ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

“சிங்கள கன்னுக்குட்டி.. வந்துட்டியா? வா.. வா..” சிங்கத் தமிழன் சீமான் சிலிர்ப்பு!

“கன்னுக்குட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா…” தமிழகத்தில் ஒரு சிங்கள நடிகையிடம் இப்படி யாராவது கேட்டால் என்னாகும்? சிங்கிள் எலும்புகூட சேதமில்லாமல் போக முடியாதபடி, போட்டுத் தாக்கிவிடுவார்கள், மறத்தமிழர் சீமான் படையணி.

ஒருவேளை கன்னுக்குட்டியை குசலம் விசாரித்தது, சீமானாக இருந்துவிட்டால்? சேச்சே.. அப்படியெல்லாம்கூட நடக்குமா? நடந்திருச்சே ஐயா.. நடந்திருச்சே!

பிரபல சிங்கள நடிகை பூஜா, கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்புக்குதான் இந்த ஸ்பெஷல் வரவு.

(நடிகை அசின், அவுட்டோர் ஷூட்டிங்குக்காக இலங்கை சென்ற காரணத்தால், அவரது படங்களை தமிழகத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சீமான் படையணி, ஒரு சிங்கள நடிகை நடிக்கும் ‘விடியும் முன்’ படத்தை தமிழகத்தில் திரையிட விடுவார்களா? பிச்சுப்புட மாட்டார்களா.. பிச்சு..)

நடிகை பூஜா, ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “கன்னுகுட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா. பிரஸ்மீட்ல தமிழ்லதான் பேசணும். இல்லேன்னா அடி விழும்னு என்னை ஆசையோடு ஆசிர்வாதம் செய்தார் செந்தமிழன் சீமான்” என்று மேடையிலேயே சொல்லி, தனக்கும் சீமானுக்குமான ஃபிரண்ட்ஷிப் இன்னும் ஃபிரஷ்ஷாகவே இருப்பதை உறுதி செய்து ஆனந்தப்பட்டுக் கொண்டார்.

ஆனந்தம் இருக்காதா என்ன? ஏழு ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய ‘சிங்கள – தமிழ்’ நட்பல்லவா?

2006-ம் ஆண்டு சீமான் டைரக்ட் செய்த ‘தம்பி’ (விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மற்றொரு பெயர், தம்பி) படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர், நடிகை பூஜா. ஒருவேளை அந்த நாட்களில் இந்திய நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது, “சிங்களவர்களை போட்டுத் தாக்க வேண்டும்” கொள்கை, அப்போது சஸ்பென்ஷனில் இருந்திருக்கலாம்.

அல்லது, ஒருவேளை பூஜா, சிங்கள நடிகை என்று நம்ம நெசமாலுமே நம்ம செந்தமிழனுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ?

அப்படியும் இருந்திருக்க முடியாது.

காரணம், அதே 2006-ம் ஆண்டு, பூஜா டபுள் ரோலில் நடித்த சிங்களப் படமான ‘அஞ்சலிகா’ இலங்கையில் ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட் ஆகியது.

அஞ்சலிகா, உத்தரா என்ற இரண்டு கேரக்டர்களில் பூஜா நடித்திருக்க, சன்னா பெரேரா ஹீரோவாக நடித்திருந்தார். பிரபல சிங்கள எழுத்தாளர் மகேஷ் ரத்சர எழுதிய கதையை மாலித் பிலியகுருகே ‘அஞ்சலிகா’ என்ற பெயரில் சிங்கள திரைப்படமாக தயாரித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகை பூஜா, ‘அசைமான் பியபானா’, ‘யாஹாலுவோ’, ‘ஸ்வன்ட தெனுன ஜீவிதே’ ஆகிய சிங்களப் படங்களில் நடித்துவிட்டு சென்னை வந்தபோதே, “ஹையா.. கன்னுக்குட்டி வந்தாச்சு” என்று ஆர்ப்பரித்துள்ளார், செந்தமிழன் சீமான்.

இப்போது சிக்கல் என்னவென்றால், நாம் தமிழர் படையணிக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை சந்தேகம் சீமான் மீதா? ஐயகோ, உங்க வாய் வெந்துபோகும்! ராமபிரான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்!!

அப்படியானால் என்ன சந்தேகம்?

“தமிழகத்துக்கு வந்த சிங்கள பக்தர்கள், பெண்கள், குழந்தைகளை எல்லாம் நையப் புடைந்து, நடுநடுங்க வைத்து, துரத்தி துரத்தி அடித்தோம் அல்லவா? தமிழகம் வந்துள்ள நம்ம ‘பூஜா கன்னுக்குட்டி’க்கும் அதே சிருஷை அளிப்பதா?” என்பதே நாம் தமிழர் சீறும் சிங்கங்களின் சீரிய சந்தேகம்!

விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல