சனி, 30 மார்ச், 2013

ஃபேஸ் புக் மூலம் அறிமுகமான பெண்ணை மயக்கி கறபழித்து மிரட்டிய வாலிபன் கைது!

ஃபேஸ் புக் மூலம் கிடைக்கும் தொடர்புகள் தொந்தரவையே அதிகம் தருகிறது என்று பல்வேறு செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஆனாலும் இதன் மூலம் நடக்கும் அநியாயங்கள் குறையவில்லை.

சாம்பிளுக்கு அண்மையில் நடந்த சம்பவம் இதோ :மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண், நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் அறிமுகமானார்.

நாளடைவில் அறிமுகம், காதலாக உருவெடுத்தது. தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார்.அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பாணத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார்.
30 facebook-bed-
லாட்ஜில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தார். நிர்வாண நிலையில் தான் படுத்திருப்பதை கற்பழித்த நபர் வீடியோ எடுப்பதை பார்த்த அவர் திடுக்கிட்டார்.தன்னை உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். மறுத்தால், ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என அமே சக்பால் மிரட்டியுள்ளார்.

அவரது பிடியில் இருந்து சாதுர்யமாக பேசி தப்பிவந்த பெண், போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் அமே சக்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குளிர்பாணத்தில் மயக்க மருந்து கலந்து தந்த அவரது தாயார் அபர்ணா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்கள் இருவரையும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல