கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முயற்சி
உலகின் மிகவும் குள்ளமான நபர் தானே என நேபாளத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உரிமை கோரியுள்ளார்.
தலைநகர் காத்மண்டுவின் தென்மேற்கே பெயிரஹவா என்ற பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாஸ்டர் நயு (73 வயது) என்ற மேற்படி நபர், தன்னை உலகின் மிகவும் குள்ளமான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முகமாக காத்மண்ட் நகருக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார்.
மாட்டர் நயுவின் உயரம் 41 சென்ரி மீற்றர் (16 அங்குலம்) ஆகும்.
தான் உலகின் மிகவும் குள்ளமான நபராக உள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாக மாஸ்டர் நயு தெரிவித்துள்ளார்.
அவர் நகர முடியாது சக்கர நாற்காலியே தஞ்சமென வாழ்ந்த போதும், செயற்றிறன்மிக்க ஒருவராக விளங்குவதாகவும் அவர் பயணங்களை மேற்கொண்டு பல தரப்பட்டவர்களையும் சந்தித்து பேசுவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவரது மருமகளான சீமா ஷெயிக் தெரிவித்தார்.
அத்துடன் மாஸ்டர் நயு ரிக் ஷோ வண்டியில் சந்தைக்கு செல்வதை பெரிதும் விரும்புவதாக சீமா கூறினார்.
தற்போது உலகில் நடக்கக்கூடிய வல்லமையைக் கொண்ட குள்ளமான மனிதராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள சந்ரா பஹதூர் டான்சியும் (74 வயது) நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகின் மிகவும் குள்ளமான நகர முடியாத நிலையிலுள்ள நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள தாய்வானைச் சேர்ந்த நபரின் உயரம் 68 சென்ரி மீற்றராகும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக