சனி, 17 ஆகஸ்ட், 2013

வைஃபைக்கு அடுத்து வைப்பேட்…!

இதுவரை கம்பியில்லா டேட்டா சர்வீஸுக்கு வைஃபை அல்லது வயர்லெஸ் கம்யூனிகேஷன் மூலம் தொடர்பு கொண்ட அத்தனை ஸ்மார்ட் ஃபோன் / கணனி மற்றும் அனைத்து வகை சாதனங்களுக்கும் ஒரே சோதனை அது வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டாலும் ஒரு இடத்தில் வயரால் தான் இணைக்கபட்டிருக்கும் அதுதான் அதற்க்கு தேவையான பவர் எனப்படும் மின்சார சக்திக்காக.

இதற்கிடையில் இப்போது வாஷிங்டன் பல்கலைகழகம் வயர்லெஸ் மாதிரி வைபேட் என்னும் கம்பியில்லா பேட்டரி சர்வீஸ் டெக்னாலஜியை கண்டு பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே நம்மை சுற்றி உள்ள ஆர் எஃப் எனப்படும் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ வேவ்களால் எப்படி வயர்லெஸ் டேட்டா பரிமாற்றம் செய்ய முடிகிறதோ அதே மாதிரி பேட்டரி லெஸ் கூட சாத்தியம் என கண்டுபிடித்திருக்கின்றனர்.

அது மட்டுமின்றி இதன் மூலம் ஒரு சாதனம் முற்றிலும் கம்பியில்லா சேவையில் 100% இயங்க முடியும். அதாவது அந்த் சாதனத்திற்க்கு தேவையான பேட்டரி கூட இதே ஆர் எஃப் அலைகளால் பெற முடியும் என்பதே இதன் ஆரம்பகால ஆராய்ச்சியின் முடிவுகள். இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பில் நம் இந்தியர் ஷ்யாம் என்பவரும் உள்ளார் என்பது அடிசினல் ஹேப்பி நியூஸ்.

அவர் என்ன கூறுகிறார் என்றால் ”நமக்கு தேவையோ இல்லை தேவையில்லையோ நம்மை சுற்றி மொபைல் / ரேடியோ / டிவி அலைகள் இருக்கின்றன அதனால் அதை வைத்து இந்த வையர்லெஸ் டேட்டா மற்றும் பேட்டரிலெஸ் சாதனமும் சாத்தியமே. அது போக 100% மனிதனே இல்லாமல் இந்த சாதனங்கள் இயங்க முடியும் ஏன் என்றால் இதற்க்கு தேவையான பவர் வெளி சோர்ஸில் இருந்து கிடைப்பதால் இதை வைத்து பல சென்சார்கள் செய்து அதுவே இயங்குமாறு இன்ஸ்டால் செய்தால் வேலை மிச்சம்”. இதற்கு மேலும் இதன் வெள்ளை அறிக்கை (White Paper) மூலம் நீங்கள் இன்னமும் அதிகமாய் படித்து தெரிந்து கொள்ள விரும்பினால்.

http://abc.cs.washington.edu/files/comm153-liu.pdf

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல