புரியாத புதிராகவே உள்ளதாக வைத்தியர்கள் வியப்பு; பெற்றோர் கண்ணீர்
உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ள போதிலும் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கிறது..!
திண்டிவனம் :
திண்டிவனத்தில் தனது பெற்றோருடன் வசித்துவரும் இரண்டு மாதக் குழந்தையொன்று திடீர் திடீரென தானாகவே தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால், அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்ட போதிலும், சில நாட்களிலேயே அவை தானாக சரியாகிவிடுவதுடன் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைத்தியர்களே வியப்படைந்திருந்திருக்கும் இக்குழந்தை விவகாரம் குறித்து தெரியவருவதாவது,
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன் – ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டு மாத ஆண் குழந்தை ராகுல்.
ஒருநாள், ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்த போது, ராகுலின் உடம்பில் திடீரென தீப்பிடித்தது. இதன்போது வீடும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஒருவாறு குழந்தையை மீட்ட ராஜேஸ்வரி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தை யின் உடல் இரண்டு முறை தீப்பிடித்து எரிந்தது. இதற்கு, பில்லி சூனியமாக இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் பயமுறுத்தியதையடுத்து, புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கினார். ஆனால், அங்கும் இரண்டு முறை குழந்தைக்கு தீப்பிடித்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று இரவு, திண்டிவனம் அருகே உள்ள கர்ணனின் சொந்த ஊரான டி.பரங்கணியில் தங்கியிருந்தபோதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்ததுடன் வீடும் எரிந்துள்ளது. இதனால், மனமுடைந்த ராஜேஸ்வரி, தற்கொலைக்கு மு யன்ற நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த வைத்தியர் கூறுகையில், ``இரண்டு மாதக் குழந்தைக்கு, நான்கு முறை உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு ஆரோக்கியமாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது, புரியாத புதிராகவே உள்ளது'' என்றார்.
தந்தை கண்ணீர்
குழந்தையின் தந்தை கர்ணன் கூறுகையில், ``ராகுல், பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விபரீதம் இடம்பெற்று வருகிறது. எங்கு கொண்டு சென்றாலும், எங்களை ஊருக்குள் சேர்க்கவே பயப்படுகின்றனர். இதனால், எங்கள் குடும்பத்தினர் மன உளை ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என குழப்பமாக உள்ளது’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக