் திருமணம் செய்ய முடியும். எனக்கு ஒரு புதிய வீடும், மோட்டார் சைக்கிளும் கொடுத்தார்.
கேள்வி: நீங்கள் சொல்கின்றமையைப் பார்க்கின்றபோது அவர் அடிக்கடி கொள்கைகளை சுய விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றுகின்ற தலைவர் போல தெரிகின்றதே?
பதில்: நான் அந்த அர்த்தத்தில் எதுவுமே சொல்லவில்லை. இயக்கத்தை சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைகின்றபோது அவர்களுக்கு புதிய வீடு வழங்கப்படும். நானும் திருமணம் செய்தேன். எங்களுக்கும் வீடு கிடைத்தது. ஒரே ஒரு வித்தியாசம். என்னை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தார்.
கேள்வி: அதாவது உங்களை 27 வயதில் திருமணம் செய்ய அனுமதித்தமை மூலம் கொள்கையை மாற்றிக் கொண்டார்?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. அவர் எனக்கு அப்பா. அவரில் குறை காண என்னால் முடியாது.
கேள்வி: உங்கள் மனைவியின் பெயர் என்ன?
பதில்: செல்வராணி
கேள்வி: உங்கள் மனைவியும் ஒரு புலிப் போராளி என்றீர்கள். இயக்கத்தில் அவர் வகித்த பங்கு என்ன?
பதில்: புலிகளின் அரசியல் பிரிவைப் பலப்படுத்துகின்றமைக்காக உழைத்தார்.
கேள்வி: இராணுவத்திடம் சரண் அடைகின்ற வரை புலிகள் இயக்கத்துக்காக இருவரும் உழைத்தீர்கள்?
பதில்: ஆம்.
கேள்வி: ஏன் சரண் அடைந்தீர்கள்?
பதில்: நாங்கள் இறக்க விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு குஞ்சு மகன் இருக்கின்றான். அவனுக்கு இப்போது நான்கு வயது. அவனை பலி கொடுக்க நான் விரும்பவில்லை.
கேள்வி: இருவரும் புலி உறுப்பினர்களாக இருந்தும் படையினரிடம் சரண் அடைய அஞ்சவில்லையா?
பதில்: நாங்கள் பாதுகாக்கப்படுவோம் என்று நினைத்தோம். நினைத்தபடிதான் நடந்தது.
கேள்வி: உங்கள் மனைவிக்கு புனர்வாழ்வு வழங்கப்படவில்லையா?
பதில்: எமது பையன் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
கேள்வி: இப்போது எங்கே வசிக்கின்றார்கள்?
பதில்: புதுக்குடியிருப்பில்.
கேள்வி: புனர் வாழ்வைத் தொடர்ந்து என்ன செய்ய உத்தேசித்து உள்ளீர்கள்?
பதில்: நான் முகாமில் தச்சு வேலை பழகுகின்றேன். தச்சுத் தொழிலாளியாக வேலை செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது.
கேள்வி: புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றால் என்ன செய்வீர்கள்?
பதில்: அது சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி: ஒரு வேளை அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் கேள்வி?
பதில்: நான் இப்போது நிறையவே படித்து விட்டேன். மீண்டும் ஒரு போர் எனக்கு தேவை இல்லை. இந்நாட்டில் எம்மால் அமைதியாக வாழ முடியும். எனக்கு மனைவியும், குழந்தையும் இருக்கின்றார்கள். நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றேன். நான் விரைவில் குடும்பத்துடன் மீள் இணைவேனாக இருந்தால் அது எனக்கு மிக பெரிய மன நிறைவைத் தரும்.
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 1
வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 2




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக